Skip to main content

நடிகர் ஜெய்க்கு பிடிவாரண்ட்

Published on 06/10/2017 | Edited on 06/10/2017
நடிகர் ஜெய்க்கு பிடிவாரண்ட்

தமிழ் சினிமா நடிகர் ஜெய், சில தினங்களுக்கு முன்பு இரவு நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு, சொகுசு காரில் வீட்டுக்குச் செல்லும் போது அடையார் அருகே தடுப்புச் சுவரில் மோதி விபத்துக்குள்ளானது. கார் மோதிய அதிர்ச்சியில் நடிகர் ஜெய்யும், நடிகரான அவரது நண்பரும் காருக்குள்ளேயே மயக்கத்தில் கிடந்துள்ளனர். இதைப்பார்த்த பொதுமக்கள் அடையாறு போக்குவரத்து புலனாய்வு போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

போக்குவரத்து போலீசார் விரைந்து வந்து காருக்குள் மயங்கி கிடந்த நடிகர் ஜெய்யை தட்டி எழுப்பினர். அப்போது போதையில் ஜெய் காரை ஓட்டிவந்து தெரியவந்தது. போலீசார் விசாரணைக்குப் பின், நடிகர் ஜெய் மீது குடிபோதையில் அதிவேகமாக காரை ஓட்டி விபத்தை உண்டாக்கியதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டது. பின்னர் அவர் கைது செய்யப்பட்டு ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.

தற்போது வழக்கு விசாரணைக்கு நடிகர் ஜெய் ஆஜராகாததால், அவருக்கு பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது. சைதாப்பேட்டை நீதிமன்ற நீதிபதி ஆப்ரகாம் லிங்கன் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.

சார்ந்த செய்திகள்