Skip to main content

அண்டைநாட்டு வன்முறையை ஒடுக்க அமைதிப்படையை அனுப்பிய ரஷ்யா!

Published on 06/01/2022 | Edited on 06/01/2022

 

peace keeping force

 

எண்ணெய் வளமிக்க மத்திய ஆசிய நாடான கஜகஸ்தானில், கார்களுக்கு பயன்படுத்தப்படும் திரவமாக்கப்பட்ட பெட்ரோலிய எரிவாயு எரிபொருளின் விலை உயர்த்தப்பட்டதை கண்டித்து, கடந்த ஞாயிற்று கிழமை போராட்டம் வெடித்தது. நாடு முழுவதும் பரவிய இந்த போராட்டம் வன்முறையாக மாறியுள்ளது.

 

இந்த வன்முறையில் 1000 பேர் காயமடைந்துள்ளதாகவும், 400 பேர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், அவர்களில் 62 பேர் தீவிர சிகிச்சை பிரிவில் இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. அதேபோல் கஜகஸ்தானின் பெரிய நகரமான அல்மாட்டியில் 12க்கும் மேற்பட்ட கலவரக்காரர்களை கொன்றுள்ளதாக அந்தநாட்டு பாதுகாப்பு படைகள் தெரிவித்துள்ளன. அதேநேரத்தில் கலவரத்தில் 12 பாதுகாப்பு படை வீரர்கள் உயிரிழந்துள்ளனர். 353 பேர் காயமடைந்துள்ளனர்.

 

கஜகஸ்தான் அரசு கூண்டோடு ராஜினாமா செய்தபிறகும் தொடர்ந்து கொண்டிருக்கும் வன்முறை காரணமாக, அந்தநாட்டின் அதிபர் காசிம்-ஜோமார்ட் டோகாயேவ், நாடு முழுவதும் ஜனவரி 19 ஆம் தேதி வரை அவசரநிலையை பிரகடனப்படுத்தியுள்ளார். மேலும் அந்தநாட்டில் இணைய சேவைகள் முடக்கப்பட்டு, குறுஞ்செய்தி செயலிகள் தடை விதிக்கப்பட்டுள்ளது.

 

மேலும் வன்முறையில் வெளிநாடுகளில் பயிற்சிபெற்ற பயங்கரவாத குழுக்கள் ஈடுபட்டு வருவதாகவும், அவர்கள் தற்போது நாடு முழுவதும் பரவியுள்ளதாகவும், கட்டிடங்கள் மற்றும் உள்கட்டமைப்பைக் கைப்பற்றுகிறார்கள், மிக முக்கியமாக, சிறிய ஆயுதங்கள் இருக்கும் வளாகங்களைக் கைப்பற்றுகிறார்கள் எனவும் தெரிவித்த  அதிபர் காசிம்-ஜோமார்ட் டோகாயேவ், இந்த தீவிரவாத அச்சுறுத்துதலை முறியடிக்க உதவுமாறு ரஷ்யா, பெலாரஸ், ஆர்மீனியா, கஜகஸ்தான், கிர்கிஸ்தான் மற்றும் தஜிகிஸ்தான் ஆகிய நாடுகளின் இராணுவ கூட்டமைப்பான கூட்டு பாதுகாப்பு ஒப்பந்த அமைப்பிடம் வேண்டுகோள் விடுத்தார்.

 

இதனைத்தொடர்ந்து கஜகஸ்தானில் அமைதியை நிலைநாட்ட படைகளை அனுப்ப கூட்டு பாதுகாப்பு ஒப்பந்த அமைப்பு முடிவு செய்தது. அதனைத்தொடர்ந்து  ரஷ்ய வீரர்கள் கஜகஸ்தானில் களமிறங்கியுள்ளனர். இதன்தொடர்ச்சியாக பெலாரஸ், ஆர்மீனியா, கிர்கிஸ்தான் மற்றும் தஜிகிஸ்தான் படை வீரர்களும் கஜகஸ்தானுக்கு விரைவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

ரஷ்யா, பெலாரஸ், ஆர்மீனியா, கஜகஸ்தான், கிர்கிஸ்தான் மற்றும் தஜிகிஸ்தான் ஆகியவை முன்னர் சோவியத் யூனியனாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

கண்மூடித்தனமான துப்பாக்கிச் சூடு; 70 பேர் உயிரிழப்பு

Published on 23/03/2024 | Edited on 23/03/2024
 Indiscriminate shooting; 70 people lost their lives

ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 70 பேர் உயிரிழந்தது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த தாக்குதல் சம்பவத்திற்கு ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்பு  பொறுப்பேற்றுள்ளது. உலக அளவில் பல்வேறு நாடுகளில் இருந்து இந்த தாக்குதல் சம்பவத்திற்கு கண்டனங்கள் குவிந்து வருகிறது.

ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் உள்ள இசை நிகழ்ச்சி அரங்கில் எதிர்பாராதவிதமாக பயங்கர ஆயுதங்களுடன் நுழைந்த கும்பல் அங்கிருந்த மக்களை நோக்கி துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்டது. இந்த கண்மூடித்தனமான துப்பாக்கிச் சூடு தாக்குதலில் 70 பேர் உயிரிழந்துள்ளனர். 140க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர். இதற்கு உலக தலைவர்கள் பலரும் கண்டனங்களை தெரிவித்து வரும் நிலையில், பிரதமர் மோடி எக்ஸ் சமூக வலைதளத்தின் வாயிலாக இந்த தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார். 'இந்த துயரமான நேரத்தில் ரஷ்ய கூட்டமைப்பின் அரசாங்கத்திற்கு இந்திய அரசும், இந்திய மக்களும் துணை நிற்போம்' எனத் தெரிவித்துள்ளார்.

 

Next Story

“3ஆம் உலகப்போர் உருவாகும்...” - ரஷ்ய அதிபர் எச்சரிக்கை

Published on 18/03/2024 | Edited on 18/03/2024
 Russian president warns about World War 3

உக்ரைன் - ரஷ்யா இடையே, கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேலாக போர் நீடித்து வருகிறது.  இதில், உக்ரைனை நிலம், நீர் உள்ளிட்ட பகுதிகளில் சூழ்ந்து கொண்டு மீண்டும் ரஷ்யா தீவிர தாக்குதலை தொடுத்து வருகிறது. இந்த போரை முடிவுக்கு கொண்டு வர பல்வேறு நாடுகள் முயன்றும், போர் நின்றபாடில்லை. அதே வேளையில், உக்ரைனுக்கு அமெரிக்கா தொடர்ந்து போர் ஆயுதங்களை வழங்கி வருவதாக ரஷ்யா தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறது. இந்த நிலையில், மூன்றாம் உலகப் போர் உருவாகும் சூழல் வரும் என்று ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

ரஷ்யாவில் 6 ஆண்டுகளுக்கு பிறகு ஒரு முறை அதிபர் தேர்தல் நடத்தப்படுகிறது. அந்த வகையில், ரஷ்ய அதிபரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல், கடந்த மார்ச் 15ஆம் தேதி முதல் 17ஆம் தேதி வரை நடைபெற்றது. இந்த தேர்தலில், ரஷ்ய கம்யூனிஸ்ட் கட்சி, தேசிய சுதந்திர ஜனநாயகக் கட்சி, புதிய மக்கள் கட்சி ஆகியவை களம் கண்டன. ரஷ்ய வரலாற்றில் முதல்முறையாக நடைபெற்ற 3 நாட்கள் வாக்குப்பதிவில், 3வது முறையாக அதிபர் தேர்தலில் புதின் மாபெரும் வெற்றி பெற்றுள்ளார். ஸ்டாலினுக்கு பிறகு தொடர்ச்சியாக 3வது முறையாக வெற்றி பெற்ற புதின், 200 ஆண்டுகளுக்கு பின்னர் மீண்டும் ஒரு சாதனையை படைத்துள்ளார். 

அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றிருக்கும், புதின் பேசியதாவது, “அமெரிக்க தலைமையிலான நேட்டோ படைகளும், ரஷ்யாவும் நேருக்கு நேர் மோதிக்கொள்வது என்பது முழு அளவிலான மூன்றாம் உலகப் போரை நோக்கி ஒரு படி தொலைவில் இருக்கும் என அர்த்தம். இது அனைவருக்கும் தெளிவாகத் தெரிகிறது. ஆனால், அத்தகைய சூழலை யாரும் விரும்பவில்லை. அதே நேரத்தில், இந்த நவீன உலகில் எல்லாம் சாத்தியமே. உக்ரைனில் ஏற்கனவே, நேட்டோ இராணுவ வீரர்கள் உள்ளனர். அவர்களில் ஆங்கிலம் பேசும் வீரர்களும், பிரஞ்சு பேசும் வீரர்களும் உள்ளனர். அவர்கள் அங்கு அதிக எண்ணிக்கையில் இறந்து கொண்டிருக்கிறார்கள். சம்பந்தப்பட்ட நாடுகள் தங்கள் வீரர்களை திரும்பப் பெறுவது நலம்” என்று கூறினார். 

முன்னதாக தேர்தல் பரப்புரையின் போது, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின், அங்குள்ள தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர், “இங்கே எல்லாம் அணுசக்தி மோதல் வருவதாக நான் நினைக்கவில்லை. உக்ரைன் மீதும் அணு ஆயுதங்களைப் பயன்படுத்த வேண்டிய அவசியம் இல்லை. உக்ரைனுடனான பேச்சுவார்த்தைகளுக்கு ரஷ்யா தயாராக உள்ளது. ஆனால், அவை யதார்த்தத்தை அடிப்படையாகக் கொண்டிருக்க வேண்டும். அதே வேளையில், ராணுவ தொழில்நுட்பக் கண்ணோட்டத்தில் சிந்தித்தால், நாங்கள் நிச்சயமாக தயாராக இருக்கிறோம். 

அணு ஆயுத போரைத் தூண்டும் வகையில் எந்த ஒரு செயலிலும் அமெரிக்கா ஈடுபடாது என்று நம்புகிறோம். மேலும், அமெரிக்கா தனது ராணுவப் படைகளை ரஷ்ய எல்லையில் அல்லது உக்ரைனுக்கு அனுப்பினால், ரஷ்யா இந்த நடவடிக்கையில் ஈடுபடும் என்பதை அமெரிக்கா புரிந்து கொள்ளும். ஒருவேளை, அமெரிக்கா ஆணு ஆயுத சோதனை நடத்தினால், அதற்கு நாங்களும் தயாராக இருக்கிறோம்” என்று கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.