Skip to main content

இன்றைய ராசிப்பலன் - 22.10.2019

Published on 21/10/2019 | Edited on 21/10/2019

கணித்தவர் ஜோதிட மாமணி, முனைவர் முருகு பால முருகன்

No: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு, தபால் பெட்டி எண் - 2255. வடபழனி,
சென்னை - 600 026 தமிழ்நாடு, இந்தியா. Cell: 0091 7200163001. 9383763001

இன்றைய  பஞ்சாங்கம்

22-10-2019, ஐப்பசி 05, செவ்வாய்க்கிழமை, நவமி திதி இரவு 03.33 வரை பின்பு தேய்பிறை தசமி. பூசம் 
நட்சத்திரம்  மாலை 04.38 வரை பின்பு ஆயில்யம். நாள் முழுவதும் சித்தயோகம். நேத்திரம் - 1. 
ஜீவன் - 1/2. முருக -  நவகிரக வழிபாடு நல்லது. சுபமுயற்சிகளையும் பயணங்களையும் தவிர்க்கவும். 

 

இராகு காலம் மதியம் 03.00-04.30, எம கண்டம் காலை 09.00-10.30, குளிகன் மதியம் 12.00-.30, 
சுப ஹோரைகள்  காலை 8.00-9.00, மதியம் 12.00-01.00, மாலை 04.30-05.00, இரவு 07.00-08.00, 10.00-12.00. 

 

mesham

மேஷம்

இன்று தொழில், வியாபாரத்தில் எதிர்பாராத செலவுகள் ஏற்படலாம். குடும்பத்தில் பிள்ளைகளால் 
அமைதியற்ற சூழ்நிலை நிலவும். எந்த செயலையும் ஒருமுறைக்கு பலமுறை சிந்தித்து செயல்பட்டால் 
மட்டுமே வெற்றி அடைய  முடியும். நண்பர்களின் ஒத்துழைப்பு கிட்டும். தெய்வ வழிபாடு நன்மை தரும். 

 

reshabam

ரிஷபம்

இன்று வீட்டில் மங்கள நிகழ்வுகள் நடைபெறும். உறவினர்கள் வருகை உள்ளத்திற்கு ஆனந்தத்தை 
தரும். தொழில் வியாபாரத்தில் பணியாட்கள் பொறுப்புடன் செயல்படுவார்கள். எதிர்பார்த்த 
லாபம் கிட்டும். வெளியூரில் இருந்து  நற்செய்தி கிடைப்பதற்கான சூழ்நிலை உருவாகும். புதிய பொருள் சேரும். 

.

3

மிதுனம்

இன்று குடும்பத்தில் உள்ளவர்களுடன் சிறு கருத்து வேறுபாடுகள் தோன்றும். பொருளாதார ரீதியாகவும் 
நெருக்கடிகள் ஏற்படலாம். தொழில் வளர்ச்சிக்கான செயல்களில் அதிக கவனம் செலுத்துவது 
நல்லது. எதிர்பார்த்த இடத்திலிருந்து  உதவிகள் சிறு தாமதத்திற்கு பின் கிட்டும். 

 

kadagam

கடகம்

இன்று எதிர்பாராத வகையில் திடீர் தனவரவு உண்டாகும். சுபகாரியங்கள் கைகூடும். 
வியாபாரத்தில் எதிரிகளால் இருந்த பிரச்சினைகள் விலகும். உத்தியோக ரீதியான வெளியூர் 
பயணங்களால் முன்னேற்றம் ஏற்படும். கொடுத்த  கடன்கள் வசூலாகும். உறவினர்கள் அனுகூலமாக இருப்பார்கள். 

 

5

சிம்மம்

இன்று உடல்நிலையில் சிறு உபாதைகள் வந்து நீங்கும். வீட்டில் பிள்ளைகளால் மன சங்கடங்கள் 
ஏற்படலாம். அலுவலகத்தில் தேவையற்ற இடமாற்றம் ஏற்படக்கூடிய சூழ்நிலை உருவாகும். 
உடனிருப்பவர்களை அனுசரித்து  செல்வது நல்லது. பயணங்களால் அனுகூலங்கள் உண்டாகும். 

 

kannirasi

கன்னி

இன்று எடுத்த காரியத்தை வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். குடும்பத்தில் பிள்ளைகளுடன் 
இருந்த கருத்து  வேறுபாடுகள் நீங்கும். வேலையில் சக நண்பர்கள் ஒற்றுமையாக செயல்படுவார்கள். 
சுபகாரிய முயற்சிகளில்  அனுகூலமான பலன்கள் உண்டாகும். எதிர்பார்த்த உதவிகள் எளிதில் கிடைக்கும். 

 

 

thulam

துலாம்

இன்று குடும்பத்தில் பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். பிள்ளைகள் அனுகூலமாக இருப்பார்கள். 
சுப செலவுகள்  ஏற்படும். தொழில் வளர்ச்சிக்காக எதிர்பார்த்த வங்கி கடன்கள் கிடைக்கும். 
சொத்து சம்பந்தமான வழக்குகளில்  வெற்றி பெரும் வாய்ப்புகள் ஏற்படும். சேமிப்பு உயரும். 

 

 

viruchagam

விருச்சிகம்

இன்று உங்கள் உடல் நிலையில் சோர்வும், மந்தமும் உண்டாகும். பிள்ளைகளுக்கு படிப்பில் ஆர்வம் 
குறையும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் அடைவதில் சிக்கல்கள் ஏற்படலாம். பெரிய மனிதர்களின் 
ஆதரவும் ஒத்துழைப்பும்  மனதிற்கு நிம்மதியை தரும். சுபகாரிய பேச்சுவார்த்தைகளில் நற்பலன் கிட்டும். 

 

 

danush

தனுசு

இன்று உங்களுக்கு மன உளைச்சல் ஏற்படும். மற்றவர்கள் மீது கோபப்படும் நிலை உருவாகும். 
உங்கள் ராசிக்கு  சந்திராஷ்டமம் இருப்பதால் மற்றவர்களிடம் தேவையில்லாமல் பேசுவதை
தவிர்க்கவும். வியாபாரத்தில் பெரிய தொகையை முதலீடு செய்யாமல் இருப்பது நல்லது. எதிலும் கவனம் தேவை. 

 

magaram

மகரம்

இன்று குடும்பத்தில் உறவினர்கள் மூலம் சுபசெய்திகள் வந்து சேரும். பொருளாதாரம் சிறப்பாக 
இருக்கும். வீட்டுத் தேவைகள் பூர்த்தியாகும். உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் அன்பையும், 
ஆதரவையும் பெறுவீர்கள். வியாபார  ரீதியாக பெரிய மனிதர்களின் அறிமுகம் கிடைக்கும். 

 

kumbam

கும்பம்

இன்று புது உற்சாகத்துடன் அனைத்து வேலைகளையும் செய்து முடிப்பீர்கள். குடும்பத்தில் இருந்த 
பிரச்சினைகள் விலகும். திருமண சுபமுயற்சிகளில் அனுகூலமான பலன்கள் உண்டாகும். உடல் 
ஆரோக்கியத்தில் கவனம் தேவை.  வீட்டிற்கு தேவையான பொருட்கள் வாங்கி மகிழ்வீர்கள். 

 

meenam

மீனம்

இன்று குடும்பத்தில் எதிர்பாராத செலவுகள் ஏற்படலாம். பிள்ளைகள் மூலம் வீண் மனசங்கடங்கள் 
உண்டாகும். விட்டு கொடுத்து சென்றால் பிரச்சினைகள் ஓரளவு குறையும். வியாபாரத்தில் ஓரளவு 
முன்னேற்றம் ஏற்படும்.  உத்தியோகஸ்தர்களுக்கு மேலதிகாரிகளின் அன்பும் ஆதரவும் கிட்டும்.