Skip to main content

கஷ்டத்தில் உதவிய சிம்பு... கெட்டவன் இயக்குனர் சிறப்பு பேட்டி!

Published on 12/02/2020 | Edited on 12/02/2020

சிம்புவின் நடிப்பில் இயக்குனர் நந்துவின் இயக்கத்தில் உருவாகி நிதி நெருக்கடியால் வெளியாகாமல் இருக்கும் படம் கெட்டவன். இந்த படத்தை இயக்கிய நந்து தற்போது கே.டி. கண்டி என்று பெயரை மாற்றி, டே நைட் என்றொரு படத்தை இயக்கியுள்ளார். குறைந்த பட்ஜெட்டில் முழுக்க முழுக்க ஆஸ்திரேலியாவில் எடுக்கப்பட்டுள்ள த்ரில்லர் திரைப்படமான இது ஃபிப் 14ஆம் தேதி வெளியாகிறது. இதன் வெளியீட்டை முன்னிட்டு நமக்கு பிரத்யேகமாக பேட்டி அளித்தார் இயக்குனர் என்.கே. கண்டி. 
 

n k kandi

 

 

அப்போது, சிம்புவுக்கும் உங்களுக்கும் சண்டையா, ஏன் அப்படி புரிந்துக்கொள்ளப்பட்டுள்ளது? என்ற கேள்விக்கு பதிலளித்த இயக்குனர் என்.கே. கண்டி, “பலரும் கமண்ட் போடுகிறார்கள். ஒரு வீடியோவை பார்த்தால் அது நல்லா இருக்கு, இல்லை என்று கண்டிப்பாக கமண்ட் வரவேண்டும். அப்படி வந்தால்தான் மக்கள் என்னமாதிரி ரியாக்ட் செய்கிறார்கள் என்பது தெரியவரும். நான் பேசிய எந்த வீடியோவிலும் சிம்புவை விட்டுக்கொடுத்ததும் கிடையாது, தவறாக பேசியதும் கிடையாது. நீங்கள் வேண்டுமானாலும் ஒவ்வொரு வீடியோவை பார்த்தீர்கள் என்றால் தெரியும். இதையெல்லாம் தவறாக புரிந்துக்கொண்டு அப்படி கமண்ட் செய்கிறார்கள். அப்படி செய்பவர்கள் ரசிகர்களா? வேறொரு ரசிகராக இருந்துக்கொண்டுஇவர்களை ட்விஸ்ட் பண்ணிவிட வேண்டும் என்று செய்கிறார்களா? என்பது தெரியவில்லை. மிகவும் மோசமான வார்த்தைகளை பயன்படுத்துகிறார்கள். உடல் அங்கத்தில் எவ்வளவோ வெளியே தெரிகின்ற உறுப்புகள் இருக்கின்றன. ஆனால், வெளியே தெரியாத உறுப்புகளை குறிப்பிடுவது கொஞ்சம் வருத்தமாகதான் இருக்கிறது. அப்படி பேசுபவர்கள் வேறொரு வழியில் பிறந்திருப்பார்கள் என்று நினைக்க தோன்றும்” என்று கூறினார்.
 

day night


அப்போது அவருடன் இருந்த டே நைட் படத்தின் ஹீரோ ஆதர்ஷ், “இரண்டு வருடங்களுக்கு முன்பு இயக்குனருக்கு குழந்தை பிறந்தது. அப்போது, அவருடைய மனைவியை மருத்துமனையில் இருந்து அழைத்து வர பணம் இல்லாமல், நகையை அடகு வைக்கும் நிலையில் இருந்தார். நகையை அடகு வைத்து விடலாம் என்ற தருணத்தில் சிம்புதான் அந்த மொத்தை தொகையையும் கட்டினார். சிம்பு பல உதவிகளை மறைமுக செய்திருக்கிறார் என்பதை இயக்குனர் மூலம் தெரிந்துகொண்டேன். அப்படி இவருக்கும் செய்த உதவியை இங்கு சொல்லிக்கொள்கிறேன்” என்று சிம்பு இயக்குனர் என்.கே. கண்டிக்கு செய்த உதவியை தெரிவித்தார். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

தேசிய விருது வென்ற மூத்த இயக்குநர் காலமானார் 

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
pasi movie director durai passed away

தமிழ் சினிமாவில் கதாசிரியர், இயக்குநர் மற்றும் தயாரிப்பாளராக பணியாற்றியவர் துரை. தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி உட்பட மொத்தம் 46 திரைப்படங்களை இயக்கியுள்ளார். இவர் இயக்கத்தில் 1979 ம் ஆண்டு வெளியான பசி திரைப்படம் பெறும் வரவேற்பை பெற்றது. 

ஏழை எளிய மக்களின் வாழ்க்கையை எதார்த்தமாக வெளிப்படுத்தியதாக பாராட்டை பெற்ற இப்படம் இரண்டு தேசிய விருதுகளை வென்றது. மேலும் இரண்டு மாநில விருது உட்பட சில விருதுகளையும் வென்றது.  இப்படம் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார் துரை. மேலும் ரஜினியை வைத்து ஆயிரம் ஜென்மங்கள், கமலை வைத்து நீயா, சிவாஜியை வைத்து துணை உள்ளிட்ட படங்களை இயக்கியுள்ளார். 

கடந்த பல வருடங்களாக சினிமாவிலிருந்து ஓய்வுபெற்றிருக்கும் துரை (84) இன்று உடல்நலக்குறைவால் காலமானார். இவரது மறைவு திரையுலகினர் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதையொட்டி திரைபிரபலங்கள் ரசிகர்கள் என பலரும் சமூக வலைத்தளங்களில் தங்களது இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர். துரைக்கு மனைவி, இரண்டு மகன்கள் மற்றும் ஒரு மகள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

Next Story

“சமூகம் எது மாதிரி இருக்கிறதோ அது மாதிரியான படங்கள் தான் வரும்” - ஜியோ பேபி

Published on 10/04/2024 | Edited on 10/04/2024
joe baby speech at pk rosy film festival

நீலம் பண்பாட்டு மையம் சார்பில் ‘ரோஸி திரைப்பட விழா’ கடந்த  8ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இன்றுடன் நிறைவடையும் இந்த விழாவில் நேற்று இயக்குநர்கள் ஹலிதா ஷமீம், ஜியோ பேபி, தரணி ராஜேந்திரன், பி.எஸ் மித்ரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். மேலும் ரசிகர்களுடன் உரையாடி அவர்களின் கேள்விகளுக்கும் பதிலளித்தனர்.  

அப்போது, ஜியோ பேபி அவர் இயக்கிய  தி கிரேட் இந்தியன் கிச்சன் படம் குறித்து பேசுகையில், “வித்தியாசமான ஜானரில் படமெடுக்க வேண்டும் என்ற எண்ணம் எனக்குள் இருந்து கொண்டே இருக்கும். தி கிரேட் இந்தியன் கிச்சன் படம் நேரடியாக ஓடிடியில் வெளியான படம். முதலில் இப்படம் எல்லா பிரதான ஓடிடி தளங்களிலும் நிராகரிக்கப்பட்டது. சாட்டிலைட் சேனல்களிலும் நிராகரிக்கப்பட்டது. தயாரிப்பாளர்கள் மற்றும் படக்குழுவினர் அனைவரும் நிதி நெருக்கடியில் இருந்தோம். எப்படி வெளிக்கொண்டு வருவதென தெரியவில்லை. யாரும் சப்போர்ட் பண்ணவில்லை. அதன் பிறகு நீ ஸ்ட்ரீம் என்ற புதிய தளம் உதவினார்கள். அதனால்தான் படம் வெளிவந்தது. படம் வந்த பிறகு பெரும்பாலும் பெண்களால்தான் இப்படம் பேசுபொருளானது. சமூக வலைத்தளங்களிலும் விவாதத்தை உருவாக்கியது.  அதன் பிறகு நிராகரிக்கப்பட்டவர்களிடமிருந்து அழைப்புகள் வந்தது. இந்தப் படத்தை நிராகரித்த அனைவர்களும் ஆண்கள் தான். 

joe baby speech at pk rosy film festival

தொடர்ந்து பெண்ணியம் சம்மந்தபட்ட படங்கள்தான் எடுக்க வேண்டும் என்று நினைக்கவில்லை. ஒவ்வொரு படங்களிலும் வித்தியாசம் காட்ட வேண்டும் அவ்வுளவுதான். அதில் பெண்ணியவாதம் மாதிரியான படங்களும் இருக்கும். சமூகம் எது மாதிரி இருக்கிறதோ அது மாதிரியான படங்கள்தான் வரும். அதை நான் பண்ணவில்லையென்றாலும் வேறு யாராவது பண்ணுவார்கள்” என்றார்.