Skip to main content

சமூக நலன் காக்கும் மக்களை கௌரவிக்கும் விழா​

Published on 03/02/2024 | Edited on 03/02/2024
A ceremony to honor people who protect social welfare karthi

கடந்த அக்டோபர் மாதம் நடந்த கார்த்தி 25 விழாவில், கார்த்தி இந்த சமூகத்திற்கு வெவ்வேறு தளங்களில் உதவும் வகையில் ஒரு கோடி ரூபாய் உதவித் தொகை அறிவித்தார். அதில் 25 சமூக செயற்பாட்டாளர்களின் செயல்களைக் கெளரவப்படுத்தும் விதமாக தலா 1 லட்சம் வீதம் 25 லட்சம் அளிக்க திட்டமிடப்பட்டுள்ளது. தங்கள் மேன்மையான சேவைக்காக ஊக்கத்தொகை  பெரும் 25 சமூக செயல்பாட்டாளர்கள் பற்றிய விவரம் மற்றும் செயல்பாடுகள்.

1. அமுதவள்ளி- பழங்குடிகள் செயல்பாட்டாளர்
2. அசினா - திருநங்கைகள் செயல்பாட்டாளர்
3. ரவி- மலைவாழ் மக்களுக்கான உதவியாளர்
4. தெய்வராஜ்- மனநலம் குன்றிய மக்களுக்கான செயல்பாட்டாளர்
5. சுதாகர் - வித்யாலெட்சுமி தம்பதியர் - எளிய மக்களுக்கு உணவளிப்பவர்கள்​
6. செரினா- இருளர் குழந்தைகள்  செயல்பாட்டாளர்
7. சு. பாரதிதாசன்- சுற்றுச்சூழல் செயல்பாட்டாளர்
8 புஹாரி ராஜா - சமூக ஊடக செயல்பாட்டாளர்​
9. நாகராஜ் - கிராமப்புற சுய உதவிக்குழுக்கள் ஒருங்கிணைப்பாளர்
10. அ.ரபேல்ராஜ் - பழங்குடியினருக்காக கல்வி செயல்பாட்டாளர்​
11. டெய்சிராணி- கிராமப்புற சுகாதார செயல்பாட்டாளர்
12. விஜய் (எ) விஜயகாந்த்- விலங்கு நல ஆர்வலர்
13. ஜோஷ்வா -பழங்குடி செயல்பாட்டாளர்​
14. மணிகண்டன் - கிராமப்புற மாணவர்களுக்கான விளையாட்டு பயிற்சியாளர்
15. ஆறுமுகம் - சமூக செயல்பாட்டாளர்
16. சந்துருகுமார் - இரத்ததான ஒருங்கிணைப்பாளர்
17. பாக்கியலெட்சுமி - ஆதரவற்ற பெண்களுக்கான செயல்பாட்டாளர்
18. மஞ்சரி - ஊர் கிணறு புனரமைப்பாளர்​
19 . மதுமிதா கோமதிநாயகம் - மாற்றுத் திறனாளிகள் செயல்பாட்டாளர்
20. தேவி- குழந்தைகள் செயல்பாட்டாளர்
21. உறவுகள் அறக்கட்டளை - அமரர் செயல்பாட்டாளர்கள்​
22. வியாசை தோழர்கள் - கல்வி மற்றும் பேரிட செயல்பாட்டாளர்கள்.
23. ஹரி கிருஷ்ணன் - தமிழ்நாடு தன்னார்வலர்கள் ஒருங்கிணைப்பாளர்
24. V. P. குணசேகரன் - சமூக செயல்பாட்டாளர்.
25. டெரிக் ஹட்சன் - விளையாட்டுத் துறை செயல்பாட்டாளர்

சார்ந்த செய்திகள்