சுதந்திர தினத்தையொட்டி பேரறிவாளன் உள்பட 7 பேரை விடுதலை செய்யவேண்டும் - ராமதாஸ்
பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

இவர்களில் பேரறிவாளன் ஏராளமான பிரச்சினைகளால் பாதிக்கப்பட்டு இருக்கிறார். தமிழக சட்டப்பேரவையில் எடப்பாடி பழனிசாமி, பேரறிவாளனை பரோலில் விடுதலை செய்ய அரசு நடவடிக்கை எடுக்கும் என்று வாக்குறுதியளித்தார். ஆனால், ஒரு மாதமாகியும் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை.
பேரறிவாளனின் உடல்நிலையை கருத்தில் கொண்டு உடனடியாக பரோலில் விடுவிக்கவேண்டும். பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரையும், வரும் 15–ந் தேதி சுதந்திர தினத்தையொட்டி நிரந்தரமாக விடுதலை செய்வதற்கான சட்ட நடவடிக்கைகளை மத்திய–மாநில அரசுகள் மேற்கொள்ளவேண்டும். இவ்வாறு கூறியுள்ளார்.