Skip to main content

கதாநாயகனாக அறிமுகமாகும் ‘பிக் பாஸ்’ பிரபலம்!

Published on 02/07/2024 | Edited on 02/07/2024
'Bigg Boss' celebrity to debut as protagonist!

கடந்த 2017ஆம் ஆண்டு தொடங்கி ஆண்டுதோறும் நடைபெற்று வரும் பிக் பாஸ் நிகழ்ச்சி, தனியார் தொலைக்காட்சி ஒன்றில் ஒளிபரப்பப்பட்டு வருகிறது. சமீபத்தில் 7வது சீசன் முடிந்தது. ஒவ்வொரு ஆண்டும் ஒவ்வொரு சீசனாக நடைபெற்று வரும் இந்த நிகழ்ச்சியில் பல்வேறு போட்டியாளர்கள் கலந்து விளையாடி, கடைசி நாளான 100வது நாள் அன்று ஒரே ஒரு போட்டியாளர் வெற்றி பெற்று பரிசுகளைப் பெறுவார். இந்த நிகழ்ச்சியில் பங்கேற்கும் சில போட்டியாளர்கள் வெற்றி பெற முடியாவிட்டாலும் மக்கள் மனதில் வென்று புகழ் பெற்று வருகின்றனர்.

அந்த வகையில், முதல் சீசனில் வெற்றி பெற்ற ஆரவ், கலகத்தலைவன் படத்தை தொடர்ந்து தற்போது அஜித் நடிப்பில் உருவாகும் விடாமுயற்சி படத்தில் நடித்து வருகிறார். அதே போல், மூன்றாவது சீசனில் கலந்து கொண்ட கவின், லிப்ட், டாடா மற்றும் ஸ்டார் படங்களில் நடித்து தமிழ் சினிமாவில் முக்கிய நடிகராக வலம் வருகிறார். பல போட்டியாளர்கள் கலந்து கொண்டு புகழ் பெற்றாலும், ஒன்று இரண்டு போட்டியாளர்கள் மட்டுமே தமிழ் சினிமாவில் ஜொலித்து வருகிறார்கள். அந்த வகையில், பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போட்டியாளர் ஒருவர், தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமாகிறார். 

பிக் பாஸ் சீசன் 5இல் வெற்றி பெற்று தனது நகைச்சுவை தன்மையால் மக்கள் மத்தியில் பிரபலம் அடைந்தவர் ராஜூ ஜெயமோகன். தனியார் தொலைக்காட்சியில் தொகுப்பாளராக பணிபுரிந்து வந்த ராஜூ, தற்போது முதல் முறையாக கதாநாயகனாக அறிமுகமாகிறார். ‘பன் பட்டர் ஜாம்’ எனப் பெயரிடப்பட்டுள்ள இப்படத்தை ‘காலங்களில் அவள் வசந்தம்’ படத்தை இயக்கிய ராகவ் மிர்தாத் இயக்குகிறார். பாவ்யா திரிக்கா, சரண்யா பொன்வண்ணன், தேவதர்ஷினி, சார்லி ஆகியோர் நடிப்பில் உருவாகும் இப்படத்திற்கு இசையமைப்பாளர் நிவாஸ் கே.பிரசன்னா இசையமைக்கிறார்.

சார்ந்த செய்திகள்

Next Story

பிக் பாஸ் நிகழ்ச்சியில் விதிமீறல் - நீதிமன்றம் அதிரடி

Published on 17/04/2024 | Edited on 17/04/2024
big boss mohanlal issue

மலையாள பிக் பாஸ் நிகழ்ச்சியின் 6வது சீசன் தற்போது நடைபெற்று வருகிறது. இதனை மோகன்லால் தொகுத்து வழங்குகிறார். இந்த போட்டியில் வெறுப்பு பேச்சு பேசியதாக குறிப்பிட்டு அதற்கு நடவடிக்கை எடுக்கக் கோரி, மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சகத்துக்கு புகார் அளிக்கப்பட்டுள்ளது. இந்தப் புகாரை பெண்கள், குழந்தைகள் மற்றும் தனிநபர்களின் உரிமைகளைப் பாதுகாக்கும் அமைப்பான திஷா கேரளா’ அமைப்பு கொடுத்துள்ள நிலையில், தன்பாலின ஈர்ப்பாளர்கள் குறித்து போட்டியாளர்கள் தவறாகப் பேசியதாக குற்றம் சாட்டியுள்ளனர். இது சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், அதே நிகழ்ச்சியில் இன்னொரு சர்ச்சை ஏற்படுள்ளது. 

போட்டியாளர்கள் இருவர் அடிதடியில் ஈடுபட்டனர். இது பார்ப்பவர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இதனைக் கண்டித்து வழக்கறிஞர் ஆதர்ஷ் என்பவர், கேரள உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். அவர், “மலையாள பிக் பாஸ் நிகழ்ச்சி ஒளிபரப்பு விதிமுறைகள் மற்றும் மத்திய அரசின் ஆலோசனைகளை மீறி உடல் ரீதியான தாக்குதல் காட்சிகளை ஒளிபரப்பியுள்ளனர். அதனால் நிகழ்ச்சி ஒளிபரப்புவதை உடனடியாக நிறுத்த வேண்டும். சம்பந்தப்பட்ட காட்சிகளை அனைத்து சமூக ஊடகங்கள் மற்றும் ஒடிடி தளங்களில் இருந்து அகற்ற வேண்டும்” என்று கோரியிருந்தார். 

big boss mohanlal issue

இந்த வழக்கை விசாரித்த கேரள உயர் நீதிமன்றம், பிக் பாஸ் நிகழ்ச்சி ஒளிபரப்பு விதிமுறைகள் மற்றும் ஆலோசனைகளை மீறுவதாகக் கண்டறியப்பட்டால், அதை ஒளிபரப்புவதை தவிர்க்க வேண்டும். உடனடியாக இந்தப் பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும் என உத்தரவிட்டது.    

Next Story

இது தான் பிக்பாஸின் புது ஹவுஸா! (படங்கள்)

Published on 03/10/2023 | Edited on 03/10/2023

 

 

 

கடந்த 2017ஆம் ஆண்டு தொடங்கி ஆண்டுதோறும் நடைபெற்று வரும் பிக் பாஸ் நிகழ்ச்சி, தற்போது 7வது சீசனை தொட்டுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் ஏதாவது புதுசாக அறிமுகப்படுத்தும் பிக் பாஸ், இந்த முறை இரண்டு வீடுகளாக அமைத்து பார்வையாளர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளனர். அந்த வீட்டின் பிரத்தியேக புகைப்படங்கள்...