Skip to main content

 வயலில் விவசாய வேலை செய்த பெண்ணுக்கு நேர்ந்த சோகம்!

Published on 10/10/2024 | Edited on 10/10/2024
Tragedy happened to the woman who worked in the field

சிதம்பரம் அருகே கீழத் திருக்கழிப்பாளை கிராமத்தைச் சேர்ந்த ராஜேந்திரன் மனைவி செல்வி(59). இவர் அதே பகுதியில் உள்ள வயலில் வியாழக்கிழமை(10.10.2024) மதியம் விவசாயப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது திடீரென பெய்த காற்று மழையால் பலத்த மின்னல் தாக்கி மயங்கி கீழே விழுந்தார்.

இவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிதம்பரம் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். இவரை பரிசோதித்த மருத்துவர்கள் இவர் ஏற்கனவே இறந்துவிட்டார் என உறுதிப்படுத்தினர்.  இதனைத் தொடர்ந்து இவரது உடல் சிதம்பரம் அரசு மருத்துவமனை பிணவறையில் வைக்கப்பட்டுள்ளது. இது குறித்து அண்ணாமலை நகர் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்..

சார்ந்த செய்திகள்