Skip to main content

ஒரு போஸ்ட் போட்டா இவ்வளவு கோடியா?

Published on 26/07/2019 | Edited on 26/07/2019

இன்றைய தலைமுறை தங்கள் நேரத்தை அதிகம் செலவழிக்கும் ஒரு விஷயம் என்றால் அது சமூகவலைத்தளங்கள் தான். பொதுமக்கள் தங்களது பொழுதை போக்க ஃபேஸ்புக், ட்விட்டர், இன்ஸ்டாகிராம் போன்ற செயலிகளை பயன்படுத்தி வருகின்றனர். ஆனால் உலக அளவில் பிரபலமாக இருக்கும் செலபிரிட்டிகள் இதன்மூலம் கோடிக்கணக்கில் பணம் சம்பாதித்து வருகின்றனர்.
 

kylie jenner

 

 

அப்படி உலக அளவில் சமூகவலைத்தளங்கள் மூலம் அதிக பணம் சம்பாதிக்கும் 100 பிரபலங்களின் பட்டியலை ஃபோர்ப்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது. அதன்படி பிரபல அமெரிக்க மாடலான கைலி ஜென்னர் இந்த பட்டியலில் முதலிடத்தில் உள்ளார். இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிடும் ஒரு விளம்பர பதிவிற்கு இந்திய மதிப்பில் சுமார் 8.7 கோடி ரூபாய் சம்பாதிக்கிறார்.
 

ஃபோர்ப்ஸ் வெளியிட்டுள்ள இந்த பட்டியலில் இரண்டே இரண்டு இந்தியர்கள் மட்டுமே இடம்பிடித்துள்ளனர். அதில் முதலில் இருப்பவர் பிரியங்கா சோப்ரா. இவர் தனது ஒரு இன்ஸ்டாகிராம் போஸ்ட் மூலம் 1.87 கோடி ரூபாய் சம்பாதிக்கிறார். அதேபோல இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் கோலி ஒரு இன்ஸ்டாகிராம் போஸ்ட் மூலமாக 1.35 கோடி ரூபாய் சம்பாதிக்கிறார். உலகம் முழுவதும் உள்ள பிரபலங்கள் தாங்கள் விளம்பர தூதராக உள்ள நிறுவனங்களின் தயாரிப்புகள் குறித்து பதிவுகளை போடுவதன் மூலம் இந்த வருமானத்தை அவர்கள் பெறுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. 
 

முதல் 25 இடங்களை பிடித்த பிரபலங்களின் பட்டியல் விவரம்:
 

கெய்லி ஜென்னர்
அரியனா கிராண்டே
கிறிஸ்டியானா ரொனால்டோ
கிம் கதார்சியன்
செலினா கோம்ஸ்
டுவைன் ஜான்சன்
பியோனஸ் நோல்ஸ்
டெய்லர் ஸ்விஃப்ட்
நெய்மர் ஜூனியர்
ஜஸ்டின் பைபர்
நிக்கி மினாஜ்
லியோனல் மெஸ்ஸி
கெண்டல் ஜென்னர் 
க்ளோ கர்தாஷியன்
கெவின் ஹார்ட்
டெமி லொவாடோ
டேவிட் பெக்காம்
லெப்ரான் ஜேம்ஸ்
பிரியங்கா சோப்ரா
ரொனால்டோ டி அசிஸ் மொரேரா
கரேத் பேல்
ஸ்லாடன் இப்ராஹிமோவிக் 
விராட் கோலி
லூயிஸ் சுவாரஸ்
கோனார் மெக்ரிகோர்

சார்ந்த செய்திகள்

Next Story

‘இன்ஸ்டாகிராம் காதலன்தான் வேணும்..’ - குழந்தைகளை தவிக்கவிட்டு சென்ற இளம்பெண்

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
 woman who left her children behind and went with her Instagram boyfriend

சேலம் மாவட்டம் தொளசம்பட்டி அருகே உள்ள மானாத்தாள் பகுதியைச் சேர்ந்தவர் கார்த்தி (29). இவருடைய மனைவி கீர்த்தனா(பெயர்மாற்றப்பட்டுள்ளது) (28). இவர்களுக்கு பத்தாண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இந்த தம்பதிக்கு 9 மற்றும் 6 வயதுகளில் இரண்டு ஆண் குழந்தைகள் உள்ளனர். கூலித்தொழிலாளியான கார்த்தி, பந்தல் போடுவது, மூட்டை தூக்குவது என கிடைத்த வேலைகளுக்குச் சென்று வருகிறார். உள்ளூரில் வேலை கிடைக்காதபட்சத்தில் அவ்வப்போது வெளிமாநிலத்திற்கும் வேலை தேடிச்சென்றுவிடுவார்.

கணவர் வீட்டில் இல்லாத சமயங்களில் கீர்த்தனா பெரும்பாலான நேரத்தை செல்போனில் இன்ஸ்டாகிராம், பேஸ்புக் ஆகிய சமூக ஊடகங்களில் நேரத்தைச் செலவிட்டு வந்துள்ளார். குழந்தைகளைக்கூட சரியாக கவனித்துக் கொள்வதில்லையாம். இதனால் கார்த்தி அடிக்கடி கீர்த்தனாவை திட்டியுள்ளார். இது தொடர்பாக அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.

இந்நிலையில் கடந்த மூன்று நாள்களுக்கு முன்பு, குழந்தைகளை வீட்டில் தவிக்க விட்டுவிட்டு, கீர்த்தனா திடீரென்று மாயமானார். வெளியே சென்றிருந்த கார்த்தி, வீட்டிற்கு வந்து பார்த்தபோது, மனைவி காணாமல் போனதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். உறவினர்கள், தோழிகள் விசாரித்துப் பார்த்தும் கீர்த்தனா எங்கு சென்றார் என்ற விவரங்கள் தெரியவில்லை. இதையடுத்து கார்த்தி, தொளசம்பட்டி காவல்நிலையத்தில் மனைவியைக் காணவில்லை என்று புகார் அளித்தார்.

காவல்துறை விசாரணையில், கீர்த்தனா இன்ஸ்டாகிராமில் அதிகமாக நேரத்தைச் செலவிட்டு வந்ததும், அதன் மூலமாக இளைஞர் ஒருவருடன் அறிமுகம் ஏற்பட்டு, அவருடன் நெருக்கமாக பழகி வந்திருப்பதும் தெரிய வந்தது. அந்த இளைஞருடன் கீர்த்தனா சென்றிவிட்டதும், அவர்கள் இருவரும் ஈரோடு மாவட்டம் அந்தியூரில் பதுங்கி இருப்பதும் தெரிய வந்தது. அவர்களை மீட்டு அழைத்து வரும் பணியில் காவல்துறையினர் ஈடுபட்டுள்ளனர். பெற்ற குழந்தைகளை தவிக்க விட்டுவிட்டு இன்ஸ்டாகிராம் காதலனுடன் இளம்பெண் சென்ற சம்பவம் தொளசம்பட்டி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

Next Story

கோலிவுட், டோலிவுட், பாலிவுட் - ஷங்கர் மகள் வரவேற்பு விழாவில் ஒன்றுகூடிய பிரபலங்கள்

Published on 16/04/2024 | Edited on 16/04/2024

 

இயக்குநரின் ஷங்கரின் மூத்த மகள் ஐஸ்வர்யா. இவருக்கும் புதுச்சேரி கிரிக்கெட் அணியின் கேப்டனான ரோஹித்திற்கும் கடந்த 2021ஆம் ஆண்டு திருமணம் நடந்தது. ஆனால் திருமணமான சில மாதங்களில், இருவருக்கும் விவாகரத்து நடந்தது. பின்பு இரண்டாவது முறையாக தருண் கார்த்திகேயன் என்பவருடன் ஐஸ்வர்யாவிற்கு கடந்த பிப்ரவரி மாதம் நிச்சயம் நடந்தது. இந்த நிலையில் ஐஸ்வர்யா ஷங்கர் - தருண் கார்த்திகேயன் தம்பதிக்கு நேற்று சென்னையில் திருமணம் நடைபெற்றது. இதில் முதல்வர் ஸ்டாலின் முதல் ரஜினி, கமல், சூர்யா, விக்ரம் கார்த்தி உள்ளிட்ட பிரபலங்கள் கலந்து கொண்டு வாழ்த்தினர். மேலும் திருமண வரவேற்பு நிகழ்வில் ஏ.ஆர் ரஹ்மான், மோகன்லால், சிரஞ்சீவி, ராம் சரண், வெற்றிமாறன், விஜய் சேதுபதி, லோகேஷ் கனகராஜ், அட்லீ, ரன்வீர் சிங், நெல்சன், அனிருத், ரகுல் ப்ரீத் சிங், காஜல் அகர்வால் உள்ளிட்ட பல திரைப் பிரபலங்கள் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.