Skip to main content

"என் படத்திற்கு மீண்டும் யுவன் கிடைத்தது மகிழ்ச்சி" - நடிகர் கார்த்தி ட்வீட்

Published on 22/12/2021 | Edited on 22/12/2021

 

actor karthi talk about yuvan shankar raja

 

நடிகர் கார்த்தி, முத்தையா இயக்கத்தில் உருவாகிவரும் ‘விருமன்’ படத்தில் கவனம் செலுத்திவருகிறார். இப்படத்தில் கார்த்திக்கு ஜோடியாக அதிதி ஷங்கர் நடிக்கிறார். யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்க, சூர்யாவின் 2டி எண்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் தயாரிக்கிறது. இப்படத்தின் படப்பிடிப்பு மதுரையில் விறுவிறுப்பாக நடைபெற்றுவருகிறது.

 

ad

 

இந்நிலையில், ‘விருமன்’ படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளதாக நடிகர் கார்த்தி தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். அதில், இயக்குநர் முத்தையா மற்றும் ஒளிப்பதிவாளர் செல்வகுமார் ஆகியோரை பாராட்டிய கார்த்தி, ‘விருமன்’ படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகவுள்ள அதிதி ஷங்கருக்கு தனது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். அத்துடன் ‘விருமன்’ படத்தின் தயாரிப்பாளர் சூர்யாவுக்கு நன்றி கூறிய கார்த்தி, “என் படத்திற்கு இசையமைப்பாளராக மீண்டும் யுவன் கிடைத்தது மகிழ்ச்சி” எனத் தெரிவித்துள்ளார்.

 

கார்த்தி நடிப்பில் வெளியான ‘பருத்திவீரன்’, ‘நான் மகான் அல்ல’, ‘பிரியாணி’, ‘பையா’, ‘சுல்தான்’ உள்ளிட்ட படங்களுக்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

‘கோட்’ படத்தின் அடுத்த சர்ப்ரைஸ்; அறிவித்த யுவன் ஷங்கர் ராஜா

Published on 11/03/2024 | Edited on 11/03/2024
vijay sung a song in goat movie

வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்து வரும் படம் ‘தி கிரேட்டஸ்ட் ஆப் ஆல் டைம்’.ச்விஜய்யின் 68வது படமாக உருவாகி வரும் இப்படத்தில், மீனாட்சி சௌத்ரி, சினேகா, பிரசாந்த், பிரபுதேவா, மோகன், ஜெயராம், லைலா, வைபவ், அரவிந்த் ஆகாஷ், விஜய் ராஜ், பிரேம் ஜி என நட்சத்திர பட்டாளங்கள் நடிக்கின்றனர். ஏ.ஜி.எஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் செகண்ட் லுக், கடந்த புத்தாண்டை முன்னிட்டு வெளியாகி வைரலானது. 

இப்படத்தின் படப்பிடிப்பு சென்னை, தாய்லாந்து, பாண்டிச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் நடந்தது. அடுத்தகட்ட படப்பிடிப்பு தற்போது முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. இது குறித்து சமீபத்திய நிகழ்ச்சியில் செய்தியாளர்களிடம் பேசிய வெங்கட் பிரபு, “இந்த மாசத்துக்குள் கிட்டத்தட்ட க்ளைமாக்ஸ் முடிந்து விடும். வெளிநாட்டில் 1 ஷெட்யூல் இருக்கு. அதோட மொத்த படப்பிடிப்பும் முடியுது. நிறைய பாடல்கள் படத்தில் இருக்கு. ஃப்ர்ஸ்ட் சிங்கிள் வெளியாக மே ஆகிடும்” என பல்வேறு விஷயங்களை பகிர்ந்திருந்தார். 

கடந்த வருடம் அக்டோபர் மாதம் பாடலாசிரியர் மற்றும் வசனகர்த்தா மதன் கார்க்கி இந்த படத்தில் இணைந்துள்ளதாக அவரது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்திருந்தார். அந்த பதிவில், "அஸ்கு லஸ்கா, கூகுள் கூகுள், செல்பி புள்ள பாடலுக்கு பிறகு விஜய்யுடன் பணியாற்றுவது மகிழ்ச்சி" என குறிப்பிட்டு படக்குழுவிற்கு நன்றி தெரிவித்தார். அவர் குறிப்பிட்ட பாடல்களில் இரண்டு பாடல்கள் விஜய் பாடியவை. அதே படங்களில் மற்ற பாடல்களையும் எழுதிய மதன் கார்க்கி விஜய் பாடிய பாடல்களை மட்டும் குறிப்பிட்டிருந்ததால், இந்த படத்திலும் விஜய் ஒரு பாட்டு பாடுவதாக யூகிக்கப்பட்டது. 

இந்த நிலையில் பெங்களூருவில் நடந்த இசை நிகழ்ச்சியில் விஜய்,  தி கிரேட்டஸ்ட் ஆப் ஆல் டைம் படத்தில் ஒரு பாடல் பாடியுள்ளதாக யுவன் ஷங்கர் ராஜா தெரிவித்துள்ளார். புதிய கீதை படத்திற்கு பிறகு 20 வருடங்கள் கழித்து மீண்டும் விஜய் படத்திற்கு இசையமைக்கிறார் யுவன் ஷங்கர் ராஜா. இதனால் இப்படத்திற்கு எதிர்பார்ப்பு அதிகரித்துள்ள நிலையில், விஜய் பாடியுள்ளதாக வந்துள்ள அப்டேட் ரசிகர்கள் மத்தியில் ஆவலை தூண்டியுள்ளது. முதல் முறையாக யுவன் இசையில் பாடுகிறார் விஜய் என்பது குறிப்பிடதக்கது. 

Next Story

கார்த்தியுடன் கூட்டணி அமைக்கும் மாரி செல்வராஜ்

Published on 09/03/2024 | Edited on 09/03/2024
mari selvaraj next with karthi

மாமன்னன் படத்தை தொடர்ந்து வாழை என்ற தலைப்பில் ஒரு படம் எடுத்து வருகிறார் மாரி செல்வராஜ். இப்பட பணிகள் அனைத்தும் முடிந்துள்ளதாக கூறப்படுகிறது. விரைவில் ரிலீஸ் குறித்த அப்டேட் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.   

இதையடுத்து துருவ் விக்ரமை வைத்து ஒரு படம் இயக்கவுள்ளார். இப்படம் 2021ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்ட நிலையில் மாரி செல்வராஜின் அடுத்தடுத்த படங்களால் படப்பிடிப்பு தள்ளி போனது. இப்போது, வருகிற 15 ஆம் தேதி தூத்துக்குடி மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் படப்பிடிப்பு தொடங்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இப்படம் அர்ஜுனா விருது வென்ற தூத்துக்குடியைச் சேர்ந்த கபடி வீரர் மணத்தி கணேசன் வாழ்க்கையை மையமாக வைத்து உருவாக்கப்படவுள்ளதாக கூறப்பட்டு வருகிறது. மேலும் நீண்ட காலமாக துருவ் விக்ரம் கபடி பயிற்சி எடுத்து வருவதாகச் சொல்லப்படுகிறது.

இதையடுத்து ரஜினியின் 172வது படத்தை இயக்க பேச்சுவார்த்தை நடைபெற்றதாகவும் செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோ சார்பாக லலித் இப்படத்தை தயாரிக்கவுள்ளதாகவும் கடந்த ஜனவரி மாதம் தகவல் வெளியானது. அதன் பிறகு இப்படம் குறித்து எந்த தகவலும் வெளியாகவில்லை. இந்த நிலையில் மாரி செல்வராஜ் கார்த்தியுடன் இணைந்து ஒரு படம் இயக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இப்படத்தை பிரின்ஸ் பிக்சர்ஸ் தயாரிக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது. 

கார்த்தி தற்போது நலன் குமாரசாமியுடன் ஒரு படம், பிரேம் குமாருடன் ஒரு படம் கைவசம் வைத்துள்ளார். இதில் பிரேம் குமார் படத்தின் படப்பிடிப்பு அனைத்தும் முடிவுற்றது. நலன் குமாரசாமி படத்தின் படப்பிடிப்பு நடந்து வருவதாக கூறப்படுகிறது. இதையடுத்து பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் ஒரு படம் நடிக்கவுள்ளதாக தகவல் உலா வருவது குறிப்பிடத்தக்கது.