Skip to main content

'பேச்சிலர்' பட இயக்குநருடன் கைகோர்க்கும் கார்த்தி?

Published on 28/01/2022 | Edited on 28/01/2022

 

karthi joining director Sathish Selvakumar new movie

 

மணிரத்னம் இயக்கத்தில் உருவாகிவரும் 'பொன்னியின் செல்வன்' மற்றும் முத்தையா இயக்கத்தில் உருவாக்கி வரும் 'விருமன்' ஆகிய படங்களில்  நடித்து முடித்துள்ள கார்த்தி தற்போது இயக்குநர் மித்ரன் இயக்கும் 'சர்தார்' படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க, ஜி.வி பிரகாஷ் இசையமைக்கிறார். தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் வெளியாக உள்ள இப்படத்தின் படப்பிடிப்பு முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. 

 

இந்நிலையில் நடிகர் கார்த்தி அடுத்த படம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி அடுத்ததாக 'பேச்சிலர்' படத்தை இயக்கிய சதீஸ் செல்வகுமார் இயக்கும் புதிய படத்தில் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. சமீபத்தில் இயக்குநர்  சதீஸ் செல்வகுமார் நடிகர் கார்த்தியை சந்தித்து கதை சொல்லியதாகவும், அவர் கூறிய கதை கார்த்திக்கு பிடித்துள்ளதாகவும் கூறப்படுகிறது. கிட்டத்தட்ட கார்த்தி மற்றும் செல்வகுமார் இணைவது உறுதி என சினிமா வட்டாரங்கள் தெரிவித்து வருகின்றன. விரைவில் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

 

 

சார்ந்த செய்திகள்