Skip to main content

'சினிமாவிலுருந்து ரிட்டையர்டு ஆகலாம்னு பாத்தேன்....ஆனா ரஜினி சார் விடல' - ஏ.ஆர்.ரஹ்மான்

Published on 03/11/2018 | Edited on 03/11/2018
ar rahman

 

 

 

ரஜினி-ஷங்கர் கூட்டணியில் உருவாகியுள்ள 2.0 படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா இன்று நடைபெற்றது அப்போது விழாவில் கலந்துகொண்ட இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் பேசியபோது.... நான் வேலை செய்த ஹீரோக்களிலேயே எனக்கு மிகவும் பிடித்தவர் ரஜினிகாந்த் தான். அவரைப் போன்ற ஒரு சுறுசுறுப்பான மனிதரை நான் பார்த்ததே இல்லை. ஒருமுறை எனக்கு வாழ்க்கையில் எவ்வளவோ சாதித்துவிட்டோம். வயதும்  நாற்பதை தாண்டி விட்டது, இனி இசைத்துறை வேண்டாம், ஓய்வு எடுத்துக் கொள்ளலாம் என்று எண்ணினேன். மேலும் 40 வயது என்பது பெரிய வயது கிடையாது. இருந்தாலும் நான் பதினோரு வயதில் இருந்து வேலை செய்வதால் எனக்கு 40 வயது பெரிதாகப் பட்டது/ அப்போது ஒரு நாள் எனக்கு மிகவும் டயர்டாக இருந்த காரணத்தினால் இப்படத்தின் படப்பிடிப்பு தளத்திற்கு சென்றேன். அப்போது அங்கே நடிகர் ரஜினிகாந்த் அவர்கள் இந்த வயதிலும் கேமராவிற்கு முன்னும் பின்னும் அவர் இருந்ததை கண்டு மிகவும் வியந்து என் ஓய்வு முடிவை மாற்றிக்கொண்டேன். இந்த வயதிலும் நடிகர் ரஜினிகாந்த் இவ்வளவு சுறுசுறுப்பாக தன் முதல் படம் போல் எண்ணி வேலை செய்வதை பார்த்தால் மிகவும் வியப்பாக உள்ளது" என்றார்.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

ஆர்வம் காட்டாத ரஜினி... விழாவை ரத்து செய்த லைகா ! 

Published on 08/01/2019 | Edited on 08/01/2019
2.0

 

 

ரஜினிகாந்த் - ஷங்கர் கூட்டணியில் உருவான '2.0' படம் கடந்த நவம்பர் 29ஆம் தேதி 3டி தொழில்நுட்பத்தில் வெளியாகி உலகம் முழுவதும் நல்ல வரவேற்பை பெற்று வசூல் சாதனை நிகழ்த்தியது. இப்படம் இதுவரை சுமார் ரூ.750 கோடி வசூலைத் தாண்டி இன்னமும் நன்றாக ஓடிக்கொண்டிருக்கிறது. இந்நிலையில் இப்படத்தின் வெற்றி விழாவை பெரிய அளவில் கொண்டாட தயாரிப்பு தரப்பு திட்டமிட்டது. ஆனால் இதில் ரஜினிகாந்த் அதிகம் ஆர்வம் காட்டாததால் ரஜினி இல்லாமல் வெற்றியை எப்படி கொண்டாடுவது என்று முடிவெடுத்து அனைத்து கொண்டாட்டத்தையும் தற்போது ரத்து செய்துள்ளது லைகா நிறுவனம்.

 

 

Next Story

ஒரே வாரத்தில் 500 கோடி வசூல் செய்த 2.0...சாதனை மேல் சாதனை படைப்பு 

Published on 06/12/2018 | Edited on 06/12/2018
2.0

 

 

 

ரஜினிகாந்த் - ஷங்கர் கூட்டணியில் சமீபத்தில் வெளியான 2.0 படம் முதல் வார வசூல் ரூ.500 கோடியை தாண்டியுள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. தமிழ் படங்களிலேயே அதிக வசூல் செய்த படம் என்ற சாதனையை இப்படம் நிகழ்த்தியுள்ளது. மேலும் அதிவேகமாக இச்சாதனையை நிகழ்த்திய படமாகவும் இது அமைந்துள்ளது. இன்னும் அடுத்தடுத்த வாரங்களில் வசூல் ரூ.1000 கோடியை விரைவில் எட்டும் என்று ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையே '2.0' படம் வரும்  2019 மே மாதம் சீனாவில் பிரம்மாண்டமாக 10,000 திரையரங்குகளில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.

 

2.0