Published on 03/09/2021 | Edited on 03/09/2021
கடந்த சில தினங்களுக்கு முன்பு கேஸ் சிலிண்டரின் விலை உயர்ந்து, தற்போது ரூ. 900க்கு விற்பனையாகிவருகிறது. இதற்குப் பல்வேறு தரப்புகளில் இருந்தும் கண்டனங்களும், எதிர்ப்பும் வந்துகொண்டிருக்கின்றன. இந்நிலையில், கேஸ் சிலிண்டர் விலை உயர்வைக் கண்டித்தும், மத்திய அரசைக் கண்டித்தும் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் சார்பில் அமைந்தகரை ஸ்கைவாக் அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.