Skip to main content

போதைப் பொருள் வழக்கு ; விசாரணையில் அதிர்ச்சி தகவல் - அடிபடும் நடிகைகள்

Published on 24/06/2023 | Edited on 24/06/2023

 

Ashu reddy , Surekha Vani and other celebrities names producer KP Chowdary  case

 

தெலுங்கு திரைப்படத் தயாரிப்பாளர் கே.பி. சவுத்ரி சமீபத்தில் போதைப் பொருள் வழக்கில் சிக்கினார். கோவாவில் உள்ள நைஜீரிய நபரிடம் இருந்து போதைப் பொருள்களை வாங்கி ஹைதராபாத் கடத்தியுள்ளதாக சைபராபாத் போலீசாரால் கைது செய்யப்பட்டார். இவர் ரஜினியின் கபாலி திரைப்படத்தின் தெலுங்கு பதிப்பை வெளியிட்டவர்.  

 

இவர் கைதாகியிருப்பது டோலிவுட் திரையுலகில் பரபரப்பை கிளப்பியுள்ளது. மேலும் போலீசார் விசாரணையில் பல தகவல்கள் வெளியாகியுள்ளன. இவர் பல்வேறு டோலிவுட் பிரபலங்கள் மற்றும் அரசியல்வாதிகளுக்கு நெருக்கமானவர்களுடன் வாட்ஸ்அப் மற்றும் தொலைப்பேசி உரையாடல்களில் ஈடுபட்டது தெரிய வந்தது.

 

மேலும், நைஜீரியாவை சேர்ந்த சர்வதேச போதைப் பொருள் கடத்தல்காரர்களுடன் அவருக்கு தொடர்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. டோலிவுட் துறையில் உள்ள பிரபலங்களுக்கு போதைப் பொருள் சப்ளை செய்பவராக இவர் பங்கு வகித்தாரா என்பதைத் தீர்மானிப்பதில் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது. 

 

இந்த வழக்கில், இன்ஸ்டாகிராம் மூலம் பிரபலமடைந்த நடிகை ஒருவர் சம்பந்தப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியானது. மேலும் ஹைதராபாத்தில் வசிக்கும் முக்கியமான பிரபலங்கள் பெயர்களும் அடிபடுவதாகக் கூறப்படுகிறது. ஆனால் போலீஸ் தரப்பு இது குறித்து உறுதிப்படுத்தவில்லை. 

 

இந்நிலையில் நடிகை சுரேகா வாணி, ஜோதி மற்றும் அஷூ ரெட்டி ஆகியோரும் இந்த வழக்கில் சம்பந்தப்பட்டுள்ளதாக சமூக வலைத்தளங்களில் கூறப்படுகிறது. மேலும் கைதான தயாரிப்பாளரும் சுரேகா வாணியும் ஒன்றாக இருக்கும் புகைப்படம் வைரலாகி வருகிறது. இதையடுத்து நடிகை அஷூ ரெட்டி, இந்த விவகாரம் குறித்து தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் வன்மையாகக் கண்டிப்பதாகக் குறிப்பிட்டு இது பொய்யான தகவல் என விளக்கமளித்துள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்