Skip to main content

"இவர் இருக்கும் போது நான் டல்லாக இருந்ததில்லை" - கிரிக்கெட் வீரர் நடராஜன் 

Published on 09/03/2022 | Edited on 09/03/2022

 

Indian cricketer Natarajan talk about pugazh

 

குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் தமிழ் மக்களிடையே பிரபலமான புகழ், அஜித்தின் 'வலிமை', அஸ்வினின் 'என்ன சொல்ல போகிறாய்' உள்ளிட்ட படங்களில் நடித்திருந்தார். இதனைத் தொடர்ந்து 'எதற்கும் துணிந்தவன்', 'யானை','ஏஜென்ட் கண்ணாயிரம்' உள்ளிட்ட படங்களில் நடித்து முடித்துள்ளார். 

 

இந்நிலையில் புகழ், இந்திய கிரிக்கெட் வீரர் நடராஜனை நேரில் சந்தித்துள்ளார். இது தொடர்பான புகைப்படத்தை தனது சமூக வலைதளப்பக்கத்தில் பகிர்ந்த கிரிக்கெட் வீரர் நடராஜன்,"புகழ் அண்ணா இருக்கும் பொழுது நான் டல்லாக இருந்தது இல்லை, என்னுடைய அழைப்பை ஏற்று எனது வீட்டிற்கு வந்ததற்கு நன்றி அண்ணா" எனக் குறிப்பிட்டுள்ளார்.

 

 

 

சார்ந்த செய்திகள்