Skip to main content

நண்பனைப் போல சர்க்கரை நோயா ?

Published on 05/02/2019 | Edited on 09/02/2019

இன்று டீ கடைகளுக்கு சென்றோம் என்றால் டீ போடுபவரிடம் சொல்வது சுகர் கம்மியா டீ அல்லது காபி போடுங்கனு தான் அந்த அளவுக்கு சர்க்கரை நோய் இன்று உள்ள மனிதர்களிடம் பரவிக் கிடக்கிறது. உலகைப் பயமுறுத்தும் முக்கிய மான நோய்களுள், முன்னணி வகிப்பது இந்தச் சர்க்கரை நோய்தான்... இதை நோய் என்று அழைப்பதைவிட குறைபாடு என்றே அழைக்கலாம்.உடனிருந்தே கொல்லும் நண்பன்போல், உங்கள் உள்ளிருந்தே கொல்லும் நண்பன்தான் சர்க்கரைநோய். உடம்பின் ஆதாரண சக்திகள் யாவற்றையும் அழித்து, உடலையே நீராய் இழியச் செய்யும்  தன்மை கொண்டது.நம்மில் வயசு வித்தியாசம் இல்லாமல் இன்று பெரும்பாலான மனிதர்களுக்கு இந்த நோய் உள்ளது .

 

sugar

இந்நோய்க்கு இதுதான் காரணம் என்று கண்டிப்பாய் வகைப்படுத்த இயலாது. ஒருவர் அதிக இனிப்பு உண்டால், அதனால் சர்க்கரை வியாதி வரவாய்ப்புக்கள் குறைவு என்பதை சமீபத்திய ஆய்வுகள் நிரூபணம் செய்கிறது.
கீழ்கண்ட காரணங்கள் சர்க்கரை நோய் வர ஏதுவாகலாம்.
1. பரம்பரை ஒரு காரணமாகலாம்.
2. உடலுழைப்பு, வியர்வை வெளிவராத தன்மை பெற்ற வாழ்க்கை நிலையும் ஒரு காரணமாகலாம்.
3. நகர்புற வாழ்வியல் சூழல், சர்க்கரை நோய்வர மிகுதியான காரணமாகிறது.
4. முறையற்ற உணவுப்பழக்கம், மதுப்பழக்கம், புகைப் பழக்கம், போதைப்பழக்கம் இவையும் காரணமாகலாம்.
5. உணவில் அதிக காரப்பொருட்கள், மாவுப்பொருட் கள், கொழுப்பு உணவுகள் தேவைக்கு மேல் கொள்ளும் பொழுது இந்நோய் வர சாத்தியமாகிறது.
இறுதியாக நீரிழிவு (உண்ஹக்ஷங்ற்ங்ள்) வர, உடலைக் கெடுக்கும் பல்வேறு காரணிகளின் ஒட்டுமொத்த காரணமாக இந்தச் சர்க்கரைநோய் என்று முடிவுக்கு வரலாம்.

சர்க்கரை நோய் யாருக்கு வரும்...?
சித்த மருத்துவ சாஸ்திரம் பின்வரும் காரணங்களை நோய்க்கான காரணிகளாக வகைப்படுத்துகிறது. அதிக அளவில் இனிப்புச் சுவையுள்ள பொருட்களை உண்ணுதல். நெய், பால், மீன், கருவாடு, கோழி, ஆட்டிறைச்சி, மாட்டி றைச்சி போன்றவற்றை அதிக அளவில் உண்ணுதல். வேகாத உணவுப் பொருட்கள், வடை, போண்டா, பஜ்ஜி, பூரி போன்ற மந்தப் பொருட்களை அதிகம் உண்ணுதல். அடிக்கடி உடலுறவில் ஈடுபடுதல், உணவு உண்டதும் உடலுறவு கொள்ளல் போன்ற காரணிகளால், சர்க்கரை நோய் தோன்றுவதாக  சித்த மருத்துவம் கூறுகிறது. அதனால் சர்க்கரை நோய் உள்ளவர்கள் சரியான வாழ்க்கை முறை மூலம் இதனை கட்டுப் படுத்தலாம் .

Next Story

பழனி முருகன் கோவிலுக்கு நாட்டுச் சர்க்கரை கொள்முதல்

Published on 21/04/2024 | Edited on 21/04/2024
Procurement of native sugar for Palani Murugan temple

பழனி, தண்டாயுதபாணி சுவாமி கோவிலுக்கு பஞ்சாமிர்தம் உள்ளிட்ட பிரசாதங்கள் தயாரிக்க ஈரோடு மாவட்டம், கவுந்தப்பாடி ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் இருந்து கரும்புச் சர்க்கரை எனப்படும் நாட்டுச் சர்க்கரை கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது.

அதன்படி, நேற்று நடைபெற்ற ஏலத்தில் பங்கேற்க சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகள் 1,610 மூட்டைகள் நாட்டுச் சர்க்கரையை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர்.அதில், 60 கிலோ எடையிலான ஒரு மூட்டை, முதல் தரம், குறைந்தபட்ச விலையாக ரூ. 2,570க்கும், அதிகபட்சமாக ரூ. 2,600க்கும் விற்பனையானது. சராசரி விலையாக ரூ. 2,580க்கு விற்பனையானது.

இரண்டாம் தரம், குறைந்தபட்ச விலையாக ஒரு மூட்டை ரூ. 2,510க்கும், அதிகபட்சமாக ரூ. 2,520க்கும், சராசரி விலையாக ரூ. 2,520க்கும் விற்பனையானது.இதில், மொத்தம் 85 ஆயிரத்து 20 கிலோ எடையிலான 1,417 நாட்டுச் சர்க்கரை மூட்டைகள் விற்பனையாகின.இதன் விற்பனை மதிப்பு ரூ. 36 லட்சத்து 16 ஆயிரத்து 300 ஆகும் என விற்பனைக்கூட கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

Next Story

தேங்காய் நீரில் சர்க்கரை நோய்க்கு மருந்து கண்டுபிடிப்பு; பொள்ளாட்சி இளைஞர் அசத்தல்

Published on 14/12/2023 | Edited on 14/12/2023
Pollachi youth discovered cure for diabetes in coconut water

கோயம்புத்தூர் மாவட்டத்தில் கிணத்துக்கடவு அருகே அமைந்துள்ளது பொள்ளாச்சி நகராட்சி. இப்பகுதியைச் சேர்ந்தவர் பட்டதாரி இளைஞர் விவேகானந்தன். இவர், அப்பகுதியின் பாரம்பரிய விவசாயமான தென்னை விவசாயம் செய்யும் குடும்பத்தை சேர்ந்தவர். பெரிய அளவில் விவசாயத்தின் மீது இருந்த நாட்டத்தினால், விவசாய பொருட்களை மதிப்புக்கூட்டி, மாற்று பொருளாக மக்களுக்கு பயன்படும் வகையில் உருவாக்க ஆசைப்பட்டுள்ளார்.

அந்த வகையில், தனது சுற்று வட்டார பகுதியில் உற்பத்தியாகும் தேங்காய்கள் பெரும்பாலும் கொப்பரையாக மாற்றப்படுவதை அறிந்து, அந்த இடங்களுக்கு எல்லாம் சென்று ஆய்வு நடத்தியுள்ளார். அப்போது, உடைக்கப்படும் தேங்காய்களிலிருக்கும் தண்ணீர் பயன்பாடின்றி வீணாக்கப்படுவதை கவனித்துள்ளார். உடனே, அந்த தேங்காய் தண்ணீரை வைத்து வேறு ஏதேனும் மதிப்பு கூட்டு பொருட்கள் செய்யலாமா? என்ற கோணத்தில் ஆய்வு நடத்தியுள்ளார். அந்த ஆய்விற்கு கோவையில் உள்ள பிரபல மருத்துவமனை கைகொடுத்துள்ளது. அந்த தனியார் மருத்துவமனை உதவியுடன் கடந்த 2020ஆம் ஆண்டிலிருந்து ஆராய்ச்சியில் ஈடுபட்டு வந்துள்ளார்.

அந்த ஆராய்ச்சியானது, தேங்காய் தண்ணீரிலிருந்து ஏதேனும் மருத்துவ பொருட்களை தயாரிக்க முடியுமா? என்ற வகையில் அமைந்துள்ளது. அந்த ஆய்வின் வெற்றியாக, 2023ம் ஆண்டு ஆண்டு இறுதியில் தேங்காய் தண்ணீரை மூலப்பொருளாக கொண்டு, நீண்ட நாட்களாக ஆராத சர்க்கரை நோய் புண், தீக்காயம் ஆகியவற்றை குணமாக்க மருந்து கண்டறியப்பட்டுள்ளது. அந்த மருந்து சோதனைக்கு அனுப்பப்பட்டு அங்கேயும் வெற்றி கண்டுள்ளது. அதனை அங்கீகரிக்கும் வகையில், நவம்பர் 5ம் தேதி டெல்லியில் நடைப்பெற்ற நிகழ்ச்சியில் ஜனாதிபதி திரௌபதி முர்மு விருதும் வழங்கி கவுரவித்துள்ளார். இதற்கிடையில், இந்த ஆராய்ச்சியை மேம்படுத்த மத்திய அரசின் அறிவியல் தொழில்நுட்பத்துறை 80 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கியுள்ளது. மேலும், பொள்ளாச்சியிலேயே தொழிற்சாலை தொடங்கி மருந்தை தயாரிக்க அனுமதியும், காப்புரிமையும் வழங்கியுள்ளது. உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் முதல் மருந்து என்பதால், வருகின்ற 2024 ம் ஆண்டின் தொடக்கத்தில் விற்பனைக்கு வரும் என தகவல் வெளியாகியுள்ளது.

இது குறித்து நெகிழ்ச்சியுடன் பேசிய மருந்து கண்டுபிடிப்பாளர் விவேகானந்தன், “நான் உயர்கல்வி அமெரிக்காவில் முடித்தேன். அங்கு படிக்கும்போதே, எனக்கு மருத்துவத்துறையின் மீது இருந்த ஈடுபாட்டின் காரணமாக, வீணாகும் விவசாய பொருட்களிலிருந்து மருந்து கண்டுபிடிக்க வேண்டும் என ஆர்வம் இருந்தது. அந்த கனவு, இரண்டரை ஆண்டுகள் செய்த உழைப்பின் பலனாக தற்போது நிறைவேறியுள்ளது. கொங்கு மண்டலத்தில் உற்பத்தியாகும் 4500 கோடி தேங்காய்கள் பெரும்பாலும் கொப்பரைகளாக மாற்றப்படும்போது, அதிலிருந்து கிடைக்கும் மருத்துவ குணம் வாய்ந்த தேங்காய் தண்ணீர் வீணாக்கப்படுவதை அறிந்தோம். அந்த வீணாகும் தேங்காய் தண்ணீரை மூலப்பொருளாக கொண்டு சர்க்கரை நோய், நாட்பட்ட புண்கள் ஆகியவற்றை குணமாக்க மருந்து கண்டறியும் ஆராய்ச்சியில் ஈடுபட்டோம். அந்த ஆராய்ச்சியில் எனக்கு வெற்றி கிடைத்தது. ஆராய்ச்சியை ஊக்குவிக்க மத்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை நிதி ஒதுக்கியுள்ளது.

மத்திய சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகத்தின் மருந்துகள் கட்டுப்பாட்டு அமைப்பு மருந்தை அங்கீகரித்துள்ளது. மருந்து தயாரிக்கும் தொழிற்சாலை பொள்ளாச்சியில் கட்டப்பட்டு, மருந்து தயாரிக்கும் பணி விரைவில் துவங்கவுள்ளது. விரைவில் மருந்து ஏழை மக்களும் பயன்பெறும் வகையில் குறைந்த விலைக்கு வழங்க உள்ளோம். நாங்கள் கண்டுபிடித்த மருந்தானது பயோ செல்லுலோஸ் வகையை சார்ந்தது. இந்த கண்டுபிடிப்பின் மூலம் கோகோ லைஃப், கோகோ ஷீல்டு, கோகோ ஹீல் போன்ற மருந்துகள் சந்தைப்படுத்த காத்திருக்கின்றன. இதனை புண்ணின் மேற்பரப்பில் மருந்துக்கட்டாக பயன்படுத்த வேண்டும். மேலும், மருந்திற்கான மூலப்பொருட்கள் விவசாயிகளிடமிருந்து தான் வாங்க இருக்கிறோம், அதன் மூலம் விவசாயிகளும் பயன் பெறுவர்” என கூறினார். 

கோவையில், வீணாகும் தேங்காய் தண்ணீரை கொண்டு மருந்து கண்டுபிடித்த சம்பவம் தமிழக மக்களிடம் வெகுவாக பாராட்டைப் பெற்று வருகிறது.