பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் எந்திரன் படத்தின் இரண்டாம் பாகமாக உருவாகும் 2.0 படத்தின் கிராபிக்ஸ் பணிகள் இன்னமும் முடிவடையாததால் படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிப்போய் இந்த ஆண்டு இறுதிக்குள் ரிலீசாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ரஜினி நாயகனாக நடிக்க, பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார், ஏமி ஜாக்சன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் இப்படத்தில் முதல் பாகத்தில் நடித்த ஐஸ்வர்யா ராய் 2.0 படத்திலும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதாக தகவல் தற்போது வெளியாகியுள்ளது. எந்திரன் படத்தில் ஐஸ்வர்யா ராய்க்கு டப்பிங் பேசிய சவீதா ரெட்டி இதனை உறுதிப்படுத்தி இருக்கிறார். மேலும் இப்படத்தில் ஐஸ்வர்யா ராய் முதல் பாகத்தை தொடர்புபடுத்தும் கதாபாத்திரமாக நடித்ததாகவும் கூறப்படுகிறது. இதனால் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு இன்னும் படி மேலே எகிறியுள்ளது.
இரு உலக அழகிகளோடு வலம் வரும் ரஜினிகாந்த்.... 2.0 அப்டேட்ஸ்...
சார்ந்த செய்திகள்
Next Story
ஆர்வம் காட்டாத ரஜினி... விழாவை ரத்து செய்த லைகா !
ரஜினிகாந்த் - ஷங்கர் கூட்டணியில் உருவான '2.0' படம் கடந்த நவம்பர் 29ஆம் தேதி 3டி தொழில்நுட்பத்தில் வெளியாகி உலகம் முழுவதும் நல்ல வரவேற்பை பெற்று வசூல் சாதனை நிகழ்த்தியது. இப்படம் இதுவரை சுமார் ரூ.750 கோடி வசூலைத் தாண்டி இன்னமும் நன்றாக ஓடிக்கொண்டிருக்கிறது. இந்நிலையில் இப்படத்தின் வெற்றி விழாவை பெரிய அளவில் கொண்டாட தயாரிப்பு தரப்பு திட்டமிட்டது. ஆனால் இதில் ரஜினிகாந்த் அதிகம் ஆர்வம் காட்டாததால் ரஜினி இல்லாமல் வெற்றியை எப்படி கொண்டாடுவது என்று முடிவெடுத்து அனைத்து கொண்டாட்டத்தையும் தற்போது ரத்து செய்துள்ளது லைகா நிறுவனம்.
Next Story
ஒரே வாரத்தில் 500 கோடி வசூல் செய்த 2.0...சாதனை மேல் சாதனை படைப்பு
ரஜினிகாந்த் - ஷங்கர் கூட்டணியில் சமீபத்தில் வெளியான 2.0 படம் முதல் வார வசூல் ரூ.500 கோடியை தாண்டியுள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. தமிழ் படங்களிலேயே அதிக வசூல் செய்த படம் என்ற சாதனையை இப்படம் நிகழ்த்தியுள்ளது. மேலும் அதிவேகமாக இச்சாதனையை நிகழ்த்திய படமாகவும் இது அமைந்துள்ளது. இன்னும் அடுத்தடுத்த வாரங்களில் வசூல் ரூ.1000 கோடியை விரைவில் எட்டும் என்று ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையே '2.0' படம் வரும் 2019 மே மாதம் சீனாவில் பிரம்மாண்டமாக 10,000 திரையரங்குகளில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.