Skip to main content

”நான் க்ளாமரா இல்லனு சொல்லி படத்தை யாரும் வாங்க முன்வரல” - அமலா பால் வருத்தம்

Published on 10/08/2022 | Edited on 10/08/2022

 

Amala Paul

 

அனூப் எஸ் பணிக்கர் இயக்கத்தில் அமலா பால், அதுல்யா ரவி உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் கடவார். அமலா பால் தயாரிப்பாளராகவும் அறிமுகமாகியுள்ள இப்படம், வரும் ஆகஸ்ட் 12ஆம் தேதி டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ள நிலையில், படக்குழுவினரின் பத்திரிகையாளர் சந்திப்பு அண்மையில் நடைபெற்றது. 

 

நிகழ்வில் நடிகை அமலா பால் பேசுகையில், “இது 2019ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட படம். அன்றிலிருந்து இன்றுவரை இந்தப் படத்தோடு தொடர்புடைய எல்லோரது வாழ்க்கையிலும் நிறைய மாற்றங்கள் நடந்துள்ளன. குழந்தையை 9 மாதம் சுமப்பதுபோல இந்தக் குழந்தையை 4 ஆண்டுகள் சுமந்தோம். இந்தப் படத்தின் கதாபாத்திரத்திற்காக நானும் இயக்குநரும் நிறைய ஹாஸ்பிட்டலுக்கு சென்று ரிசர்ச் செய்தோம். 

 

இந்த பத்ரா என்ற கதாபாத்திரம் 2019ஆம் ஆண்டு என் வாழ்க்கையில் வந்தது. என் அப்பா 2020ஆம் ஆண்டு இறந்தார். பத்ரா கதாபாத்திரம் என்னை ரொம்பவும் வலிமையான ஆளாக மாற்றியிருப்பதை அந்த நேரத்தில் உணர்ந்தேன். இந்தப் படத்தில் நடிக்கவில்லை என்றால் அந்தத் தருணத்தை எப்படி கடந்திருப்பேன் என்று தெரியவில்லை. அதனால் இந்தப் படத்திற்கும் கதாபாத்திரத்திற்கும் நன்றிக்கடன் பட்டிருக்கிறேன். 

 

படத்தில் நான் க்ளாமராக இல்லை, படம் சீரியஸா இருக்கு, அதனால் இது தியேட்டர் கண்டண்ட் இல்லை என்று நிறைய விநியோகஸ்தர்கள் சொன்னார்கள். ஆனால், ட்ரைலர் வெளியான பிறகு படத்தை திரையரங்கில் வெளியிடலாமே என்று நிறைய பேர் சொன்னார்கள். இது மாதிரியான கதை கொண்ட படங்கள் திரையரங்கில் வெளியாக இந்தப் படம் ஒரு தொடக்கமாக இருக்கும் என்று நம்புகிறேன். இந்தப் படத்தை வெளியிட முன்வந்த ஹாட்ஸ்டார் நிறுவனத்திற்கு நன்றி. படம் ஆகஸ்ட் 12ஆம் தேதி வெளியாகிறது. அனைவருக்கும் படம் பார்த்துவிட்டு உங்கள் கருத்தை சொல்லுங்கள்” எனத் தெரிவித்தார். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பிரம்மண்டமாக நடந்த அமலா பால் வீட்டு நிகழ்வு

Published on 05/04/2024 | Edited on 05/04/2024
amala paul baby showering photos

அமலா பால் தற்போது மலையாளத்தில் கவனம் செலுத்தி வருகிறார். அந்த வகையில் பிரித்திவிராஜ் நடிப்பில் கடந்த மாதம் 28ஆம் தேதி வெளியான ஆடுஜீவிதம் படத்தில் நடித்திருந்தார். ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை படம் பெற்று வருகிறது. இப்படத்தை தவிர்த்து தற்போது இரண்டு மலையாள படங்கள் கைவசம் வைத்துள்ளார். 

இதனிடையே கடந்த 2014ஆம்  ஆண்டு இயக்குநர் ஏ.எல் விஜய்யை காதலித்து திருமணம் செய்து கொண்டார் அமலா பால். பின்பு 2017 ஆம் ஆண்டு கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து செய்தார். 2020 ஆம் ஆண்டு மும்பையை சேர்ந்த பாடகர் பவ்நிந்தர் சிங்குடன், திருமணம் செய்யாமல் சேர்ந்து வாழ்ந்து வந்ததாக தகவல் வெளியானது. மேலும் திருமண கோலத்தில் இருக்கும் புகைப்படங்களும் வெளியாகி இணையதளத்தில் வைரலானது. ஆனால் இதை அமலா பால் அந்த புகைப்படங்கள் வெறும் ஃபோட்டோஷூட் தான் என மறுத்துவிட்டார். 

இந்த சூழலில் கடந்த ஆண்டு அக்டோபர் 26ஆம் தேதி அவரது பிறந்தநாளன்று அவரின் நண்பர் ஜகத் தேசாய் ப்ரபோசலுக்கு சம்மதம் தெரிவித்தார். மேலும் விரைவில் திருமணம் நடக்கவுள்ளதாக தெரிவித்தார். அதன்படி கடந்த ஆண்டு நவம்பர் 5ஆம் தேதி கேரள மாநிலம், கொச்சியில் உள்ள நட்சத்திர ஓட்டல் ஒன்றில் ஜகத் தேசாயை அமலா பால் திருமணம் செய்துகொண்டார். 

திருமணமான நான்கே மாதத்தில் கர்ப்பமாக இருப்பதாக அறிவித்தார் அமலா பால். அப்படி இருக்கும் நிலையில் கூட ஆடுஜீவிதம் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டார். இதையடுத்து கர்ப்பமானதை கணவருடன் பார்டி வைத்து கொண்டாடினார். அப்போது கணவருடன் நடனமாடும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. 

இந்த நிலையில் அமலா பாலுக்கு வளைகாப்பு விழா பிரம்மாண்டமாக நடந்து முடிந்துள்ளது. கேரளாவில் நடந்த இந்த விழாவில் குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் கலந்து கொண்டனர். இது தொடர்பான புகைப்படங்கள் தற்போது வெளியாகியுள்ளது.  

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Amala Paul (@amalapaul)

Next Story

'இறைவனாய் தந்த இறைவியே…' - திருமண கோலத்தில் அமலா பால்

Published on 06/11/2023 | Edited on 06/11/2023

 

 

 

அமலா பால், அவரது கடந்த பிறந்தநாளன்று அவரின் நண்பர் ஜகத் தேசாய் ப்ரபோசலுக்கு சம்மதம் தெரிவித்தார். மேலும் விரைவில் திருமணம் நடக்கவுள்ளதாக தெரிவித்தார். இந்த நிலையில் கேரளா மாநிலம், கொச்சியில் உள்ள நட்சத்திர ஓட்டல் ஒன்றில் ஜகத் தேசாயை அமலா பால் திருமணம் செய்துகொண்டார். நேற்று நடந்த (05.11.2023) இந்த திருமணத்தில் மணமக்களது நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் கலந்து கொண்டனர்.