Skip to main content

 15 ஆண்டுகளாக மூடிக்கிடக்கும் டான்காப் தொழிற்சாலையை திறக்கக்கோரி விருத்தாசலத்தில் பேரணி

Published on 12/02/2019 | Edited on 13/02/2019
வ்வ்

 

இந்திய புரட்சிகர மார்க்சிஸ்ட் கட்சியின் மாநில மாநாடு கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் நடைபெற்றது.  மாவட்ட கோகுல கிறிஸ்டிபன் தலைமையில் நடைபெற்ற இம்மாநாட்டில் அகில இந்திய சேர்மேன் கங்காதரன் சிறப்புரையாற்றினார்.  மாநாட்டில் தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் வேல்முருகன் வாழ்த்துரை வழங்கினார்.

 

z

 

முன்னதாக  கொளஞ்சியப்பர் அரசு கலைக்கல்லூரி முன்பாக இருந்து நூற்றுக்கணக்கானோர் கோரிக்கைகளை வலியுறுத்தி, முழக்கங்கள் எழுப்பி, பேரணியாக வந்தனர்.

 

zx

 

இந்த மாநாட்டில் மிகப்பெரிய மாவட்டங்களில் ஒன்றாக விழுப்புரம்,  பெரம்பலூர்,  அரியலூர்,  நாகப்பட்டினம்,  பாண்டிச்சேரி வரை பரந்து விரிந்துள்ளது கடலூர் மாவட்டம்.  இதனால் இம்மாவட்ட மக்கள் தலைநகரான கடலூர் சென்று தங்களுடைய பிரச்சனைகளுக்காக மாவட்ட நிர்வாகத்தை அணுகுவதற்கு பெரும் சிரமப்படுகின்றனர். பெரும் தொகையும்,  அதிக கால நேரமும் விரயமாகிறது.  எனவே கடலூர் மாவட்டத்தை இரண்டாக பிரித்து விருத்தாசலத்தை தலைமையிடமாக கொண்டு புதிய மாவட்டம் அறிவிக்க வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்தி கேட்டும்,  விருத்தாசலத்தில் 24 ஆண்டுகள் சிறப்பாக செயல்பட்டு வந்த சூரியகாந்தி,  மணிலா எண்ணெய் பிழியும் டான்காப் தொழிற்சாலை பல ஆண்டுகளாக மூடிக்கிடக்கிறது.  இதில் பணியாற்றிய ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் வேலையின்றி வாடுகின்றனர். 22 கோடி ரூபாய் மதிப்புடைய ஜெர்மன் நாட்டு இயந்திரங்கள் பயன்படுத்தப்படாமல் முடங்கி கிடக்கிறது.  ஆகவே தொழிற்சாலையை உடனடியாக மீண்டும் திறந்து தொழிலாளர்களுக்கும்,  விவசாயிகளுக்கும் வாழ்வளிக்குமாறு தமிழக அரசை வலியுறுத்தி கேட்டுக் கொள்வது உள்ளிட்ட தீர்மானங்கள் மாநாட்டில் நிறைவேற்றப்பட்டன.

 

சார்ந்த செய்திகள்

Next Story

அமைச்சர் வரை சென்ற வீடியோ; தனியார் பேருந்து ஓட்டுநர், நடத்துநரின் லைசென்ஸ் ரத்து

Published on 01/12/2023 | Edited on 01/12/2023

 

foul language to passengers; Cancellation of license of private bus driver operator

 

கடலூரில் பயணிகளிடம் தகாதமுறையில் பேசிய தனியார் பேருந்தின் ஓட்டுநர் மற்றும் நடத்துநரின் லைசென்ஸ் ரத்து செய்யப்பட்டுள்ளது.

 

கடலூர் பேருந்து நிலையத்திலிருந்து தினந்தோறும் நூற்றுக்கணக்கான பேருந்துகள் குறிஞ்சிப்பாடி, சிதம்பரம், விருத்தாசலம், திட்டக்குடி உள்ளிட்ட பகுதிகளுக்கு இயக்கப்படுகிறது. இதில் தனியார் பேருந்துகளும் அடக்கம். இந்நிலையில், நேற்று மாலை பேருந்து நிலையத்தில் தனியார் பேருந்து ஒன்று விருத்தாசலம் செல்ல ஆயத்தமாக நின்று கொண்டிருக்கிறது. அப்பொழுது பயணி ஒருவர் விருத்தாசலம் செல்லும் வழியில் உள்ள குறிஞ்சிப்பாடி நிறுத்தத்தில் இறங்கிக்கொள்ளவா என கேட்டுள்ளார். ஆனால் விருத்தாசலம் செல்பவர்கள் மட்டுமே ஏற வேண்டும் நடுவில் நிற்காது என தெரிவித்துள்ளார் அந்த பேருந்தின் நடத்துநர். அது மட்டுமல்லாது விருத்தாசலம் இல்லாவிட்டால் பேருந்தில் ஏறக்கூடாது என தகாத முறையில் பேசினார். இது தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி பலரது கண்டனத்தை பெற்றிருந்தது.

 

அங்கிருந்த பொதுமக்களும் நடத்துநரிடமும் ஓட்டுநரிடமும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இந்த வீடியோ குறிஞ்சிப்பாடி சட்டமன்ற உறுப்பினரும், அமைச்சருமான எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் கவனத்திற்கு சென்ற நிலையில், அந்த தனியார் பேருந்தில் ஓட்டுநர் மற்றும் நடத்துநரின் லைசென்ஸை ரத்து செய்து அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.

 

 

 

Next Story

சென்னையைச் சேர்ந்த பிரபல ரவுடி துப்பாக்கி முனையில் விருதாச்சலத்தில் கைது

Published on 08/10/2023 | Edited on 08/10/2023

 

 Famous Chennai-based rowdy arrested at gunpoint in Virudachalam

 

சென்னை முகப்பேர், நொளம்பூர் பகுதியைச் சேர்ந்த பிரபல ரவுடி டேனியல் ராஜா. சமீபத்தில் காஞ்சிபுரத்தில் என்கவுண்டர் செய்யப்பட்ட ரவுடி விஷ்வாவின் நெருங்கிய நண்பராக டேனியல் ராஜா இருந்துள்ளார். விஷ்வாவுடன் சேர்ந்து பல்வேறு கொலை வழக்குகள் மற்றும் கொலை முயற்சி, அடிதடி, வழிப்பறி உள்ளிட்ட குற்ற வழக்குகளில் தொடர்புடைய நபரான டேனியல் ராஜா போலீசாரால் தேடப்பட்டு வந்தார்.

 

தொடர்ந்து குற்ற வழக்குகளில் நீதிமன்றத்தில் ஆஜராகாமல் இருந்து வந்தார். இதனைத்தொடர்ந்து நீதிமன்றம் பிடிவாரண்ட் அளித்து உத்தரவிட்டது.  தனிப்படை போலீசார் பல்வேறு இடங்களில் டேனியல் ராஜாவை தேடி வந்தனர். திருமங்கலம் சரக உதவியாளர் வரதராஜன் தலைமையில் அமைக்கப்பட்ட தனிப்படையால் தேடப்பட்டு வந்த நிலையில் கடலூர் மாவட்டம் விருத்தாச்சலத்தில் பதுங்கி இருந்த டேனியல் ராஜாவை துப்பாக்கி முனையில் வைத்து கைது செய்திருப்பதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்ட நபர் நொளம்பூர் காவல் நிலையத்திற்கு அழைத்து வரப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.