Skip to main content

"'மாநாடு' செட்டுல செம ஜாலியா இருக்கப்போறோம்னு நெனச்சேன். ஆனால்.." - கல்யாணி பிரியதர்ஷன் 

Published on 23/06/2021 | Edited on 23/06/2021
hhssabs

 

'ஈஸ்வரன்' படத்தைத் தொடர்ந்து, நடிகர் சிம்பு நடிப்பில் உருவாகிவரும் படம் 'மாநாடு'. வெங்கட் பிரபு இயக்கும் இப்படத்தை சுரேஷ் காமாட்சி தயாரிக்கிறார். நீண்ட இழுபறிக்குப் பிறகு தொடங்கப்பட்ட இப்படத்தின் பணிகள் தற்போது முழுவீச்சில் நடைபெற்றுவருகின்றன. இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் கடந்த நவம்பர் மாதம் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த நிலையில், படத்தின் மோஷன் போஸ்டரும் டீசரும் ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பைப் பெற்றன. இதையடுத்து 'மாநாடு' படத்தில் இடம்பெற்றுள்ள 'மெஹெரசைலா' என்ற பாடலை முதல் பாடலாகப் படக்குழு வெளியிட்டது. 

 

இப்பாடல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்ற நிலையில் இந்தப் பாடல் உருவான விதம் குறித்தும், படப்பிடிப்பு அனுபவங்கள் குறித்தும் இப்பட நாயகி நடிகை கல்யாணி பிரியதர்ஷன் ட்விட்டர் ஸ்பேஸ் தளத்தின் வழியாகப் பகிர்ந்துகொண்டார். அதில்... "'மாநாடு' படத்துல நடிக்க அழைப்பு வந்ததும் செட்டுல செம ஜாலியா இருக்கப்போறோம்னு சந்தோஷமா இருந்துச்சு. ஆனா சிம்பு கூட டான்ஸ் ஆடனுமே அப்படின்னதும் அவருக்கு ஈடு கொடுத்து நம்மளால மேட்ச் பண்ணி ஆட முடியுமான்னு ஒரு டென்ஷனும் இருந்துச்சு. ஆனா ராஜூ சுந்தரம் மாஸ்டர் என்னோட டென்ஷனைப் புரிஞ்சுக்கிட்டு எனக்கு வசதி பண்ணிக் கொடுத்தார். இப்படத்தில் நடித்தது புது அனுபவமாக இருந்தது” என கூறினார்.

 

 

சார்ந்த செய்திகள்