Skip to main content

ஆகாயத்தில் பறந்து பறந்து அடிக்கும் ஜோதிகா 

Published on 05/01/2019 | Edited on 05/01/2019
jyothika

 

 

காற்றின் மொழி படத்தையடுத்து நடிகை ஜோதிகா அடுத்ததாக டிரீம் வாரியர்ஸ் சார்பில் எஸ்.ஆர்.பிரபு தயாரிக்கும் புதிய படத்தில் நடித்து வருகிறார். அறிமுக இயக்குனர் எஸ்.ராஜ் இயக்கிக்கொண்டிருக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. முக்கிய கதாபாத்திரங்களில் பூர்ணிமா பாக்யராஜ், சத்யன், ஹரிஷ் பேரடி, கவிதா பாரதி ஆகியோர் நடிக்கும் இந்த படத்தில் ஜோதிகாவுக்கு ஆக்‌‌ஷன் காட்சிகள் கூட இருக்கிறது  என்று தற்போது தகவல் வெளியாகியுள்ளது. பாலா இயக்கத்தில் வெளியான நாச்சியார் படத்தில் ஜோதிகா ஆக்சன் காட்சிகளில் ஏற்கனவே நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

அரசு பள்ளி டீச்சர் ‘ஜோதிகா’... ராட்சசி ஃபர்ஸ்ட் லுக்...

Published on 31/05/2019 | Edited on 31/05/2019

செக்கச்சிவந்த வானம், காற்றின் மொழி ஆகிய படங்களுக்கு பின்னர் நடிகை ஜோதிகா புதுமுக இயக்குனர் இயக்கத்தில் ராட்சசி என்றொரு படத்தில் நடித்திருக்கிறார்.
 

ratchasi

 

 

தற்போது இந்த படத்தின் ஷூட்டிங் முடிவடைந்து இறுதி கட்ட பணிகள் நடைபெற்று வருகிறது.

 
ஜோதிகா நடித்துள்ள இப்படத்தை இயக்குவது புதுமுக இயக்குனர் கௌதம்ராஜ். தற்போது ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டுள்ளது. 'ராட்சசி' என்று தலைப்பிடப்பட்டுள்ள இந்தப் படத்தின் ட்ரெய்லர், இன்று மே 31 மாலை வெளியிடப்படவுள்ளது.
 

பூர்ணிமா பாக்யராஜ், ஹரிஷ் பெராடி உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்தப் படத்தில், அரசுப் பள்ளி ஆசிரியையாக நடித்துள்ளார் ஜோதிகா. ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. ஷான் ரோல்டன் இசையமைப்பாளராகப் பணிபுரிந்துள்ளார்.
 

கோடைகால விடுமுறை முடிந்து பள்ளிகள் ஜூன் மாதம் திறக்கும் என்பதால் இப்படத்தின் வெளியீட்டை ஜூன் மாத இறுதியில் இருக்கலாம் என்று சொல்லப்படுகிறது.
 

இந்த படத்தை முடித்துவிட்டு, 'ஜாக்பாட்' படத்தில் நடித்து வந்தார் ஜோதிகா. அந்தப் படத்தின் படப்பிடிப்பும் முடிவடைந்து, இறுதிக்கட்டப் பணிகளும் துரிதமாக நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது. தற்போது கார்த்தியுடன் இணைந்து ஜீது ஜோசப் இயக்கும் படத்தில் நடிக்கவுள்ளார் ஜோதிகா என்பது குறிப்பிடத்தக்கது.