'காற்று வெளியிடை' படத்தையடுத்து தற்போது மீண்டும் இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் 'செக்க சிவந்த வானம்' படத்தில் நடித்து வரும் நடிகை அதிதிராவ் தற்போது ஹிந்தியிலும் கணிசமான படங்களில் நடித்து வருகிறார். இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மானின் தீவிர ரசிகையான இவர் சமீபத்தில் அவர் இசையில் வெளிவந்த 'யுவா' ஹிந்தி பட பாடலை பாடிய வீடியோவை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு மகிழ்ந்தார். இந்நிலையில் தனக்கு பிடித்தமான இயக்குனர் பற்றியும், சினிமா வாய்ப்புகள் பற்றியும் ஒரு பேட்டியில் பேசும்போது...."நான் சிறுவயதிலேயே மணிரத்னம் ரசிகை. அவருடைய 'பம்பாய்' படத்தை பார்த்து மனிஷா கொய்ராலா மாதிரி நடிகையாக வேண்டும் என்று ஆசைப்பட்டேன். இதற்காகவே நடனம் கற்றேன். அதன் பிறகு எனக்கு பிடித்த மணிரத்னம் படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது மகிழ்ச்சியாக இருந்தது. அவர் கீழே குதிக்க சொன்னாலும் யோசிக்காமல் குதிப்பேன். நடிகர், நடிகைகளிடம் நுணுக்கமாக வேலை வாங்குவதில் மணிரத்னம் திறமையானவர். வித்தியாசமான கதைகள், புதிய கதாபாத்திரங்களில் நடிக்க ஆசை இருக்கிறது. சினிமா குடும்ப பின்னணியில் உள்ளவர்கள் இருந்தால் அவர்களின் ஆதரவால் எளிதாக வளர முடியும். அது இல்லாதவர்கள் முன்னேறுவது கஷ்டம். அவர்கள் அதிகமாக உழைக்க வேண்டும். என்னை தூக்கி விட உறவினர்கள் யாரும் சினிமாவில் இல்லை. கஷ்டப்பட்டுத்தான் வாய்ப்புகள் தேடினேன். இன்னும் எனக்கு திருப்புமுனையான கதாபாத்திரம் அமையவில்லை" என்றார்.
அவர் கீழே குதிக்க சொன்னால் யோசிக்காமல் குதிப்பேன்... அதிதிராவ் அதிரடி
சார்ந்த செய்திகள்
Next Story
'அந்த சம்பவத்திற்கு பிறகு பல மாதங்களாக எனக்கு வேலை இல்லை' - #MeToo வில் அதிதிராவ் ஹிடாரி
காற்று வெளியிடை, செக்கச்சிவந்த வானம் ஆகிய படங்களில் நடித்த அதிதிராவ் ஹிடாரி சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் 'மீடூ' குறித்து பேசியபோது...
"நான் சினிமா துறைக்கு வந்தபோது ரொம்ப அப்பாவியாக இருந்தேன். அட்ஜஸ்ட் செய்வது பற்றிய வதந்திகள் வந்தது எல்லாமே உண்மை என்பது அப்போது எனக்கு தெரியாது. அது எல்லாம் நடந்து கொண்டிருந்தது. எனக்கு அப்படி ஒன்றும் மோசமாக நடக்கவில்லை. ஒரே ஒரு சம்பவம் நடந்தது. அதனால் நான் பெரிதாக பாதிக்கப்படவில்லை. இருந்தாலும் இது அல்லது அது என்று எனக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டது. நான் அப்படி ஒன்றும் செய்து பட வாய்ப்பு பெற தேவையில்லை என்று நினைத்து நடையை கட்டிவிட்டேன். அதன்பிறகு எனக்கு பட வாய்ப்புகள் கிடைக்கும் என்ற நம்பிக்கையை இழந்துவிட்டேன். அந்த சம்பவத்திற்கு பிறகு எட்டு மாதங்களாக எனக்கு வேலை இல்லை. பாதிக்கப்பட்டவர்கள் அதுகுறித்து தைரியமாக வெளியே பேச வேண்டும். இல்லாவிட்டால் பணம் வாங்கி இருப்பார் என்றோ, மிரட்டி பணியவைத்து இருப்பார்கள் என்றோதான் வெளியே பேசுவார்கள். நமக்கு எது சரியென்று படுகிறதோ அதை செய்ய வேண்டும். இப்போது ‘மீடு’ இயக்கம் வேறு திசையில் திரும்பி கொண்டிருக்கிறது" என்றார்.
Next Story
'தனுஷ் என்னை இம்ப்ரஸ் பண்ணிட்டார்' - அதிதி ராவ் சிலிர்ப்பு
முன்னணி கதாநாயகர்களில் பிஸியான கதாநாயகனாக வலம் வந்து கொண்டிருக்கும் நடிகர் தனுஷ் ‘எனை நோக்கி பாயும் தோட்டா’ மற்றும் 'மாரி 2' படப்பிடிப்பை முடித்தகையோடு பிரம்மாண்ட சரித்திர படம் ஒன்றை தற்போது இயக்கி வருகிறார். இப்படத்திற்கு 'நான் ருத்ரன்' என்று பெயரிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் இதில் தனுஷுடன் நாகாஜுனா, சரத்குமார், எஸ்.ஜே.சூர்யா, ஸ்ரீகாந்த், அதிதி ராவ், அனு இமானுவேல் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இந்நிலையில் இப்படத்தில் நடித்துள்ள அதிதி ராவ் தனுஷ் இயக்கத்தில் நடிப்பது குறித்து தற்போது வாய் திறந்துள்ளார். அதில்... "முன்பே ஒருமுறை தனுசுடன் நடிக்கும் வாய்ப்பு வந்தது. கால்ஷீட் பிரச்சினையால் அது நிறைவேறவில்லை. இப்போது அவர் இயக்கத்தில் நடிப்பது மகிழ்ச்சியாக உள்ளது. அவர் ஷாட் வைப்பது புதுமையாகவும் வேலை வாங்குவது எளிதாகவும் இருக்கிறது. ஒரு இயக்குனராக என்னை கவர்ந்துவிட்டார்" என்று தனுஷை பாராட்டியுள்ளார்.