Skip to main content

வசமாகச் சிக்கிய வாட்ஸ்அப் சேட் ஆதாரம்... சிக்கலில் இளம் நடிகை!

Published on 22/10/2021 | Edited on 22/10/2021

 

Ananya Panday

 

மும்பையிலிருந்து கோவா நோக்கிச் சென்ற சொகுசுக் கப்பல் ஒன்றில் போதை விருந்து நடந்த விவகாரத்தில் நடிகர் ஷாருக்கானின் மகன் ஆர்யன் கான் உட்பட 20 பேர் கைதுசெய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த விவகாரம் நாடு முழுவதும் பேசுபொருளாகியுள்ள நிலையில், போதைப்பொருள் கட்டுப்பாட்டு பிரிவு அதிகாரிகள் இது தொடர்பான விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர். நடிகர் ஷாருக்கான் மற்றும் நடிகை அனன்யா பாண்டே வீட்டில் நேற்று அதிரடி சோதனை நடத்திய போலீசார், விசாரணைக்கு நேரில் வந்து ஆஜராகுமாறு நடிகை அனன்யா பாண்டேவிற்கு சம்மன் அனுப்பினர். இதையடுத்து, போதைப்பொருள் கட்டுப்பாட்டு பிரிவு அலுவலகத்திற்கு தன்னுடைய தந்தையுடன் வந்து நடிகை அனன்யா பாண்டே நேரில் ஆஜரானார்.

 

ஆர்யன் கானின் வாட்ஸ்அப் சேட்டை ஆதாரமாக வைத்து போலீசார் விசாரணை நடத்திவரும் நிலையில், அந்த வாட்ஸ்அப் சேட்டில் ஆர்யன் கானுடன் போதைப்பொருள் விவகாரத்தில் அனன்யா பாண்டேவிற்கு தொடர்பு இருப்பதற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளன. மேலும், 2018 முதல் 2019வரையிலான காலகட்டத்தில் போதைப்பொருள் விநியோகம் செய்பவர்களின் தொலைபேசி எண்களை மூன்று முறை ஆர்யன் கானுக்கு அவர் கொடுத்து உதவியதும் தெரியவந்துள்ளது. அந்த வாட்ஸ்அப் சேட்டில் போதைப்பொருள் விநியோகம் செய்பவர்கள் யாரவது தெரியுமா என ஆர்யன் கான் கேட்ட கேள்விக்கு, நடிகை அனன்யா பாண்டே தெரியும் எனப் பதிலளித்துள்ளார். இது குறித்து போதைப்பொருள் கட்டுப்பாட்டு பிரிவு அதிகாரிகள் அவரிடம் கேள்வி எழுப்புகையில், தான் கிண்டலுக்காக அப்பதிலைக் கூறியதாக அனன்யா பாண்டே பதிலளித்ததாக என்.சி.பி. வட்டாரங்களில் இருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், அவருக்கு போதைப்பொருள் பயன்படுத்தும் பழக்கம் இருக்கிறதா என அதிகாரிகள் கேட்ட கேள்விக்கு, தான் எந்த விதமான போதைப்பொருளையும் பயன்படுத்தியதில்லை என்றும் அவர் கூறியுள்ளார். அனன்யா பாண்டேவின் லேப்டாப் மற்றும் செல்போன்களை போலீசார் கைப்பற்றியுள்ளனர்.

 

22 வயதே நிரம்பிய இளம் நடிகையான அனன்யா பாண்டேவிற்கு, இந்தப் போதைப்பொருள் விவகாரம் பெரிய சிக்கலைக் கொடுத்துள்ளது. 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

ரிஹானா கலை நிகழ்ச்சியும் ஷாருக்கானின் டான்ஸும் - வைரலாகும் வீடியோ

Published on 02/03/2024 | Edited on 02/03/2024
rihanna sharukhan anandh ambani wedding dance video

இந்தியாவின் மிகப்பெரிய பணக்காரர்களில் ஒருவரான முகேஷ் அம்பானியின் இளைய மகன் ஆனந்த் அம்பானி. இவர் என்கோர் ஹெல்த்கேர் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி விரென் மெர்ச்சண்ட்டின் மகளான ராதிகா மெர்ச்சண்டை திருமணம் செய்யவுள்ளார். இருவருக்கும் கடந்த ஜனவரி 19 ஆம் தேதி நிச்சயம் நடைபெற்ற நிலையில் ஜூலையில் திருமணம் நடக்கவுள்ளதாகக் கூறப்படுகிறது. 

இந்த நிலையில், திருமணத்திற்கு முந்தைய விழா மிகப் பிரம்மாண்டமாக மார்ச் 1 முதல் 3 வரை நடக்கிறது. குஜராத் ஜாம் நகரில் நடக்கும் இந்த நிகழ்ச்சியில் திரைப் பிரபலங்கள், அரசியல் பிரபலங்கள், விளையாட்டுத் துறையைச் சேர்ந்தவர்கள் எனப் பலரும் கலந்து கொண்டுள்ளனர். 

நிகழ்ச்சியின் முதல் நாளான நேற்று இந்திய பிரபலங்களில் சச்சின் டெண்டுல்கர், எம்.எஸ். தோனி, சானியா நேவால் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் பங்கேற்றுள்ளனர். பாலிவுட் பிரபலங்களில் ஷாருக்கான், தீபிகா படுகோன், ரன்வீர் சிங், ஷாருக்கான், சித்தார்த் மல்ஹோத்ரா, கியாரா அத்வானி, அனன்யா பாண்டே உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். மேலும் இயக்குநர் அட்லீயும் தனது குடும்பத்தோடு கலந்து கொண்டுள்ளார். 

இவர்களோடு பிரபல பாப் பாடகி ரிஹானா கலந்துகொண்டுள்ளார். அவரது கலை நிகழ்ச்சியும் நடத்தப்பட்டது. மேலும் இரவு நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டு பாலிவுட் நட்சத்திரங்களோடு நடனமாடினார். ஜான்வி கபூருடன் அவர் நடனமாடிய வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அதேபோல் நிகழ்ச்சியில் ஷாருக்கான் ஆடிய வீடியோவும் வைராகி வருகிறது.  

பாப் பாடகி ரிஹானா கடந்த 2021 ஆம் ஆண்டு புதிய வேளாண் சட்டங்களை ரத்து செய்யக் கோரி டெல்லியில் விவசாயிகள் நடத்திய போராட்டத்தில் அவர்களுக்கு ஆதரவாக குரல் கொடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

Next Story

அனுபவத்தை சொல்லும் ராஜ்குமார் ஹிரானி - ஷாருக்கானின் 'டங்கி'

Published on 06/12/2023 | Edited on 06/12/2023

 

Shah Rukh Khan, Rajkumar Hirani in Dunki second trailer released

 

பிரபல இந்தி இயக்குநர் ராஜ்குமார் ஹிரானி இயக்கத்தில் ஷாருக்கான் நடிப்பில் உருவாகும் படம் 'டங்கி'. இதில் டாப்ஸி, போமன் இரானி மற்றும் விக்கி கௌஷல் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ராஜ்குமார் ஹிரானி மற்றும் கௌரி கான் இணைந்து தயாரிக்கும் இப்படம் கிறிஸ்துமஸை முன்னிட்டு வருகிற 21 ஆம் தேதி வெளியாகிறது. 

 

இப்படத்தின் இரண்டாவது ட்ரைலர் வெளியாகியுள்ளது. இந்த வீடியோ தற்போது வரை 64 மில்லியன் பார்வையாளர்களைக் கடந்து யூட்யூபில் ட்ரெண்டிங்கில் இரண்டாவது இடத்தில் உள்ளது. முன்னோட்டத்தில், பஞ்சாபில் உள்ள ஒரு கிராமத்துக்குச் சென்று நண்பர்கள் மனோ, சுகி, புக்கு, மற்றும் பாலி ஆகியோர் அடங்கிய லண்டனுக்குப் பயணம் செய்ய வேண்டும் என்ற பொதுவான கனவைக் கொண்ட குழுவை ஷாருக்கான் கதாபாத்திரம் சந்திக்கிறது. பின்பு வெளிநாடுகளுக்கு பயணம் மேற்கொள்ளும் நான்கு நண்பர்களைப் பின்தொடர்ந்து இந்தக் கதை செல்கிறது. ஏற்கனவே இப்படத்தின்  ஒரு ட்ரைலரும் இரண்டு பாடல்களும் வெளியாகி வரவேற்பைப் பெற்றது.