Skip to main content

ஜிப்ஸி படத்திற்கு ஒருவழியா சென்சார் சான்றிதழ் வந்துடுச்சு...

Published on 01/11/2019 | Edited on 01/11/2019

குக்கூ, ஜோக்கர் உள்ளிட்ட வெற்றி படங்களை இயக்கியவர் ராஜு முருகன். இவரின் இயக்கத்தில் ஜீவா கதாநாயகனாக நடித்து உருவாகியுள்ள படம் ஜிப்ஸி. புதுமுக நடிகை நடாஷா சிங் இப்படத்தில் அறிமுகமாகியுள்ளார். குக்கூ படத்திற்கு பிறகு இவரின் மூன்றாவது படமான இதற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.
 

jeeva

 

 

இந்த படத்தில் ஜீவா ஒரு நாடோடி, இந்தியா முழுவதும் பயணம் மேற்கொள்கிறான். அப்போது நடக்கும் அரசியல் பிரச்சனைகளால் அவனுக்கு ஏற்படும் பாதிப்புகள், அதை எப்படி சரி செய்கிறான் என்பதே இந்த படத்தின் கதை. மேலும் ஜீவாவின் கதாபாத்திரம் கம்யூனிச சித்தாந்தங்களை கொண்ட ஒருவராக நடித்திருக்கிறார்.

இப்படத்தின் வேலைகள் அனைத்தும் எப்போதோ முடிந்து வெளியாகாமல் தாமதமாகி வருகிறது. அதற்கு காரணம் படத்தில் பேசப்பட்டிருக்கும் அரசியல், அதனால் இந்த படத்தில் பல காட்சிகளை கட் செய்ய வேண்டும் என்று தணிக்கை குழுவில் அறிவித்ததாக சொல்லப்படுகிறது. அதை படக்குழு கேட்கவில்லை என்பதால் தணிக்கை குழு சான்றிதழ் அளிக்க மறுத்துவிட்டது.
 
அதன்பின் ரிவைசிங் கமிட்டிக்கும் சென்றிருக்கிறார்கள். அங்கும் சான்றிதழ் தர மறுத்துள்ளார்கள். எனவே இப்போது தீர்ப்பாயத்திற்கு சென்றுள்ளார்களாம். அங்கு படத்திற்கு தணிக்கை தந்தால்தான் படம் வெளியாகும். இல்லையெனில் நீதிமன்றத்தைத்தான் படக்குழுவினர் அணுக வேண்டும் என்று சொல்லப்பட்டு வந்தது.

இந்நிலையில் இந்த படத்திற்கு ஏ சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

சார்ந்த செய்திகள்

Next Story

மேட் இன் ஜப்பான் குவாலிட்டியா? - ‘ஜப்பான்’ விமர்சனம்!

Published on 11/11/2023 | Edited on 11/11/2023

 

japan movie review

 

பொன்னியின் செல்வன் 1 & 2, சர்தார் போன்ற வெற்றிப் படங்களைக் கொடுத்து வெற்றி நாயகனாக வளர்ந்து வந்து கொண்டிருக்கும் கார்த்தி இந்த முறை கலை படங்கள் மூலம் கவனம் ஈர்க்க ராஜு முருகனுடன் கைகோர்த்து ஒரு அதிரடி கமர்சியல் நிறைந்த ஜப்பான் படத்தோடு இந்த தீபாவளி ரேசில் குதித்துள்ளார். இந்த ரேஸில் அவர் வெற்றி பெற்றாரா, இல்லையா?

 

கோயம்புத்தூரில் மிகப்பெரிய நகை கடை ஒன்றின் சுவரில் துளையிட்டு 200 கோடி மதிப்பிலான நகைகள் கொள்ளையடிக்கப்படுகின்றன. இந்தக் கொள்ளை சம்பவத்தை மிகப்பெரிய கொள்ளைக்காரனான ஜப்பான் கார்த்திதான் அரங்கேற்றுகிறார் என போலீசார் சந்தேகிக்கின்றனர். இதைத் தொடர்ந்து இந்தியா முழுவதும் சுற்றிக்கொண்டு ஆங்காங்கே கொள்ளையடித்துக் கொண்டு ராஜ வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கும் கோடீஸ்வர திருடன் ஜப்பான் கார்த்தியை பிடிக்க போலீசார் விஜய் மில்டன் தலைமையில் தனிப்படை அமைக்கின்றனர். போலீசார் ஒரு பக்கம் ஜப்பான் கார்த்தியை வலை வீசித் தேட, இன்னொரு பக்கம் ஜப்பான் கார்த்தி போலீசாரிடம் இருந்து தன் காதலி அனு இமானுவேலுடன் தப்பித்து ஒவ்வொரு இடமாக புலம்பெயர்ந்து கொண்டே இருக்கிறார். இறுதியில் அந்த நகைக் கடையை கொள்ளையடித்தது யார்? ஜப்பான் கார்த்தி போலீசாரிடம் பிடிபட்டாரா, இல்லையா? என்பதே இந்தப் படத்தின் மீதிக் கதை.

 

தமிழ் சினிமாவில் குக்கூ, ஜோக்கர் போன்ற தரமான படங்களைக் கொடுத்து ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்ற ராஜுமுருகன் இந்த முறை கமர்சியல் பார்முலாவில் ஒரு படத்தை இயக்கி அதன் மூலம் முன்னணி கமர்சியல் இயக்குநர் பட்டியலில் இணைய ஜப்பான் மூலம் முயற்சி செய்திருக்கிறார். இந்த முயற்சியில் அவர் வெற்றி பெற்றாரா, இல்லையா? என்றால் சந்தேகமே!

 

படத்தின் முதல் பாதி யாரும் எதிர்பாராத வகையில் மிகவும் மெதுவாக ஆரம்பித்து போகப் போக கொஞ்சம் கொஞ்சம் வேகம் எடுத்துள்ளது. பின்பு இதை சரிகட்டும் விதமாக இரண்டாம் பாதி அமைந்து சற்றே நமக்கு ஆறுதல் அளித்துள்ளது. படத்தின் நாயகன் ஒரு மிகப்பெரிய திருடன் என்று வெறும் வாய் வார்த்தைகளால் மட்டுமே கூறியிருக்கும் இயக்குநர் அதற்கான எந்த ஒரு செயல்பாட்டையும் படம் முழுவதிலும் ஒரு இடத்தில் கூட காட்டவில்லை. அதுவே படத்திற்கு சற்று மைனஸ் ஆக அமைந்திருக்கிறது. இருந்தும் கார்த்தி இந்த படத்தில் வித்தியாசமாக இழுத்து இழுத்து பேசும் வசன உச்சரிப்பு ஆரம்பத்தில் சற்று அயர்ச்சியைக் கொடுத்தாலும் போகப் போக அதுவே நமக்கு பழகி ரசிக்கும்படி மாறி விடுகிறது. குறிப்பாக படத்தில் ஆங்காங்கே நிகழ் கால அவலங்களை கண்டிக்கும் வகையில் வரும் பஞ்ச் வசனங்கள் சிறப்பாக அமைந்து ரசிக்க வைத்துள்ளனர்.

 

ஒரு அதிரடியான கதையைத் தேர்ந்தெடுத்த இயக்குநர், ஏனோ திரைக்கதையில் அந்த அதிரடியை காட்டாமல் மிகவும் தொய்வாகவும் அதே சமயம் பல்வேறு லாஜிக் மீறல்களோடும் படத்தை உருவாக்கியுள்ளார். படத்தில் நாயகி கதாபாத்திரமும் சொல்லிக் கொள்ளும்படி பெரிதாக அமையவில்லை. அதேபோல் நாயகன் கார்த்திக்கு ஒரு மிகப்பெரிய வியாதி இருப்பதுபோல் காட்டியிருப்பது படத்திற்கு அது எந்த வகையில் உதவி புரிந்தது என்பதையும் புரிந்துகொள்ள முடியவில்லை. இருந்தும் கார்த்தியின் ஒன் மேன் ஷோ மற்றும் அவரது ஒன்லைன் காமெடிகள் படத்தை தனியாளாக தூக்கி நிறுத்த முயற்சி செய்துள்ளது. அதேபோல் தனக்கு என்ன வருமோ அதையே ராஜுமுருகன் செய்திருக்கலாம்.

 

நாயகன் கார்த்தி எப்பொழுதும் போல் தனது உடல் பொருள் ஆவி என அனைத்தையும் கொடுத்து இந்த படத்திலும் நடித்திருக்கிறார். அது ஆரம்பத்தில் சில இடங்களில் நமக்கு எரிச்சல் ஏற்படுத்தி இருந்தாலும், போகப் போக பல இடங்களில் அதுவே பிளஸ் ஆக மாறி நம்மை ரசிக்க வைத்துள்ளது. அதேபோல் அவர் பல்லை கடித்துக்கொண்டு பேசும் பஞ்ச் வசனங்களும் நிகழ்கால அரசியலையும், நாட்டில் நடக்கும் நிகழ்வுகளையும் நையாண்டி செய்திருப்பது படத்திற்கு பலமாக அமைந்திருக்கிறது. வழக்கமான நாயகியாக வந்து செல்கிறார் அனு இமானுவேல். அவருக்கு பெரிதாக வேலை இல்லை. கார்த்தியுடன் படம் முழுவதும் பயணிக்கும்படியான கேரக்டரில் வரும் வாகை சந்திரசேகர் நீண்ட இடைவெளிக்குப் பிறகு தனது அனுபவ நடிப்பின் மூலம் கவனம் பெற்றிருக்கிறார்.

 

கார்த்தியின் நண்பராகவும் மற்றும் வில்லனாகவும் வரும் ஜித்தன் ரமேஷ் அவருக்கான வேலையை செய்திருக்கிறார். தெலுங்கு நடிகர் சுனில் போலீசாக வருகிறார். அவருக்கு கொடுக்கப்பட்ட வேலையை சிறப்பாகவே செய்திருக்கிறார். சில காட்சிகளே வந்தாலும் கே.எஸ். ரவிக்குமார் மனதில் பதிகிறார். மிரட்டல் போலீசாக வரும் விஜய் மில்டன் தனக்கு கொடுக்கப்பட்ட வேலையை நிறைவாக செய்திருக்கிறார். முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் மற்ற நடிகர்களும் அவரவர் வேலையை நிறைவாகவே செய்திருக்கின்றனர். ரவிவர்மன் ஒளிப்பதிவில் படம் பிரமாண்டமாக காட்சியளிக்கிறது. குறிப்பாக ஜப்பான் சம்பந்தப்பட்ட காட்சிகளும் பாடல் காட்சிகளும் மிக பிரமாண்டமாக காட்சிப்படுத்தி மிரட்டி இருக்கிறார். ஜி.வி. பிரகாஷ் இசையில் பாடல்கள் சுமார். பின்னணி இசை ஓகே.

 

தன்னுடைய பலமான காதல், செண்டிமெண்ட், சமூக அக்கறை கொண்ட தரமான படங்கள் மூலம் கவனம் ஈர்த்த இயக்குநர் ராஜுமுருகன் அதை புறந்தள்ளி மூட்டை கட்டிவிட்டு தற்போது ட்ரெண்டில் இருக்கும் அதிரடியான கமர்சியல் ஃபார்முலா கொண்ட சினிமா என்ற கடலில் மூழ்கி முத்து எடுக்க முயற்சி செய்து அதில் தோல்வியை தழுவி இருக்கிறார்.

 

ஜப்பான் - மேட் இன் ஓல்ட் இந்தியா!

 


 

Next Story

இளம் அமைச்சர்; உதயநிதியின் துறை குறித்து நடிகர் ஜீவா

Published on 07/05/2023 | Edited on 07/05/2023

 

Sports Department of Minister Udayanidhi; Jiva's feedback

 

நடிகர் ஜீவா திருவண்ணாமலையில் நடந்த ஜூனியர் தடகள சாம்பியன்ஷிப் போட்டியை துவக்கி வைத்தார். இப்போட்டித் தொடரை தமிழ்நாடு தடகள சங்கம் மற்றும் திருவண்ணாமலை மாவட்ட தடகள சங்கம் இரண்டும் இணைந்து நடத்துகின்றன. இதில், 28 மாநிலங்களைச் சேர்ந்த, ஆயிரத்துக்கும் மேற்பட்ட தடகள வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் பங்கேற்கின்றனர். 

 

இந்நிகழ்விற்குப் பின் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “தமிழ்நாடு விளையாட்டுத்துறை சிறப்பாக உள்ளது. தமிழகத்தில் இருந்து கிரிக்கெட் போன்ற விளையாட்டுகளில் மிகக் குறைவாகத்தான் ஆட்கள் சேருவார்கள். நான் நினைக்கிறேன், இளம் அமைச்சர் அத்துறையை ஏற்று நடத்துகிறபோது உண்மையாகவே சிறப்பாக உள்ளது. இணைய உலகம் வந்ததில் இருந்து இங்கிருக்கும் அனைத்தும் சிறியதாக மாறிவிட்டது. 

 

திறமையானவர்களை கண்டறிவது மிக எளிதான விஷயமாக உள்ளது. சிலர் விளையாட்டு நிகழ்வுகளையும் போட்டிகளையும் ஏற்று நடத்துகிறார்கள். நம்மால் முடிந்த அளவிற்கு நாம் உறுதுணையாக இருக்க முடியும். வரும் ஒலிம்பிக், ஏசியன் போட்டிகளிலும் தமிழகத்தில் இருந்து செல்லும் வீரர்களின் மத்தியில் சிறப்பான ஆட்டம் வெளிப்படும். நிச்சயமாக இந்தியா உலக விளையாட்டு வீரர்களுக்கு மிக முக்கியமான போட்டியாக இருக்கும்.

 

விளையாட்டு வீரர்கள் ஆரோக்கியமாக இருக்க வேண்டும். நன்றாக சாப்பிட வேண்டும். கைப்பேசிகளில் அதிக நேரம் செலவிடக்கூடாது. தற்போதைய இளைஞர்களுக்கு சொல்லும் அளவிற்கு எதுவும் இல்லை. அவர்களே அவர்களுக்கான ஆலோசனைகளை கொடுத்துக் கொள்கிறார்கள். நேர்மறையான சிந்தனையில் அவர்கள் இருக்க வேண்டும். தமிழ்நாட்டையும் இந்தியாவையும் பெரிய அளவில் உலகில் காட்ட வேண்டும்.” என்றார்.