Skip to main content

“ஓவர் சூடு உடம்புக்கு ஆகாது” - மருத்துவர் அருணாச்சலம் விளக்கம்

Published on 08/12/2022 | Edited on 08/12/2022

 

“Overheating does harm the body” - Dr. Arunachalam explained

 

காலநிலை மாற்றத்தால் வரும் உடல் சார்ந்த பிரச்சனைகள், தூக்கம் தொடர்பான கேள்விகளுக்கு நக்கீரன் நலம் யூடியூப் சேனலுக்கு மருத்துவர் அருணாச்சலம் தொடர்ந்து விளக்கம் அளித்து வருகிறார். அதன் தொடர்ச்சியாக அதிகப்படியான சூடு உடம்பில் ஏற்பட காரணம் என்ன அவற்றை சரி செய்து கொள்ள என்ன செய்ய வேண்டும் என்று விளக்கம் அளித்திருக்கிறார். அதை பின்வருமாறு பார்ப்போம்... 

 

சில டிரைவர்கள், டெய்லர்கள் எல்லாம் சொல்வார்கள்  ‘எங்களுக்கு உட்கார்ந்து வேலை செய்வதால் மூலநோய் வருவதாக சொல்வார்கள்’ அப்படி எல்லாம் எல்லாருக்கும் நடக்காது. அதிகம் தண்ணீர் குடிக்காததால் வருவது சூடு என்பது அப்பட்டமாக எல்லாருக்கும் தெரியும். ஒரு நாளைக்கு தேவையான தண்ணீரை காலை ஏழு மணியில் இருந்து மாலை ஏழு மணிக்குள் ரெண்டு லிட்டர் தண்ணீர் ஆவது குடித்தால் தான் சூடு வராது. இரண்டு விஷயத்தைச் சூடு என்று சொல்லுவார்கள். தோலை சுத்தமாக வைக்காததால் வரும் கட்டியும், புண்ணும். சிறுநீர் கழிக்கும் போது ஏற்படும் சூடும். இது எல்லாம் உடலில் நீர் இல்லாத அறிகுறிதான்.

 

திருநெல்வேலி பக்கத்தில் பாணிக்கானு சொல்லுவார்கள். பித்தளை சொம்பு எடுத்து புளியையும் கருப்பட்டியையும் கரைத்து கொடுப்பார்கள். புளிப்பு தண்ணீராக இருக்கும். ஒரு லிட்டர் கொடுப்பார்கள். அடுத்த இருபது நிமிடத்தில் கிட்னி ஹைடிரேட் செய்து பிறப்புறுப்பு வரைக்கும் தண்ணீர் வந்ததும் ஒரு நிவாரணம் கிடைக்கும். 

 

சூடு என்று சொல்லுபவர்கள், தண்ணீர் குடிக்காததால் வருகிறது என்று மனதில் வைத்துக் கொள்ள வேண்டும். காய்கள், பழங்கள் எல்லாம் சாப்பிடாமல்,  மட்டன் சாப்பிட்டேன், அதனால் மூலம் வந்து விட்டது என்பது தவறான தகவல். கோழி, ஆடு இதனால் சூடு வருவது இல்லை. மட்டன் சாப்பிட்டால் வருகிறது என்றால், அதனுடன் தக்காளி,  வெஜிடபிள் சாலட், வெள்ளரி, கேரட், வெங்காயத்துடன் சேர்த்து சாப்பிடாதது தான் காரணம். எனவே அவற்றையெல்லாம் சேர்த்துக் கொண்டால் சூட்டைக் குறைக்கலாம்.

 

வேடிக்கையாக உள்ள விஷயம் என்னவென்றால், சர்க்கரை வியாதி வரும் வரைக்கும் பழங்களை சாப்பிடுங்கள் என்று சொன்னால் சாப்பிடுவதில்லை. ஆனால் சர்க்கரை வியாதி வந்த பிறகு பழங்களை சாப்பிட வேண்டாம் என்று சொன்னால், நம் பேச்சை கேட்காமல் சாப்பிட்டு விடுகின்றனர்.  அவர்கள் தவிர்த்துக் கொள்ள வேண்டும். அது அவர்களின் உடலுக்கு நல்லது

 

 

Next Story

வெப்ப அலை முன்னெச்சரிக்கை; ஓ.ஆர்.எஸ் கொடுக்க ஏற்பாடு

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
nn

கோடை காலம் தொடங்கிய நிலையில் தமிழகத்தில் வெப்ப அலைக்கான எச்சரிக்கைகளை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. சில நாட்களாகவே தமிழகத்தில் வெயில் செஞ்சுரி அடித்து வருகிறது. இந்தநிலையில் வெட்ப அலை காரணமாக மக்களுக்கு நீர்ச்சத்து இழப்பு ஏற்படுவதை தடுப்பதற்கு ஓ.ஆர்.எஸ் கரைசல் வழங்க பொது சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது. அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் போதிய அளவில் ஓ.ஆர்.எஸ் கரைசல் பாக்கெட்டுகள் இருப்பில் வைக்கும்படி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் பொதுமக்கள் தாங்களாகவே சென்று இந்த ஓ.ஆர்.எஸ் கரைசலைப் பெற்றுக் கொள்ளலாம் எனவும் கூறப்பட்டுள்ளது. குறிப்பாக விவசாயக் கூலித் தொழிலாளிகள், கட்டுமான தொழிலாளர்கள், சாலையோர வியாபாரிகள் ஆகியோருக்கு இந்தக் கரைசலை விநியோகிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

Next Story

100 ரூபாயில் மருத்துவப் புரட்சி; டாடாவின் மைல்கல் சாதனை  

Published on 01/03/2024 | Edited on 01/03/2024
100 rupees to cure cancer; Tata's milestone achievement

உலகில் மிகவும் கொடுமையான நோய்களில் ஒன்றாக கருதப்படுவது புற்றுநோய். தீர்க்க முடியாத அல்லது எளியோரால் சிகிச்சை எடுக்க முடியாத அளவிற்கு மிகக் கொடூரமானதாகக் கருதப்படுகிறது. விலை உயர்ந்த மாத்திரைகள், மருந்துகள், சிகிச்சை முறைகள் எடுத்துக் கொண்ட பிறகு அதிலிருந்து முற்றிலும் விடுபட முடியும். அதிலும் முதல் நிலையிலேயே புற்றுநோய் கண்டறியப்பட்டால் அதிலிருந்து மீள்வது எளிது என்பவையெல்லாம் மருத்துவத் துறையின் கூற்றுகளாக இத்தனை வருடங்கள் இருந்து வருகிறது.

அனைத்து துறைகளிலும் தொழில்நுட்ப வசதிகள், புதிய கண்டுபிடிப்புகள் உலகை புதிய பாதையை நோக்கி அழைத்துச் செல்லும் நிலையில், மருத்துவத்துறையிலும் சில புதிய புரட்சிகள் அபரிமிதமாக நடைபெற்று வருகிறது. அந்த வகையில் கேன்சர் சிகிச்சைக்கு பல்லாண்டு காலமாகவே சிகிச்சைக்கான தீர்வு மற்றும் புற்றுநோயால் ஏற்படும் மரணங்களை குறைத்து உயிர் வாழ்தலை நீடிக்க வைப்பது போன்றவை மருத்துவத் துறைக்கு மிகப்பெரிய சவாலாக நீடித்து வந்தது.

இந்தியாவில் மட்டும் சராசரியாக ஆண்டுக்கு 14 லட்சம் பேர் புற்றுநோயால் பாதிக்கப்படுகின்றனர். அதில் ஒன்பது லட்சம் பேர் உயிரிழப்பதாக புள்ளி விவரங்கள் சொல்கின்றன. உலகில் பல்வேறு மூலைகளிலும் புற்றுநோயை முற்றிலுமாக குணப்படுத்துவதற்கான சிகிச்சை முறைகள் மற்றும் மருந்துகளுக்கான ஆய்வுகள் அனுதினமும் நடைபெற்று வருகிறது. இதுவரை அதற்கான முழு தீர்வு எட்டப்படவில்லை என்றே கூறலாம்.

100 rupees to cure cancer; Tata's milestone achievement

இந்நிலையில், மும்பையின் டாடா மெமோரியல் ஹாஸ்பிடல் மருத்துவர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்கள் கடந்த 10 ஆண்டுகளாகவே புற்றுநோய்க்கு மருந்து கண்டுபிடிக்கும் முயற்சியில் முழுமையாக ஈடுபட்டு வந்தனர். எலிகளை வைத்து நடைபெற்ற மருத்துவச் சோதனையில் அந்த மருந்து வெற்றியைக் கொடுத்திருக்கிறது. ஏற்கெனவே புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருபவர்களுக்கும் மீண்டும் புற்றுநோய் வராமல் தடுப்பதற்கு மற்றும் புற்றுநோய் சிகிச்சைக்காக எடுத்துக் கொள்ளும் மருத்துவ முறைகளில் ஏற்படும் பக்க விளைவுகளை 50% குறைப்பதாகவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

ஆர் பிளஸ் சியூ என்ற அந்த மாத்திரை, இந்திய தர நிர்ணய ஆணையத்தின் ஒப்புதல் கிடைத்த உடனே சந்தைகளில் விற்பனையாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதிலும் குறிப்பிடத்தகுந்த விஷயமாக புற்றுநோய் மருத்துவம் என்றாலே விலை உயர்ந்தது என்ற நிலையில் கண்டுபிடிக்கப்பட்ட மருந்தானது நூறு ரூபாய் என்ற குறைவான விலையில் விற்பனை செய்யப்படும் என டாடா நிறுவனம் தெரிவித்துள்ளதுதான்.