Skip to main content

பயிற்சி காவலர்களுக்குள் மோதல்...அடி வாங்கிய பெண் காவலர்!

Published on 02/07/2019 | Edited on 02/07/2019

வேலூர் கோட்டை வளாகத்துக்குள் காவலர் பயிற்சி பள்ளி உள்ளது. இங்கு காவல்துறைக்கு புதியதாக தேர்வு செய்யப்படும் ஆண், பெண் காவலர்களுக்கு காவலர்களுக்கான பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது. பல ஆண்டுகளாக நடைபெற்று வரும் இந்த பயிற்சி பள்ளியில் தற்போது, கடந்த 2018 டிசம்பர் மாதம் 196 பெண் காவலர்கள் பயிற்சிக்காக இங்கு அனுப்பப்பட்டனர். அவர்களுக்கு வரும் ஜூலை 5 ஆம் தேதியோடு பயிற்சி நிறைவு பெறுகிறது. இங்கு பயிற்சி பெறும் பயிற்சி பெண் காவலர்களில் நான்கு பேருக்கு ஒரு அறை என ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அப்படித் தான் மதுரையை சேர்ந்த ஒரு இளம் காவலர், வேலூர் மற்றும் தஞ்சாவூரை சேர்ந்த  4 இளம் பயிற்சி காவலர்கள் ஒரு அறையில் தங்கியிருந்துள்ளனர். அறையில் தங்கியிருந்தவர்களுக்குள் ஏதோ ஒரு காரணத்துக்காக சண்டை வந்துள்ளது. 

 

 

POLICE FIGHT

 

 


அந்த சண்டையில் மதுரையை சேர்ந்த இளம்பெண்ணை மற்ற பெண்கள் லத்தியால் தாக்கியுள்ளனர். அடி பொறுக்க முடியாமல் அலற மற்ற அறையில் இருந்த இளம்பெண்கள் வந்து மீட்டுள்ளனர். இதுப் பற்றி பயிற்சி பள்ளி அதிகாரிகளிடம் அப்பெண் முறையிட்டுள்ளார். அவர்கள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது. இதனால் மதுரையில் உள்ள தனது பெற்றோர்க்கு தகவல் தெரிவித்துள்ளார். அவர்கள் உடனே வேலூருக்கு வந்து அதிகாரிகளிடம் கேட்டுள்ளனர். அப்போதும் சரியாக பதில் சொல்லாததால், அடிவாங்கிய பெண்ணோடு சேர்ந்து பெற்றோர் பயிற்சி கல்லூரி வளாகம் வாயில் முன்பு போராட்டத்தில் ஈடுப்பட்டனர். இதனால் அதிர்ச்சியான பயிற்சி பள்ளி அதிகாரிகள், அந்த பயிற்சி காவலர் மற்றும் அவரது குடும்பத்தாரிடம் சமாதானம் பேசி நடவடிக்கை எடுப்பதாக உறுதி கூறினர். அதனை தொடர்ந்து தற்போது விசாரணை நடைபெற்று வருகிறது.

 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

படையெடுக்கும் புலிகள்; பாதுகாப்பு வளையத்தில் மூணாறு !

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
 Invading Tigers; Munnar in the observation ring

கோடை வெயிலின் தாக்கத்தால் வனப்பகுதியை விட்டு வனவிலங்குகள் உணவு மற்றும் தண்ணீர் தேவைக்காக கிராமங்களுக்கு நுழைவது தொடர்கதையாகி வருகிறது. வனத்துறை சார்பில் வனவிலங்குகளுக்கு தண்ணீர் தொட்டிகள் திறக்கப்பட்டு வரும் நிலையில் அதையும் மீறி பல்வேறு இடங்களில் யானை, சிறுத்தை உள்ளிட்ட விலங்குகள் வனத்தை விட்டு வெளியேறி உணவிற்காக கிராமங்களுக்குள் நுழைவது வாடிக்கையாகி வருகிறது.

அண்மையில் மயிலாடுதுறையில் புகுந்த சிறுத்தை தற்பொழுது வரை மர்மமாகவே நீடித்து வருகிறது. இந்நிலையில் தமிழக-கேரள எல்லையான மூணாறு பகுதியில் சர்வ சாதாரணமாக புலி நடமாட்டம் இருப்பது அந்த பகுதி மக்களுக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது. கன்னிமலா பகுதியில் உள்ள தேயிலை எஸ்டேட் பகுதியில் புலிகள் நடமாட்டம் இருப்பதாக தோட்டத் தொழிலாளர்கள் வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். தற்போது இது தொடர்பாக வெளியாகி உள்ள வீடியோ ஒன்றில் மூன்று புலிகள் தேயிலை எஸ்டேட் பகுதியில் இருந்து வனப்பகுதிக்குள் நுழைவது போன்ற வீடியோ காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தற்போது அந்த புலிகளை பிடிக்கும் முயற்சியில் வனத்துறையினர் இறங்கியுள்ளனர். புலிகள் நடமாட்டம் இருப்பதால் அந்தப் பகுதி மக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என வனத்துறை சார்பில் அறிவுறுத்தல் கொடுக்கப்பட்டுள்ளது.

Next Story

“பாஜகவுக்கு தமிழகத்தின் மீது இருப்பது கோபமல்ல; தீராத வன்மம்” - சு.வெங்கடேசன்

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
BJP unending anger towards Tamil Nadu says Su. Venkatesan

திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் மிகக் கடுமையான வெள்ள பாதிப்பு ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து தென்மாவட்டங்களான திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களும் அதிக கனமழையினால் பெரிதும் பாதிக்கப்பட்டது. இந்த பாதிப்புகளிலிருந்து பொதுமக்களை மீட்கவும், அவர்களுக்குத் தேவையான நிவாரண உதவிகளை வழங்கிடவும் தமிழ்நாடு அரசு போர்க்கால அடிப்படையில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டது.

அதே சமயம் மிக்ஜாம் புயல் மற்றும் தென் மாவட்ட வெள்ள பாதிப்புகளுக்கு நிவாரணம் கோரி தமிழக முதலமைச்சரும், தலைமைச் செயலாளரும் மத்திய அரசுக்கு பலமுறை கடிதம் அனுப்பியும் மத்திய அரசு  நிதி வழங்காமல் இருந்தது. இந்த நிலையில்,  தமிழ்நாட்டில் ஏற்பட்ட மிக்ஜாம் புயல் நிவாரண நிதியாக ரூ.285 கோடியை வழங்க மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது. மேலும், தமிழகத்தில் 2023 டிசம்பர் மாதத்தில் ஏற்பட்ட வெள்ள பாதிப்புகளுக்காக ரூ.397 கோடி வழங்கவும் மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது.

அதில் முதற்கட்டமாக ரூ.285 கோடி மிக்ஜாம் புயல் பாதிப்புக்கான நிதியில் இருந்து ரூ.115 கோடியை மத்திய அரசு விடுவித்துள்ளது. அதே போல், வெள்ள பாதிப்புக்காக மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ள ரூ.397 கோடி நிதியில் இருந்து ரூ.160 கோடியை தமிழ்நாட்டுக்கு மத்திய அரசு விடுவித்துள்ளது. அதே சமயம் கர்நாடகாவிற்கு வறட்சி நிவாரணமாக ரூ.3,454 கோடியை மத்திய அரசு அறிவித்துள்ளது.

மிக்ஜாம் புயல், வெள்ள பாதிப்புகளுக்காக தமிழ்நாடு அரசு ரூ.38,000 கோடி நிவாரணம் வழங்க கோரியிருந்த நிலையில், மத்திய அரசு தமிழ்நாட்டுக்கு குறைந்தபட்ச அளவில் நிவாரண நிதி வழங்கியுள்ளதாக பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் மதுரை நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர் சு.வெங்கடேசன் பாஜக தமிழகத்திற்கு வஞ்சனைக்கு மேல் வஞ்சனை செய்வதாக குற்றம்சாட்டியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “கர்நாடகாவில் முதல் கட்டம் சாதகமாக இல்லை போல, வறட்சி நிவாரணம் என ரூ.3454 கோடி அறிவிப்பு. தமிழ்நாட்டிற்கு வஞ்சனைக்கு மேல் வஞ்சனை. மிக் ஜாம் புயல் மற்றும் வெள்ளத்திற்கு ரூ.275 கோடி மட்டுமே. தமிழ்நாடு  கேட்டதோ 38,000 கோடி. பாஜகவுக்கு தமிழகத்தின் மீது இருப்பது கோபமல்ல… வன்மம். தீராத வன்மம்” எனக் கடுமையாக சாடியுள்ளார்.