காற்றின் மொழி படத்தையடுத்து நடிகை ஜோதிகா அடுத்ததாக டிரீம் வாரியர்ஸ் சார்பில் எஸ்.ஆர்.பிரபு தயாரிக்கும் புதிய படத்தில் நடித்து வருகிறார். அறிமுக இயக்குனர் எஸ்.ராஜ் இயக்கிக்கொண்டிருக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. முக்கிய கதாபாத்திரங்களில் பூர்ணிமா பாக்யராஜ், சத்யன், ஹரிஷ் பேரடி, கவிதா பாரதி ஆகியோர் நடிக்கும் இந்த படத்தில் ஜோதிகாவுக்கு ஆக்ஷன் காட்சிகள் கூட இருக்கிறது என்று தற்போது தகவல் வெளியாகியுள்ளது. பாலா இயக்கத்தில் வெளியான நாச்சியார் படத்தில் ஜோதிகா ஆக்சன் காட்சிகளில் ஏற்கனவே நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.