மக்கள் மனநிலை புரிந்து ஆட்சி நடத்த வேண்டும் - தமிமுன் அன்சாரி
திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை அடுத்த நாச்சிக்குளத்தில் மனிதநேய ஜனநாயக கட்சி பொதுச்செயலாளர் தமிமுன் அன்சாரி எம்எல்ஏ நிருபர்களுக்கு அளித்த பேட்டியில்,
தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் 18 பேரை தகுதி நீக்கம் செய்திருப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது. முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான கருத்தை சொன்னார்கள் என்பதற்காக தகுதி நீக்கம் செய்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது. மாநிலத்தில் உள்ள ஆட்சியாளர்கள் மக்கள் மனநிலையை புரிந்து கொள்ள வேண்டும். எடுத்தோம் கவிழ்த்தோம் என முடிவுவெடுத்தால் மக்களின் கோபத்துக்கு உள்ளாவார்கள் என்றார்.