"Couples அ பாத்தாலே வயிறு எரியுது" (வீடியோ)
சார்ந்த செய்திகள்
Next Story
திண்டுக்கல்லில் காதலர் சங்கமம்; காதல் திருமணம் செய்தவர்கள் கௌரவிப்பு!
திண்டுக்கல்லில் காதலர் சங்கமத்தில் காதல் திருமணம் செய்தவர்கள் கௌரவிக்கப்பட்டனர்.
திண்டுக்கல்லில் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் சார்பாக பிப்ரவரி 14 காதலர் தினத்தை முன்னிட்டு காதலர் சங்கமம் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்வு திங்களன்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திண்டுக்கல் மாவட்டக்குழு அலுவலகமான தோழர் ஏ.பாலசுப்ரமணியம் நினைவரங்கத்தில் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் காதல் திருமணம் செய்து கொண்டவர்கள் கௌரவிக்கப்பட்டனர். மாதர் சங்கத்தின் மாவட்டத் தலைவர் சுமதி நிகழ்ச்சிக்கு தலைமை வகித்தார். மாவட்டத் துணைத்தலைவர் வனஜா வரவேற்றார். மாநிலத் தலைவர் எஸ்.வாலண்டினா, மாநிலச் செயலாளர் ராணி ஆகியோர் கலந்து கொண்டு காதல் திருமணம் செய்து கொண்ட தம்பதிகளை பாராட்டி கௌரவித்து சிறப்புரையாற்றினர்.
சிபிஎம் மாவட்டச் செயலாளர் சச்சிதானந்தம், தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்டச் செயலாளர் முத்துச்சாமி ஆகியோர் காதலர்களுக்கு ரோஜா மலர் கொடுத்து காதலர்களை வாழ்த்தி பேசினர். மாதர் சங்கத்தின் மாவட்ட நிர்வாகிகள் பாப்பாத்தி, பாண்டியம்மாள், சுமதி, தங்மணி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். காதல் தம்பதிகள் பாரதி பாலாஜி, பொன்மதி கிருஷ்ணமூர்த்தி, தங்கமணி ராஜாமணி, பாண்டிச்செல்வி பிரேம்குமார், கீர்த்தனா விஷ்ணு, மோகனா அழகுராஜா, ஜெயந்தி பாலமுருகன், தரணி சபரீஸ்வரன், வீரச்சின்னு தேவா, நித்யா வினோத், ராஜேஷ்வரி, கேக் வெட்டி ஒருவருக்கொருவர் இனிப்புகளை பரிமாறிக் கொண்டனர். ஒவ்வொரு காதலரும் தாங்கள் காதலித்த நாட்களில் கிடைத்த இனிமையான தருணங்களை மலரும் நினைவுகளாக உருக்கமுடன் பேசிக் கொண்டனர்.
Next Story
காதலர் தினத்தில் 15 நக்சலைட்டுகளுக்கு திருமணம் செய்து வைத்த போலீசார்
காதலர் தினத்தை முன்னிட்டு சரணடைந்த 15 நக்சலைட்டுகளுக்குக் காவல்துறையினர் திருமணம் செய்த சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவில் சத்தீஸ்கர் மாநிலத்தில் நக்சலைட்டுகளின் ஆதிக்கம் என்பது மிக அதிகம். அடிக்கடி வெடிகுண்டு உள்ளிட்ட தீவிரவாத தாக்குதல்கள் அந்த மாநிலத்தில் சகஜமாக நடைபெறும். குறிப்பாக சுக்மா மாவட்டத்தில் நக்சலைட்டுகளின் ஆதிக்கம் மிக அதிகம். இந்நிலையில் பல்வேறு தீவிரவாத செயல்களில் ஈடுபட்ட அம்மாவட்டத்தைச் சேர்ந்த 60க்கும் மேற்பட்ட நக்சலைட்கள் ஆயுதங்களை ஒப்படைந்து காவல்துறையிடம் சரணடைந்தனர். இந்நிலையில் காதலர் தினத்தை முன்னிட்டு 15 நக்சலைட்டுகளுக்கு அம்மாநில போலீசார் திருமணம் செய்து வைத்துள்ளனர்.
இந்தச் சம்பவம் மற்ற நக்சலைட்டுகள் மத்தியில் தாக்கத்தை ஏற்படுத்தி அவர்களும் திருந்தி, குடும்ப வாழ்வுக்கு வருவார்கள் என்று காவல்துறை தரப்பில் நம்பிக்கை தெரிவிக்கப்பட்டுள்ளது.