Skip to main content

இலங்கை பிரதமராக பொறுப்பேற்றுக்கொண்டார் ராஜபக்சே

Published on 29/10/2018 | Edited on 29/10/2018
mahinda rajapaksa


இலங்கையில் பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் அந்நாட்டு பிரதமராக ராஜபக்சே இன்று காலை பொறுப்பேற்றுக்கொண்டார். இலங்கை பிரதமர் அலுவலகத்தில் பணிகளை கவனிக்க தொடங்கினார். 
 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

மஹிந்த, பசில் ராஜபக்சே நாட்டை விட்டு வெளியேறத் தடை! 

Published on 15/07/2022 | Edited on 15/07/2022

 

Mahinda, Basil Rajapakse banned from leaving the country!

 

இலங்கையில் அமைதியை நிலைநாட்ட சிறப்புக் குழு ஒன்றை நியமிக்கப்பட்டிருப்பதாக இடைக்கால அதிபர் ரணில் விக்ரமசிங்கே தெரிவித்துள்ளார். வன்முறையில் ஈடுபடுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க, அந்த குழுவுக்கு அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். 

 

இலங்கையின் அதிபராக இருந்த கோத்தபய ராஜபக்சே, மக்களின் கிளர்ச்சியை அடுத்து, தனது பதவியை ராஜினாமா செய்திருக்கிறார். இலங்கையில் இருந்து வெளியேறி மாலத்தீவுக்கும், பின்னர் சிங்கப்பூருக்கும் சென்ற கோத்தபய ராஜபக்சே, அங்கிருந்து தனது பதவி விலகல் கடிதத்தை நாடாளுமன்ற சபாநாயகருக்கு அனுப்பினார். 

 

இதைத் தொடர்ந்து, ரணில் விக்ரமசிங்கே இடைக்கால அதிபராகப் பதவியேற்றுக் கொண்டார். அதைத் தொடர்ந்து, நாட்டு மக்களுக்கு தொலைக்காட்சி வாயிலாக உரையாற்றிய ரணில் விக்ரம்சிங்கே மக்கள் எதிர்பார்க்கும் அரசியல் மாற்றத்திற்கான வழியை ஏற்படுத்திக் கொடுக்க 19 ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தை அமல்படுத்த தேவையான நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளதாக தெரிவித்துள்ளார். 

 

போராடும் உரிமை அனைவருக்கும் உள்ளதாகவும், ஆனால், வன்முறையை அனுமதிக்க முடியாது என்றும் தெரிவித்தார். நாட்டில் அமைதியை நிலைநாட்ட பாதுகாப்பு பதவிநிலை தலைமை அதிகாரி காவல்துறைத் தலைவர் முப்படைத் தளபதிகளை உள்ளடக்கிய சிறப்புக் குழுவை நியமித்திருப்பதாகவும், வன்முறையாளர்களுக்கு எதிராக அரசியல் தலையீடு இன்றி நடவடிக்கை எடுக்க முழு அதிகாரமும் அக்குழுவுக்கு உள்ளதாகவும் தெரிவித்தார். 

 

இதற்கிடையே, அதிபர் மாளிகை மற்றும் பிரதமர் இல்லம், பிரதமர் அலுவலகம் உள்ளிட்ட இடங்களில் இருந்து ஏற்கனவே போராட்டக்காரர்கள் வெளியேறிய நிலையில், இந்த மாளிகையில் ஏற்பட்டுள்ள சேதங்களைக் கணக்கிடும் பணிகள் தொடங்கியுள்ளன. 

 

இந்த சூழலில், மஹிந்த ராஜபக்சே, பசில் ராஜபக்சே ஆகியோர் இலங்கையை விட்டு வெளியேற வரும் ஜூலை 28- ஆம் தேதி வரை தடை விதித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இருவரும் நாட்டை விட்டு தப்ப வாய்ப்புள்ளதாகக் கூறி தொடரப்பட்ட வழக்கில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 

 

Next Story

இலங்கை தலைவர்களுக்கு ஒத்துவராத 9- ஆம் தேதி! 

Published on 09/07/2022 | Edited on 09/07/2022

 

The 9th date is not suitable for Sri Lankan leaders!

 

இலங்கையில் நிலவும் கடும் பொருளாதார நெருக்கடி காரணமாக, எரிபொருள், உணவு போன்ற அத்தியாவசிய தேவைகளுக்கு கடும் பஞ்சம் ஏற்பட்டுள்ளது. மேலும், சுகாதாரத்துறை, ராணுவம், பொதுப்போக்குவரத்து ஆகிய மூன்று துறைகளுக்கு மட்டுமே பெட்ரோல், டீசல் வழங்கப்படும் என்று இலங்கை அரசு அறிவித்திருந்தது. பொதுப்போக்குவரத்து தவிர எந்தவொரு தனியார் வாகனமும் இயங்காத சூழலில் உணவுப்பொருட்களை ஓரிடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு கொண்டு செல்வதற்கோ, மருந்துப் பொருட்களை கொண்டு செல்வதற்கோ மிகப்பெரிய சிரமத்தை மக்கள் சந்தித்து வருகின்றனர். 

 

இந்த நிலையில், பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காணாத இலங்கை அதிபர் கோத்தபய ராஜ்பக்சே பதவி விலக வலியுறுத்தி, இலங்கை முழுவதும் பொதுமக்கள், இளைஞர்கள், கிரிக்கெட் வீரர்கள், எதிர்க்கட்சித் தலைவர்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில், தலைநகர் கொழும்புவில் உள்ள அதிபர் மாளிகையை முற்றுகையிட்ட போராட்டக்காரர்கள், அதிபர் கோத்தபய ராஜபக்சேவை உடனடியாக பதவி விலக வேண்டும் என்று முழக்கமிட்டனர். 

 

அதிபர் மாளிகையின் நான்குபுறமும் போராட்டக்காரர்கள் சூழ்ந்துள்ளதை அறிந்த இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே அங்கிருந்து தப்பியோடிவிட்டார். அவர் ராணுவ தலைமையகத்தில் தஞ்சமடைந்துள்ளதாக அதிகாரப்பூர்வமற்ற தகவல்கள் வெளியாகியுள்ளது.

 

தடைகளைத் தாண்டி வந்த கூட்டத்தைக் கலைக்கப் போராட்டக்காரர்கள் மீது ராணுவத்தினர் கண்ணீர் புகைக்குண்டு வீசியும், துப்பாக்கிச் சூடும் நடத்தினர். துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த 33 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் இரண்டு பேர் உயிருக்கு ஆபத்தான நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். போராட்டக்காரர்கள் கடுமையாக தாக்கியதில் இலங்கை எம்.பி. ரஜிதா சேனரத்னாவும் படுகாயமடைந்தார். 

 

இதனிடையே, போராட்டக்காரர்கள் அதிபர் மாளிகைக்குள் நுழைந்தனர். தற்போது அதிபர் மாளிகை போராட்டக்காரர்களின் கட்டுப்பாட்டில் உள்ளது. அதிபர் மாளிகை நீச்சல் குளத்தில் குளித்து மகிழ்ந்த போராட்டக்காரர்கள், அங்குள்ள சொகுசு கார்களை ஓட்டி மகிழ்ந்தனர். இலங்கையில் அசாதாரண சூழ்நிலை நிலவும் நிலையில், இலங்கை நாடாளுமன்ற அவசரக் கூட்டத்தைக் கூட்ட சபாநாயகருக்கு பிரதமர் ரணில் விக்ரமசிங்கே கோரிக்கை விடுத்துள்ளார். 

 

இலங்கையில் 9- ஆம் தேதிகளில் முக்கிய நிகழ்வுகளும், மாற்றங்களும் ஏற்பட்டுள்ளது. அதன்படி, கடந்த மே மாதம் 9- ஆம் தேதி அன்று பசில் ராஜபக்சே தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார். அதைத் தொடர்ந்து, ஜூன் மாதம் 9- ஆம் தேதி அன்று மஹிந்தா ராஜபக்சே தனது பதவியை ராஜினாமா செய்து குடும்பத்துடன் தப்பியோடிவிட்டார். அதன் தொடர்ச்சியாக, இன்றைய தினம் அதிபருக்கு எதிரான போராட்டம் வலுத்துள்ள நிலையில், அவர் இன்று (09/07/2022) தனது பதவியை ராஜினாமா செய்வாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. 

 

இந்நிலையில், இலங்கையின் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கூறுகையில், இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே, பிரதமர் ரணில் விக்ரமசிங்கே பதவி விலக வேண்டும். இலங்கை பிரதமர் அழைப்பு விடுக்கும் எந்த கூட்டங்களிலும் ஐக்கிய மக்கள் சக்தி கட்சி பங்கேற்காது எனத் தெரிவித்துள்ளார்.

 

இதனிடையே, கொழும்பில் உள்ள அதிபர் மாளிகையில் அதிபர் கொடி அகற்றப்பட்டு இலங்கை கொடி ஏற்றப்பட்டது. அதேபோல், இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே பதவியை ராஜினாமா செய்ய இலங்கை பொதுஜன பெரமுனா கட்சியின் 16 எம்.பி.க்கள் வலியுறுத்தியுள்ளனர்.