Skip to main content

கிரிக்கெட்டின் தலைவர், சூப்பர் ஸ்டார், பிராட்மேன் சாதனைகளை முறியடிப்பார்... பாராட்டு மழையில் கோலி

Published on 05/11/2018 | Edited on 07/11/2018

ஒரு காலத்தில் உள்நாட்டு மைதானங்களிலும், பேட்டிங்க்கு சாதகமான  மைதானங்களிலும் மட்டுமே சிறப்பாக விளையாடுபவர் என்று இங்கிலாந்து வேகபந்து வீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சனால் விமர்சனத்துக்கு உள்ளானவர் விராட் கோலி. ஆனால் இந்த வாரத்தில் மட்டும் உலகின் மிகசிறந்த வீரர்களாக இருந்த பிரைன் லாரா, ஸ்டீவ் வாக், கிரேம் ஸ்மித் ஆகியோரிடமிருந்து மிகவும் அரிதான பாராட்டுகளை பெற்றுள்ளார் கோலி. 

 

vv

 

 

10 வருட கிரிக்கெட் வாழ்வில் சில இறக்கங்களையும், பல்வேறு சோதனைகளையும் கடந்தே இன்று உலகின் நம்பர் 1 பேட்ஸ்மேனாக உருவெடுத்துள்ளார் கோலி. 2008-ல் அறிமுகமான கோலி 2014 வரை சிறந்த பேட்ஸ்மேனாக மூன்று விதமான போட்டிகளிலும் திகழ்ந்து வந்தார். அந்த நிலையில் 2015-ஆம் ஆண்டு அவருக்கு சோதனை காலமாக அமைந்தது. 2015-ல் டெஸ்ட் போட்டிகளில் 43, ஒரு நாள் போட்டிகளில் 37, டி20-ல் 22 என சராசரி அமைந்து இருந்தது. இது ஓரளவு நல்ல சராசரி தான் என்ற போதிலும் விராட் கோலியின் தகுதிக்கு அது குறைவாக இருந்தது.

 

ஆப் ஸ்டம்புக்கு வெளியே செல்லும் பந்துகளை ஆடுவதில் அதிகமாக தடுமாறினார் கோலி. தன்னுடைய பலவீனங்களை கண்டறிந்து அதை நிவர்த்தி செய்ய தீவிரமாக பயிற்சியில் ஈடுபட்டார் கோலி. அந்த காலகட்டத்திற்கு பிறகு மிகசிறந்த வீரராக உருவெடுத்தார். இன்று யாரும் தனக்கு அருகில் கூட வரமுடியாத அளவுக்கு தன்னுடைய திறமைகளை வளர்த்து நம்பர் 1 இடத்தில் உள்ளார். இதற்கு அவருடைய விடா முயற்சியும், கடின உழைப்பும், அவர் கிரிக்கெட்டின் மீது கொண்ட அன்பும்தான் காரணம்.

 

தற்போது நடந்து முடிந்த மேற்கு இந்திய தீவுகளுக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடரில் மட்டும் பல்வேறு சாதனைகளை படைத்தார். ஒருநாள் போட்டிகளில் 205 இன்னிங்க்ஸ் மட்டுமே எடுத்துக்கொண்டு அதிவேகமாக 10,000 ரன்களை குவித்த வீரர் என்ற பெருமையை பெற்றார். உலகின் மிகசிறந்த பந்துவீச்சாளர்களை தன்னுடைய பேட்டிங் மூலம் நிலைகுலைய செய்தவர். அதிகமான இலக்குகளை எதிர்கொண்டு ஆடும் போட்டிகளில் இவர் சதம் அடித்து சுலபமாக வெற்றி பெற வைத்து உள்ளார். இதனால் “சேஸ் மாஸ்டர்” என்ற பெயரை பெற்றார். 

 

 

vv

 

 

கேப்டனாக இருப்பவர்கள் பேட்டிங்கில் சரியாக கவனம் செலுத்த முடியாமல் தடுமாறுவார்கள். ஆனால் கோலி அதற்கு விதிவிலக்கு. அதிக பொறுப்புகளை ஏற்றுக்கொண்டு அணியை வெற்றி பாதைக்கு அழைத்து செல்வதில் வல்லவர். ஒருநாள் போட்டிகளில் அதிவேகமாக 8,000 மற்றும் 9,000 ரன்கள் எடுத்த வீரரும் ஆவர். அதிவேகமாக  5000, 6000  மற்றும் 7000 ரன்கள் எடுத்த வீரர்களில் இரண்டாம் இடத்தில் தென் ஆப்பிரிக்காவின் ஹசீம் அம்லாவிற்கு அடுத்தபடியாக உள்ளார். 

 

ஒரு தொடரில் ஒரு உலக சாதனை படைப்பதே பெரிய காரியம். ஆனால் கோலி தான் விளையாடும் ஒவ்வொரு போட்டியிலும் பல்வேறு உலக சாதனைகளை படைத்து வருகிறார். டான் பிராட்மேனின் 99.99 சராசரி சாதனையை தவிர அனைத்து சாதனைகளையும் முறியடிப்பார் கோலி என்று ஆஸ்திரேலியாவின் ஸ்டீவ் வாக் தெரிவித்துள்ளார். பெரிய காயமடையாமல் இருந்தால் அனைத்து சாதனைகளையும் படைப்பார் என்றும் அவர் கூறியுள்ளார்.

 

இன்று உலக கிரிக்கெட் அதிகளவு சூப்பர் ஸ்டார்கள் இல்லாமல் தவித்து வருவதாகவும், சூப்பர் ஸ்டாராக கோலி டெஸ்ட் கிரிக்கெட்டை அடுத்த கட்டத்திற்கு எடுத்து செல்லுவார் எனவும் கொல்கத்தாவில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய தென் ஆப்ரிக்காவின் முன்னாள் கேப்டன் கிரேம் ஸ்மித் தெரிவித்துள்ளார். இந்தியாவில் கோல்ப் தொடர்பான நிகழ்ச்சியில் கலந்து கொண்ட லாரா, கோலியின் தனித்தன்மை வியக்கத்தக்கது என்றும், இந்த கால கட்டத்தில் கிரிக்கெட்டின் தலைவர் கோலிதான் எனவும் தெரிவித்தார்.
 

 

Next Story

வீறு கொண்டு எழுந்த விராட்; பஞ்சாப்பை திணறடித்த தினேஷ்

Published on 25/03/2024 | Edited on 25/03/2024
rcb vs pbks ipl live score updated kohli dinesh creates the magic

ஐபிஎல் 2024 ஆறாவது லீக் ஆட்டம் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகளுக்கு இடையில் பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் தொடங்கியது. இதில் டாஸ் வென்ற பெங்களூர் அணி முதலில் பந்து வீச தீர்மானித்தது. அதன்படி பஞ்சாப் அணி முதல் பேட் செய்ய களமிறங்கியது. அந்த அணிக்கு துவக்கம் சரியாக அமையவில்லை. அந்த அணியின் முக்கிய ஆட்டக்காரர்களில் ஒருவரான பேர்ஸ்டோ 8 ரன்களில் ஆட்டம் இழக்க அடுத்து வந்த பிரப் சிம்ரன் சிங் 25 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார்.

அடுத்து வந்த லிவிங்ஸ்டன் 17 ரன்களில் ஆட்டம் இழந்தார். ஒரு பக்கம் விக்கெட்டுகள் விழுந்தாலும் மறுபக்கம் கேப்டன் தவான்  பொறுப்பாக ஆடி 45 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். சாம் கரண்,  ஜித்தேஷ் சர்மா ஜோடி ஓரளவு அதிரடி காட்டியது. சாம் கரண் 17 பந்துகளில் 23 ரன்களும் ஜித்தேஷ் சர்மா 20 பந்துகளில் 27 ரன்களும் எடுத்து ஆட்டம் இழந்தனர். கடைசி கட்ட ஓவர்களில் சஷாங் சிங்கின் 21 ரன்கள் பஞ்சாப் அணிக்கு கௌரவமான ஸ்கோரை எட்ட உதவியது. 20 ஓவர்கள் முடிவில் பஞ்சாப் அணி 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 176 ரன்கள் எடுத்தது.

பெங்களூர் அணி தரப்பில் சிராஜ் மற்றும் மேக்ஸ்வெல் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளும் தயால், அல்சாரி ஜோசப் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டும் எடுத்தனர்.

பின்னர் 177 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பெங்களூர் அணி ஆடத் தொடங்கியது. ஆரம்பம் முதலே அதிரடியைத் தொடங்கினார் கோலி. கேப்டன் டுபிளசிஸ் 3 ரன்களில் வீழ்ந்தார். க்ரீன் 3 ரன்களில்  ஆட்டமிழந்தார். நிதானமாக ஆடிய பட்டிதார் 18 ரன்களில் வெளியேறினார். அடுத்து வந்த மேக்ஸ்வெல் 3 ரன்களில் வெளியேறி மீண்டும் ஏமாற்றினார். அடுத்து வந்த அனுஜ் ராவத் ஓரளவு நிதானம் காட்ட மறுபக்கம் கோலி தனது அதிரடியைத் தொடர்ந்தார். 

அணியின் வெற்றிக்கு 4 ஓவர்களில் 47 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் கோலி 77 ரன்களில் அவுட் ஆனார். பின்னர் அனுஜ் ராவத்தும் 11 ரன்களில் எல்.பி.டபுள்யூ ஆக ஆர்சிபி அணிக்கு சிக்கல் எழுந்தது. பின்னர் தினேஷ் கார்த்திக்குடன் இம்பாக்ட் வீரராக தயாலுக்கு பதிலாக மகிபால் லொம்ரோர் களமிறங்கினார். வந்தவுடன் அதிரடி காட்டத் துவங்கினார். பின்னர் தன் பங்கிற்கு தினேஷ் கார்த்திக்கும் அதிரடியைத் தொடங்கினார். தினேஷ் கார்த்திக் 10 பந்துகளில் 28 ரன்களும், லொம்ரோர் 8 பந்துகளில் 17 ரன்களும் எடுத்து அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்துச் சென்றனர்.

இறுதியில் ஆர்சிபி அணி 19.2 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 178 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. பஞ்சாப் அணி தரப்பில் ரபாடா, ப்ரார் தலா 2 விக்கெட்டுகளும், ஹர்ஷல், சாம் கரண் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டும் எடுத்தனர். சிறப்பாக ஆடி 77 ரன்கள் எடுத்து அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்த கோலி ஆட்ட நாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இரண்டு போட்டிகளில் ஆடியுள்ள ஆர்சிபி அணிக்கு இது முதல் வெற்றியாகும். இதன் மூலம் புள்ளிகள் பட்டியலில் பெங்களூரு அணி 6ஆவது இடத்தைப் பிடித்துள்ளது. முதல் ஐந்து இடங்களில் ராஜஸ்தான், சென்னை, குஜராத், கொல்கத்தா மற்றும் பஞ்சாப் அணிகள் உள்ளன.

Next Story

RCB vs PBKS; நிதானமாக ஆடிய பஞ்சாப் கிங்ஸ்

Published on 25/03/2024 | Edited on 25/03/2024

 

RCB vs PBKS ipl live score update dhawan plays important knock

ஐபிஎல் 2024 ஆறாவது லீக் ஆட்டம் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகளுக்கு இடையில் பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் தொடங்கியது. இதில் டாஸ் வென்ற பெங்களூர் அணி முதலில் பந்து வீச தீர்மானித்தது. அதன்படி பஞ்சாப் அணி முதல் பேட் செய்ய களமிறங்கியது. அந்த அணிக்கு துவக்கம் சரியாக அமையவில்லை. அந்த அணியின் முக்கிய ஆட்டக்காரர்களில் ஒருவரான பேர்ஸ்டோ 8 ரன்களில் ஆட்டம் இழக்க அடுத்து வந்த பிரப் சிம்ரன் சிங் 25 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார்.

அடுத்து வந்த லிவிங்ஸ்டன் 17 ரன்களில் ஆட்டம் இழந்தார். ஒரு பக்கம் விக்கெட்டுகள் விழுந்தாலும் மறுபக்கம் கேப்டன் தவான்  பொறுப்பாக ஆடி 45 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். சாம் கரண்,  ஜித்தேஷ் சர்மா ஜோடி ஓரளவு அதிரடி காட்டியது. சாம் கரண் 17 பந்துகளில் 23 ரன்களும் ஜித்தேஷ் சர்மா 20 பந்துகளில் 27 ரன்களும் எடுத்து ஆட்டம் இழந்தனர். கடைசி கட்ட ஓவர்களில் சஷாங் சிங்கின் 21 ரன்கள் பஞ்சாப் அணிக்கு கௌரவமான ஸ்கோரை எட்ட உதவியது. 20 ஓவர்கள் முடிவில் பஞ்சாப் அணி 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 176 ரன்கள் எடுத்தது.

பெங்களூர் அணி தரப்பில் சிராஜ் மற்றும் மேக்ஸ்வெல் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளும் தயால், அல்சாரி ஜோசப் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டும் எடுத்தனர்.

பின்னர் 177 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பெங்களூர் அணி ஆடி வருகிறது. 6 ஓவர்கள் முடிவில் 50 ரன்கள் எடுத்து 2 விக்கெட்டுகளை இழந்துள்ளது. கேப்டன் டுபிளசிஸ் 3 ரன்களில் வீழ்ந்தார். க்ரீன் 3 ரன்களில்  ஆட்டமிழந்தார். கோலி 35 ரன்களுடனும், பட்டிதார் 3 ரன்களுடனும் ஆடி வருகின்றனர்.