Skip to main content

9 வயதில் மாநில அணி.. இன்று உலகின் சிறந்த கிரிக்கெட்டர் விருது

Published on 28/01/2019 | Edited on 28/01/2019

பல விளையாட்டுகளைப் போலவே மகளிர் கிரிக்கெட்டும் ஆண்கள் கிரிக்கெட்டின் நிழலில் மறைந்துவிட்டது. ஆனால் சமீப காலங்களாக மகளிர் கிரிக்கெட்டும் வேகமாக வளர்ந்து வருகிறது. ஸ்பான்சர்ஸ், ஒளிபரப்பு, ஊடக வெளிச்சம், அதிகரித்து வரும் ரசிகர்கள் என மகளிர் கிரிக்கெட் முன்னேற்றம் கண்டு வருகிறது. சில ஆண்டுகளுக்கு முன்புவரை மிதாலி ராஜ், ஜுலன் கோஸ்வாமி ஆகிய இருவர் மட்டுமே ஓரளவு பிரபலமான மகளிர் கிரிக்கெட்டர்கள். இன்று ஸ்மிர்தி மந்தனா, ஹர்மன்பிரீட் கவுர், வேதா கிருஷ்ணமூர்த்தி, புனம் ராவுட், பூனம் யாதவ் என பட்டியல் தொடர்கிறது. 

 

 

ss

 

 

இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் சேவாக் என்று அழைக்கப்படுபவர் ஸ்மிர்தி மந்தனா. அணியின் தொடக்க ஆட்டக்காரரான இவர் ஐ.சி.சி. 2018-ஆம் ஆண்டுக்கான சிறந்த ஒருநாள் வீரர் விருதை பெற்றுள்ளார். ரேச்சல் ஹேஹோ-ஃபிளின்ட் என்ற சிறந்த மகளிர் கிரிக்கெட் வீரர் விருதையும் பெற்று இந்திய அணிக்கு பெருமை சேர்த்துள்ளார்.

 

22 வயதான ஸ்மிர்தி மந்தனா உலகளாவிய மகளிர் கிரிக்கெட்டில் பேட்டிங்கின் சூப்பர் ஸ்டாராக திகழ்கிறார். இன்றைய பெண்கள் கிரிக்கெட்டில் மிகவும் பிரபலமான ஒருவர். ஆண் கிரிக்கெட்டர்களை கொண்டாடும் ஒரு நாட்டில் ‘பெண் சூப்பர் ஸ்டார் கிரிக்கெட்டர்’ என்பது சாதாரணமான ஒன்றல்ல. ஒரு குறுகிய காலத்தில் ஸ்மிர்தி மந்தனா கிரிக்கெட் துறையில் தனது திறமையை நிரூபித்துள்ளார். அவரது கிரிக்கெட் வாழ்வில் காயங்களால் ஏற்றத்தாழ்வுகள் வந்த போதும் பாசிடிவ் எண்ணங்கள் மூலம் சாதித்து வருகிறார்.

 

s

 


கிரிக்கெட் பாரம்பரியம் கொண்ட குடும்பத்தில் இருந்து வந்தவர் ஸ்மிர்தி மந்தனா. மூன்று வயதாக இருந்தபோதே மந்தனா கைகளில் ஒரு பிளாஸ்டிக் பேட் வைத்து விளையாடத் தொடங்கினார். ஆரம்ப காலகட்டத்தில் தனது சகோதர் ஷ்ரவன் மாவட்ட அளவிலான போட்டிகளில் விளையாடியதன் மூலம் கிரிக்கெட் மீது மந்தனாவிற்கு ஆர்வம் அதிகமானது. தனது ஒன்பது வயதில் மகாராஷ்டிராவின் அண்டர்-15 அணியில் அவர் தேர்வு செய்யப்பட்டார். பதினோரு வயதில் அவர் மகாராஷ்டிரா அண்டர்-19 அணிக்காக தேர்வு செய்யப்பட்டார். 

 

மந்தனாவின் தந்தை ஸ்ரீனிவாஸ், ஒரு இரசாயன விற்பனையாளர். மந்தனாவின் கிரிக்கெட் நிகழ்ச்சியை கவனித்துக்கொள்கிறார். அவரது தாயார் மந்தனாவின் உணவு கட்டுப்பாடு, மற்றும் பிற அம்சங்களில் பொறுப்பாளராக உள்ளார். மேலும் அவரது சகோதரர் ஷர்வன் மந்தனாவுக்கு இன்றளவும் வலைபயிற்சிகளில் உதவி செய்து வருகிறார்.

 

மந்தனா 15 வயதாக இருந்தபோது கிரிக்கெட்டிற்கும், 10-வது பரீட்சைக்கும் இடையில் எதை தேர்வு செய்வது என்று மிகவும் இக்கட்டான சூழ்நிலையில் இருந்தார். பின்னர் அவர் கிரிக்கெட்டைத் தேர்வுசெய்தார். இந்த கடினமான தேர்வில் அவரது தாயார் அவருக்கு ஆதரவளித்தார்.

 

உள்ளூர் போட்டிகளில் 150 பந்துகளில் 224 ரன்கள் எடுத்து, இரட்டை சதம் அடித்த முதல் இந்திய பெண் வீரர் என்ற சாதனையை ஸ்மிர்தி மந்தனா படைத்தார். 2014-ஆம் ஆண்டில் தனது முதல் ஒருநாள் சர்வதேச டெஸ்ட் தொடரில் பங்கேற்றார். இதுவரை 52 டி-20 போட்டிகளில் 1046 ரன்கள் எடுத்துள்ளார்.  45 ஒருநாள் போட்டிகளில் 4 சதம் உட்பட 1707 ரன்கள் மற்றும் 40.64 சராசரி கொண்டுள்ளார். 

 

ss

 

 

2017-ஆம் ஆண்டு நடைபெற்ற மகளிர் உலகக்கோப்பை தொடரில் இந்திய அணிக்கு முக்கிய பங்கு வகித்தார். 2018-ஆம் ஆண்டு நடைபெற்ற டி-20 மகளிர் உலக கோப்பை தொடரில் 5 போட்டிகளில் 178 ரன்கள் மற்றும் ஸ்ட்ரைக் ரேட் 125.35. 2016-ஆம் ஆண்டு ஐசிசி வெளியிட்ட சிறந்த வீரர்கள் கொண்ட மகளிர் அணியில் இடம்பெற்ற ஒரே இந்திய வீரர் மந்தனா மட்டுமே. 2018-ஆம் ஆண்டு 12 போட்டிகளில் 669 ரன்கள், 66.90 சராசரி, அதிகபட்சமாக 135 ரன்கள் எடுத்துள்ளார். ஐசிசி மகளிருக்கான பேட்டிங் தரவரிசை பட்டியலில் ஒருநாள் போட்டிகளில் நான்காவது இடமும், டி-20 போட்டிகளில் 10-வது இடத்திலும் உள்ளார்.

 

தற்போது நடைபெற்று வரும் நியூசிலாந்து தொடரில் சதம் அடித்து அசத்தினார். இதன் மூலம் SENA என்று கூறப்படும் தென் ஆப்பிரிக்கா, இங்கிலாந்து, நியூசிலாந்து, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளில் சதம் அடித்த முதல் இந்திய வீராங்கனை என்ற புதிய சாதனையை மந்தனா படைத்துள்ளார். சர்வதேச அளவில் க்ளைர் டெய்லருக்கு பிறகு இந்த சாதனையை படைத்த இரண்டாவது வீராங்கனை. 

 

ஆஸ்திரேலியாவில் நடைபெறும் மகளிருக்கான பிக் பேஷ் தொடரில் 2016-ஆம் ஆண்டு பிரிஸ்பேன் ஹீட் அணிக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டார். அந்த தொடரில் காயம் காரணமாக பாதியில் வெளியேறினார். 2018-ஆம் ஆண்டு ஹோபர்ட் ஹரிகன்ஸ் அணிக்கு விளையாடி வருகிறார். இந்திய அணியிலிருந்து பிக் பேஷ் தொடரில் விளையாடும் வீரர் என்ற பெருமையும் உண்டு. இதுவரை பிக் பேஷ் தொடரில் 25 போட்டிகளில் 407 ரன்கள் மற்றும் ஸ்ட்ரைக் ரேட் 129.62. இளம் வயதில் பல சாதனைகளை படைத்துவரும் மந்தனா, விளையாட்டு துறையை தேர்ந்தெடுக்க விரும்பும் மகளிருக்கு சிறந்த ரோல் மாடலாக உள்ளார்.

 

 

 

 

Next Story

WPL; டெல்லி அணியுடன் மோதப்போகும் அணி?

Published on 15/03/2024 | Edited on 15/03/2024
 The team that will clash with Delhi at WPL match

ஆண்களுக்கான கிரிக்கெட் போட்டியான இந்தியன் பீரிமியர் லீக் (ஐ.பி.எல்) தொடர் கடந்த 2008ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் நடைபெற்று வருகிறது. அதே போல், பெண்களுக்கான கிரிக்கெட் போட்டி பெண்கள் பிரீமியர் லீக் (WPL) தொடர் கடந்த 2023ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்டது. கடந்த ஆண்டின் போது நடைபெற்ற பெண்கள் பிரீமியர் லீக் போட்டியில் மும்பை அணி வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை பெற்றது.

அந்த வகையில், 2வது பெண்கள் பிரீமியர் லீக் (WPL) கிரிக்கெட் போட்டி கடந்த பிப்ரவரி 23ஆம் தேதி முதல் டெல்லியில் நடைபெற்று வருகிறது. டெல்லி கேப்பிட்டல்ஸ், குஜராத் ஜெயண்ட்ஸ், மும்பை இந்தியன்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர், உ.பி வாரியர்ஸ் ஆகிய ஐந்து அணிகள் இந்த தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் பங்கேற்றுள்ள 5 அணிகளும் தங்களுக்குள் தலா 2 முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் முதல் 3 இடங்களை பிடிக்கும் அணிகள் பிளே - ஆப் சுற்றுக்குள் நுழையும். அதன்படி, கடந்த பிப்ரவரி மாதம் தொடங்கிய இந்த தொடர், இறுதி கட்டத்தை எட்டியுள்ளது.

லீக் பிரிவின் கடைசி போட்டி நேற்று (14-03-24) டெல்லியில் நடைபெற்றது. இதில், குஜராத் ஜெயண்ட்ஸ் மற்றும் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் மோதிய இந்த போட்டியில், டாஸ் வென்று குஜராத் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி, பேட்டிங் செய்ய களமிறங்கிய குஜராத் அணி, 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 126 ரன்களை எடுத்தது. அதில் அதிகபட்சமாக பாரதி புல்மாலி 42 ரன்களை எடுத்திருந்தார். குஜராத் அணிக்கு எதிராக வீசப்பட்ட பந்து வீச்சில், மரிசன்னே கப், ஷிகா பாண்டே, மின்னு மணி ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

இதனை தொடர்ந்து, 127 ரன்கள் இலக்கை நோக்கி டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி விளையாடியது. அதில் டெல்லி அணி 13.1 ஓவர்களில் 3 விக்கெட்டுக்களை மட்டுமே இழந்து வெற்றி இலக்கை அடைந்து அபாரமாக வெற்றி பெற்றது. இதில், டெல்லி அணியின் தொடக்க வீராங்கனையான ஷபாலி வர்மா 37 பந்துகளில் 7 பவுண்டரி மற்றும் 5 சிக்சர்கள் அடித்து 71 ரன்களை எடுத்திருந்தார். 

லீக் போட்டிகளின் முடிவில் டெல்லி அணி, 8 போட்டிகளில் 6 போட்டிகள் வெற்றி பெற்று 12 புள்ளிகள் பெற்று புள்ளி பட்டியலில் முதலிடத்தை பெற்றுள்ளது. கடந்த ஆண்டு சாம்பியன் பட்டம் வென்ற மும்பை அணி 5 போட்டிகளில் வெற்றி பெற்று புள்ளி பட்டியலில் 2வது இடத்திலும், ராயல் சேலஞ்சர்ஸ் அணி 3வது இடத்திலும் உள்ளன. முதல் மூன்று இடங்களில் உள்ள அணிகள் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறின. இதில் புள்ளி பட்டியலில் முதலிடம் பெற்ற டெல்லி அணி நேரடியாக இறுதி போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது. இந்த நிலையில், இன்று (15-03-24) மாலை 7:30 மணிக்கு நடைபெறும் எலிமினேட்டர் சுற்றில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் மோதவுள்ளன. இந்த போட்டியில் வெற்று பெறும் அணி, மார்ச் 17ஆம் தேதி நடைபெறும் இறுதி போட்டியில் டெல்லி அணியுடன் மோதவிருக்கிறது. 

Next Story

மகளிர் உலகக் கோப்பை; ஸ்மிருதி மந்தனா ரூல்ட் அவுட்!

Published on 11/02/2023 | Edited on 11/02/2023

 

Women's World Cup; Smriti Mandhana RULED OUT!!

 

இந்திய அணியின் துவக்க ஆட்டக்காரர் ஸ்மிருதி மந்தனா உலகக் கோப்பையின் முதல் லீக் ஆட்டத்தில் விளையாட மாட்டார் எனத் தெரிகிறது.

 

8 ஆவது பெண்கள் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி தென் ஆப்பிரிக்காவில் நடக்கிறது. பிப்ரவரி 26 வரை நடக்கும் இந்தப் போட்டியில் 10 அணிகள் இரு பிரிவுகளாக பங்கேற்றுள்ளன. பிரிவு ‘ஏ’ வில் ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, தென் ஆப்பிரிக்கா, இலங்கை, வங்காளதேசம் என ஐந்து அணிகளும் பிரிவு ‘பி’ யில் இந்தியா, பாகிஸ்தான், இங்கிலாந்து, வெஸ்ட் இண்டீஸ், அயர்லாந்து என ஐந்து அணிகளும் இடம்பெற்றுள்ளன. லீக் சுற்றின் முடிவில் இரு பிரிவுகளிலும் முதல் இரு இடங்களைப் பிடிக்கும் அணிகள் அரையிறுதி போட்டிக்கு தகுதி பெறும். 

 

இந்நிலையில் இன்று பார்ல் நகரில் இரண்டு லீக் போட்டிகள் நடக்க உள்ளது. இதில் இந்திய நேரப்படி மாலை 6.30 மணியளவில் நடக்கும் போட்டியில் இங்கிலாந்தும் வெஸ்ட் இண்டீஸ் அணியும் மோத உள்ளன. இரவு 10.30 மணியளவில் நடக்கும் மற்றொரு ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவும் நியூசிலாந்து அணிகளும் மோத உள்ளன. நாளை நடக்கும் போட்டியில் இந்தியா தன் முதல் லீக் போட்டியில் பாகிஸ்தானை எதிர்கொள்ள உள்ளது. பயிற்சி ஆட்டத்தின் போது இடது கை விரலில் ஏற்பட்ட காயம் காரணமாக இந்திய அணியின் துவக்க ஆட்டக்காரரும் துணைக் கேப்டனுமான ஸ்மிருதி மந்தனா காயத்திலிருந்து இன்னும் மீளாத காரணத்தினால் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் விளையாடுவாரா என சந்தேகம் எழுந்துள்ளது. 

 

ஸ்மிருதி மந்தனா வங்கதேசத்திற்கு எதிரான இரண்டாவது பயிற்சி ஆட்டத்தில் பங்கேற்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. கடந்த இரண்டு ஆண்டுகளாக, மந்தனா டி20 உலகக் கோப்பையில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். 2021 டி20 உலகக் கோப்பையில், இந்திய அணியில் அதிக ரன்கள் எடுத்த வீராங்கனைகள் பட்டியலில் முதல் இடத்தில் இருந்தார். 5 ஆட்டங்களில் 235 ரன்களை குவித்தார்.

 

அதேபோல் 2022 டி20 உலகக் கோப்பையிலும் மந்தனா சிறப்பான ஆட்டத்தை தொடர்ந்தார். அந்த தொடரில் 6 இன்னிங்ஸ்கள் ஆடி 38 ரன்கள் சராசரி உடனும் 144 ஸ்ட்ரைக் ரேட்டிலும் ஆடி 228 ரன்களை எடுத்தார். விரைவாக ரன்களை அடிக்கும் திறமையால், மிடில் ஆர்டரில் இந்திய அணிக்கு தொடக்கம் மற்றும் மிடில் ஓவர்களில் இந்திய அணியின் மிகப் பெரிய பலமாக இருந்தார். எனவே, பாகிஸ்தானுக்கு எதிரான முதல் போட்டியில் மந்தனா இல்லாதது இந்திய அணிக்கு பெரிய இழப்பாகும்.