Skip to main content

விஷால் வேட்பு மனு ஏற்புக்கு கண்டனம் - அதிமுகவினர் சாலை மறியல்

Published on 06/12/2017 | Edited on 06/12/2017
விஷால் வேட்பு மனு ஏற்புக்கு கண்டனம் -
 அதிமுகவினர் சாலை மறியல்



நிராகரிக்கப்பட்ட விஷாலின் வேட்புமனு  ஏற்றுக்கொள்ளப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுகவினர் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிட விஷால் வேட்புமனு தாக்கல் செய்திருந்தார்.  இவர் வேட்புமனு தாக்கல் செய்ய முன்மொழிந்த தொகுதியைச்சேர்ந்த 10 பேரில் 2 பேர் திடீரென்று தாங்கள் முன்மொழியவில்லை என்று பின்வாங்கினர்.  இதனால் விஷாலின் வேட்புமனு நிராகரிக்கப்பட்டது. இதையடுத்து விஷால், என்னை முன்மொழிந்த அந்த 2 பேரும் மிரட்டப்பட்டுள்ளனர் என்று ஆடியோ ஆதாரத்துடன் தேர்தல் அதிகாரியிடம் முறையிட்டார். இதன் பின்னர் விஷாலின் வேட்பு மனு ஏற்கப்பட்டது.  

நிராகரிக்கப்பட்ட விஷாலின் வேட்பு மனு மீண்டும் ஏற்கப்பட்டதை கண்டித்து அதிமுகவினர் ஆர்.கே.நகரில் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர்.  

சார்ந்த செய்திகள்