Skip to main content

டிஜிட்டல் சதுரங்க வேட்டை: ‘மே பேகுனா சாப்’ - டெக்னாலஜியில் மிரட்டும் வடமாநில கும்பல்!

Published on 03/04/2023 | Edited on 03/04/2023

 

digital cheating part 15

 

ராக்ஸ்டாரை விட டாப்பான புள்ளிங்கோ கர்மாதந்த் பகுதியில் இருக்காங்க. உங்க மதராஸி எம்.பி ஒருத்தரை ஏமாத்தனவங்க இந்த ஊர்க்காரங்கதான்.  

 

எங்க ஸ்டேட் எம்.பியா? 

ஆமாம் சார்..

யாரு? 

பிரேமச்சந்திரன்..

அவர் கேரளா எம்.பி சார்..

அது உங்க ஸ்டேட்தானே..

கேரளா வேற ஸ்டேட் சார்.. 

நீங்கயெல்லாம் மதராஸி தான்..

மதராஸியா அது தமிழ்நாடு சார்..

இல்ல நீங்கயெல்லாம் மதராஸி தான். இப்போ கூட நீங்கயெல்லாம் திராவிட நாடு, திராவிட மாடல்னு தானே சொல்றிங்க.  

ஓ அப்படி வர்றிங்களா..

அவர் எங்க எம்.பி தான். ஒத்துக்கறன், சொல்லுங்க..

 

ஜம்தாராவை விட கர்மாதந்த் கிராமம்தான் சைபர் க்ரைம் நடப்பதற்கான மைய கிராமம். இந்த கிராமத்திலிருந்துதான் சைபர் க்ரைம் குற்றவாளிகள் உருவானாங்க. இங்கயிருந்துதான் நூத்துக்கணக்கான கிராமங்களுக்கு மோசடி தொழில் பரவியது. ஜம்தாரா மாவட்டத் தலைநகரம் என்பதால் ஜம்தாரா சைபர் க்ரைமின் தாயகம் அப்படின்னு சொல்றாங்க. எங்களைக் கேட்டால் கர்மாதந்த் தான் தாய் கிராமம். அதாவது இப்படியொரு மோசடியைக் கற்றுத் தரும் கிராமம்.

 

ஜம்தாராவை விட கர்மாதந்த் கிராமத்திலுள்ள வீடுகள், பல பல வீடுகள்.. இல்லையில்லை, அரண்மனை... அதாவது நம்மவூர் செட்டிநாட்டு வீடுகளை மிஞ்சிய வீடுகளாக பிரமாண்டமாக இருக்கின்றன. இந்த வீடுகள் சமீப ஆண்டுகளில் கட்டப்பட்டுள்ளன. இந்த வீடுகளுக்குள் யாரும் சுலபமாக நுழைந்துவிட முடியாது. கவர்னர் மாளிகையைச் சுற்றிக் கட்டப்பட்டு இருப்பது போன்று பிரமாண்டமான சுற்றுச்சுவர்கள் கட்டப்பட்டுள்ளன. கவர்னர் பங்களா காம்பவுண்ட் கேட் கூட பாதுகாவலர்கள் தான் திறக்கிறார்கள். இந்த கர்மாதந்த் பகுதியில் உள்ள வீடுகளின் காம்பவுண்ட் கேட் ரிமோட் கன்ட்ரோல் மூலம் திறக்கப்படும் அளவுக்கு டெக்னாலஜி புகுத்தி வீட்டை  கட்டியுள்ளனர்.

 

இந்த கிராமத்திலுள்ள மக்களின் குடும்பத் தொழிலே ஆன்லைன் மோசடிதான். கர்மாதந்த் கிராமத்திற்கு பக்கத்து கிராமம் மூன்று கிலோமீட்டர் தொலைவில் உள்ள காசிதந்த். இங்கு வசிப்பவன் 22 வயதான பப்பு. 10ஆம் வகுப்பு கூட முடிக்காதவன். அவனும் அவனது நண்பன் தனஞ்செய்யும் இந்திய ரிசர்வ் வங்கி அதிகாரி பேசுவது போல் கேரளாவைச் சேர்ந்த எம்.பி பிரேமச்சந்திரன் மொபைல் எண்ணுக்கு அழைத்துப் பேசியுள்ளனர். அவரிடம் உங்கள் வங்கிக் கணக்கு முடக்கப்பட்டுள்ளது கே.ஒய்.சி அப்டேட் செய்யவேண்டுமெனக் கேட்டனர். அவரும் தனது வங்கி விபரங்கள் மற்றும் கே.ஒய்.சி தகவல்களைத் தந்த சில நொடிகளில் அவருக்கு ஓ.டி.பி வருகிறது. அந்த ஓடிபி எண்களைக் கேட்கிறான் பப்பு. அடுத்த சில நிமிடங்களில் பிரேமச்சந்திரன் வங்கிக் கணக்கில் இருந்து படிப்படியாக ரூபாய் 1.6 லட்சம் எடுக்கப்படுகிறது. உடனே இதுபற்றி அவர் டெல்லி காவல்துறை அதிகாரிகளுக்கு புகார் அனுப்புகிறார். அவர் எம்.பி என்றும், காவல்துறையில் புகார் சொன்னது தெரியாமல் மீண்டும் மீண்டும் எம்.பியை தொடர்புகொண்ட பப்பு, ஓ.டி.பி வரும் சொல் எனக் கேட்கிறான். அவர் லைனை கட் செய்கிறார். மொபைல் நெட்ஒர்க் மூலம் லொக்கேஷனை ட்ரேஸ் செய்து அவன்கள் இருவரையும் பிடித்து சிறையில் தள்ளியது டெல்லி போலிஸ்.  

 

சோன்பாத் கிராமத்தை சேர்ந்தவர் ஹிரேன் ரக்ஷித். இவருக்கு மனைவி, பிள்ளைகள்னு 7 உருப்படிங்க. பழைய சைக்கிளில் சென்று நகரில் குப்பைகள், பழைய இரும்புகளை பொறுக்கி அதனை கடையில் விற்பனை செய்து அந்த காசுல அரிசி வாங்கி குடும்பத்தை நடத்திக்கிட்டு இருந்தார். இவரது மகன் ஆனந்த் ரக்ஷித் அரசுப் பள்ளியில் 8 ஆம் வகுப்பு படிக்கும்போது படிப்பை பாதியில் நிறுத்தினார். சீதாராம் மண்டல் கற்றுதந்த பயிற்சி வகுப்பில் கலந்துகொண்டான் ஆனந்த். அங்கு செல்போன் வழியாக எப்படி ஒருவரை மடக்குவது? வங்கிக் கணக்கில் இருந்து எப்படி பணம் எடுப்பது? மாட்டாமல் அதனை எப்படி செய்வது என்கிற டெக்னாலஜியை கற்றுக்கொண்டு தன்னிடமிருந்த ஒரு ஸ்மார்ட்போன், ஒரு பட்டன் ஃபோன் வழியாகவே தில்லாலங்கடியை தொடங்கினான்.

 

தனக்கு உதவியாக தன் குடும்ப உறுப்பினர்களை வைத்துக்கொண்டான். ஒரு வழக்கில் சிக்கியவனின் வீட்டை 2021 ஆகஸ்ட் மாதம் போலீசார் சோதனை நடத்தினர். 21 லட்சம் ரூபாய் ரொக்கம், விலை உயர்ந்த கார், ஸ்கூட்டி, பைக், ஏழு லட்சம் ரூபாய் பிக்சட் டெபாசிட், 65 லட்ச ரூபாய்க்கு அசையும் மற்றும் அசையா சொத்துகள், 23,65,000 ரூபாய் வட்டிக்கு விட்டதற்கான ஆவணம், 12 வங்கிகளில் கணக்கு வைத்திருப்பதற்கான பாஸ்புக் ஆகியவற்றை கைப்பற்றினர். வீட்டின் மதிப்பு சுமார் 50 லட்சம் ரூபாய் என மதிப்பிடப்பட்டுள்ளது. மற்றவர்களின் வங்கிக் கணக்குகளில் இருந்து பணத்தை எடுத்தே இவ்வளவு சொத்து சேர்த்துள்ளான். போலிஸ் கைது செய்யத் தேடுவது தெரிந்ததும் ஆனந்த் தலைமறைவானான். ஆனால், அவனை விடாமல் விரட்டிய போலிஸார் அவனை கைது செய்து நீதிமன்றத்தில் நிறுத்தினர். நீதிமன்றத்தில் ரூ.20 லட்சம் செலுத்தி நிபந்தனை ஜாமீன் பெற்றான். இப்படி ஜம்தாரா மாவட்டத்தின் பல கிராமங்களில் பல ஆனந்த் ரஷீத்கள் ஏழ்மை நிலைக்கு கீழ் இருந்தவர்கள் இப்போது கார்களில் பவனி வருகின்றனர்.      

 

2011ஆம் ஆண்டு முதன்முதலாக பணமில்லாமல் ஆன்லைனில் மொபைல் ரீசார்ஜ் செய்து மோசடி செய்ததாக முதல் வழக்கு கர்மாதந்த் காவல்நிலையத்தில் பதிவாகியுள்ளது. அதன்பின் அடுத்தடுத்து மோசடி வழக்குகளே. ஆன்லைன் மோசடி வழக்கில் சிக்கிய, படிக்கக் கூட தெரியாத அவர்களிடம் இப்படி ஏமாற்றுவதற்கான டெக்னாலஜியை யார் கற்றுத் தந்தது எனக் கேள்வி எழுப்பினர் டெல்லி போலிஸார். 

 

சூப்பர் ஸ்டார் கற்றுத் தந்தார். சூப்பர் ஸ்டாரா? யார் அந்த சூப்பர் ஸ்டார்?....

 

வேட்டை தொடரும்......

 

 

Next Story

ஹேமந்த் சோரன் ஏன் கைது செய்யப்பட்டார்?; மல்லிகார்ஜுன கார்கே தகவல்

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
Mallikarjuna Karke information on Why was Hemant Soran arrested?

இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக 19.04.2024 தொடங்கிய தேர்தலானது வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக தமிழகம் உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த ஏப்.19 வாக்குப்பதிவு நடைபெற்றது.

இந்த மக்களவைத் தேர்தலில், ஆளும் பா.ஜ.க.வை வீழ்த்த வேண்டும் என்ற ஒரே நோக்கத்திற்காக கடந்த ஆண்டு, காங்கிரஸ் தலைமையில் சரத் பவாரின் தேசியவாத காங்கிரஸ், சமாஜ்வாதி கட்சி, உள்ளிட்ட 28 எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து இந்தியா கூட்டணியை உருவாக்கி தீவிர தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றன. 

எதிர்கட்சிகள் ஒன்றிணைந்த இந்தியா கூட்டணி சார்பாக, பீகார், பெங்களூர், மும்பை, டெல்லி என ஒவ்வொரு ஆலோசனைக் கூட்டம் நடைபெற்று வருகிறது. இந்த கூட்டணியில் இருக்கும் அரசியல் கட்சிகளுக்குள், தொகுதி பங்கீட்டில் சில கருத்து மோதல்கள் இருந்தாலும், பா.ஜ.கவை வீழ்த்த வேண்டும் என்ற ஒற்றை கருத்தோடு செயல்பட்டு வருகின்றன. இதற்கிடையில், சுரங்க முறைகேட்டின் தொடர்புடைய பண மோசடியில் ஈடுபட்டதாக கூறி, இந்தியா கூட்டணியில் இருக்கும் ஜார்க்கண்ட் மாநில முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரன், அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார். அதே போல், டெல்லி மதுபானக் கொள்கை வழக்கு தொடர்பாக, டெல்லி முதல்வரும், ஆம் ஆத்மி கட்சித் தலைவருமான அரவிந்த் கெஜ்ரிவால் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார். இதற்கு, எதிர்கட்சிகள், பா.ஜ.க மீது குற்றச்சாட்டு வைத்தும், கடும் கண்டனமும் தெரிவித்து வருகின்றன.

இந்த நிலையில், நாடு முழுவதும் 102 தொகுதிகளில் நடைபெற்ற முதற்கட்ட வாக்குப்பதிவை அடுத்து, இரண்டாம் கட்ட வாக்குப்பதிவை எதிர்கொள்ள இந்தியா கூட்டணி கட்சிகள் தீவிர வாக்குப்பதிவில் ஈடுபட்டு வருகின்றன. அந்த வகையில், ஜார்க்கண்ட் மாநிலம், ராஞ்சியில் நேற்று (21-04-24) இந்தியா கூட்டணி சார்பில் பிரமாண்ட பிரச்சாரப் பொதுக் கூட்டம் நடைபெற்றது. இந்த பொதுக்கூட்டத்தில் காங்கிரஸ் கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, ராஷ்டிரிய ஜனதா தள தலைவர் தேஜஸ்வி யாதவ், சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ், பஞ்சாப் முதல்வர் பகவந்த் சிங் மன், ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா தலைவர் சிபுசோரன் உள்ளிட்ட இந்தியா கூட்டணி தலைவர்கள் கலந்து கொண்டனர்.

Mallikarjuna Karke information on Why was Hemant Soran arrested?

இந்த கூட்டத்தில் கலந்து கொண்ட காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, பா.ஜ.க தலைமையிலான ஒன்றிய அரசை கடுமையாக சாடினார். அதில் பேசிய மல்லிகார்ஜுன கார்கே, “ஹேமந்த் சோரன் இந்திய கூட்டணியில் இருந்து பிரிந்து செல்ல மறுத்ததற்காக சிறைக்கு அனுப்பப்பட்டார். ஹேமந்த் சோரன் ஒரு துணிச்சலான நபர், அவர் தலை குனிவதை விட சிறை செல்வதையே விரும்பினார்.

ராமர் கோவில் கும்பாபிஷேகம் மற்றும் பாராளுமன்ற கட்டட திறப்பு விழாவிற்கு ஜனாதிபதி திரௌபதி முர்முவை அழைக்காமல், பிரதமர் நரேந்திர மோடி பழங்குடியினரை அவமதித்துவிட்டார். பழங்குடியினரை தொடர்ந்து பயமுறுத்தினால் பா.ஜ.க அழிந்துவிடும். பழங்குடியினரை தீண்டத்தகாதவர்களாக பா.ஜ.க கருதுகிறது. 2024 மக்களவைத் தேர்தலில் பா.ஜ.க 150 முதல் 180 இடங்களையே வெற்றி பெறும்” என்று கூறினார்.

Next Story

“மரியாதை இல்லை” - பா.ஜ.க.வில் இணைந்த முன்னாள் முதல்வரின் அண்ணி சீதா சோரன்

Published on 19/03/2024 | Edited on 19/03/2024
 Sita Soran, sister-in-law of former chief minister who joined BJP

நாட்டின் 18வது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்த நாடாளுமன்றத் தேர்தலின் வாக்குப்பதிவு எண்ணிக்கை, ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் கூட்டணி, தொகுதிப் பங்கீடு எனத் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

அந்த வகையில், அ.தி.மு.க, பா.ஜ.க உள்ளிட்ட கட்சிகள், கூட்டணிக் கட்சிகளிடையே தொகுதிப் பங்கீடுகள் பற்றிய பேச்சுவார்த்தையும் நடத்தி வருகிறது. தேசிய கட்சிகளான பா.ஜ.க, காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள், தங்கள் கட்சி வேட்பாளர்களை ஒவ்வொரு கட்டமாக அறிவித்து வருகின்றன. தி.மு.க, கூட்டணி பேச்சுவார்த்தையை முடித்து வேட்பாளர் தேர்வை முன்னெடுத்துள்ளது. அதேபோல் அதிமுக கூட்டணி பேச்சுவார்த்தையைத் தொடங்கி நடத்தி வருகிறது. 

பா.ஜ,க மற்றும் காங்கிரஸ் கட்சிகள், மக்களவைத் தேர்தலில் போட்டியிடப் போகும் வேட்பாளர் பட்டியலை வெளியிட்ட பிறகு, அரசியல் வட்டாரத்தில் பல மாற்றங்கள் நிகழ்ந்து வருகின்றன. அதில், கட்சி மீது அதிருப்தி ஏற்பட்டும், மக்களவைத் தேர்தலில் வாய்ப்பு கொடுக்காமல் மறுக்கப்பட்டதாலும் தங்களுடைய கட்சியில் இருந்து விலகி மாற்றுக் கட்சியில் இணைந்து வருகின்றனர். இதற்கு முன்னதாக, பா.ஜ.க கூட்டணியில் இருந்த ராஷ்டிரிய லோக் ஜனசக்தி கட்சியைச் சேர்ந்த மத்திய அமைச்சர் பசுபதி பராஸ் தனது பதவியை ராஜினாமா செய்து பரபரப்பை ஏற்படுத்தினார். இந்த நிலையில், ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா மூத்த தலைவரும் ஹேமந்த் சோரனின் அண்ணியுமான சீதா சோரன் பா.ஜ.க.வில் இணைந்துள்ளார். 

ஜார்க்கண்ட் மாநில முதல்வராகப் பதவி வகித்து வந்தவர் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியின் தலைவர் ஹேமந்த் சோரன் ஆவார். இவர் சுரங்க முறைகேட்டுடன் தொடர்புடைய பண மோசடியில் ஈடுபட்டதாகக் கூறி, ஹேமந்த் சோரன் மீதான சட்ட விரோதப் பணப்பரிமாற்ற வழக்கை அமலாக்கத்துறை விசாரித்து வந்தது. அதன்படி கடந்த ஜனவரி 31 ஆம் தேதி (31.01.2024) ஹேமந்த் சோரனிடம், அமலாக்கத்துறை அதிகாரிகள் சுமார் 7 மணி நேரம் மேற்கொண்ட விசாரணைக்குப் பிறகு ஹேமந்த் சோரன் கைது செய்யப்பட்டார். இதற்கு முன்னதாக மாநில ஆளுநர் சி.பி. ராதாகிருஷ்ணனை சந்தித்து ஹேமந்த் சோரன் தனது பதவியை ராஜினாமா செய்திருந்தார். இதனையடுத்து ஜார்க்கண்ட் முதல்வராக சம்பாய் சோரன் கடந்த பிப்ரவரி 2 ஆம் தேதி (02.02.2024) பதவியேற்றார்.

 Sita Soran, sister-in-law of former chief minister who joined BJP

இந்த நிலையில், முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரனின் அண்ணி சீதா சோரன் பா.ஜ.க.வில் இணைந்துள்ளார். ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சாவின் மறைந்த தலைவர் துர்கா சோரனின் மனைவியான சீதா சோரன், அந்த கட்சியின் பொதுச் செயலாளராக பதவி வகித்து வந்தார். இந்நிலையில், கருத்து வேறுபாடு காரணமாக ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியை விட்டு விலகி இன்று (19-03-24) அவர் பா.ஜ.க.வில் இணைந்துள்ளார். மேலும், தனது எம்.எல்.ஏ பதவியையும் ராஜினாமா செய்துள்ளார்.

இது குறித்து செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய சீதா சோரன், “கட்சிக்காக நான் 14 ஆண்டுகள் பாடுபட்டிருக்கிறேன். ஆனால் அதற்கான மரியாதை எனக்கு இல்லை. அதன் காரணமாகவே இந்த முடிவுக்கு நான் தள்ளப்பட்டேன். எனது கணவர் துர்கா சோரனின் மரியாதையை காக்கவே, மரியாதை இல்லாத இடத்தில் இருந்து நான் வெளியேறி இருக்கிறேன். மேலும், அமித்ஷா, ஜே.பி.நட்டா ஆகியோர் மீது நம்பிக்கை வைத்து நான் பா.ஜ.க.வில் இணைந்திருக்கிறேன். ஜார்க்கண்டை காப்பாற்றுவதில் அவர்கள் எனக்கு ஆதரவு அளிப்பார்கள் என்ற நம்பிக்கை உள்ளது” என்று கூறினார்.