Skip to main content

மீன் பிடித்துத் திரும்பிய போது மீனவர்களுக்கு நேர்ந்த சோகம்

Published on 19/08/2022 | Edited on 19/08/2022

 

Tragedy happened to the fishermen when they returned after catching fish!

 

சீர்காழி அருகே பழையார் முகத்துவாரத்தில் மணல் திட்டில் சிக்கி இரண்டு விசைப் படகு கவிழ்ந்து சேதமடைந்தது, 8 மணி நேரத்திற்கு மேலும் மீட்கும் பணியில் மீனவர்கள் ஈடுபட்டுத் தவிக்கின்றனர்.

 

மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி அடுத்துள்ள பழையார் துறை முகத்திலிருந்து செழியன், சுரேந்தருக்கு சொந்தமான விசைப்படகில் 10 பேர் அதிகாலை வேளையில் மீன்பிடித்துக்கொண்டு கரை திரும்பியுள்ளனர். அப்போது முகத்துவாரத்தில் இரண்டு படகுகளும் தரை தட்டி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் இரண்டு படகில் இருந்த மீனவர்களும் கடலுக்குள் விழுந்து தத்தளித்துள்ளனர்.  

 

கடலில் தத்தளித்த 10 மீனவர்களையும் அருகில் இருந்த சக மீனவர்கள் மீட்டு கரைசேர்ந்தனர். தொடர்ந்து மூன்று விசை படகுகளின் உதவியுடன் கடலில் மூழ்கிய படகை மீட்கும் பணியில் மீனவர்கள் ஈடுபட்டுள்ளனர். இதில் செழியன் விசைப்படகு முற்றிலும் கடலில் மூழ்கி சேதம் அடைந்தது. சுரேந்தர் என்பவரது படகை மீட்டு கரை சேர்த்தனர். மேலும் கடலில் மூழ்கி முற்றிலும் சேதம் அடைந்த செழியனுக்கு சொந்தமான விசைப்படகை மீட்கும் பணியில் சக மீனவர்கள் சுமார் 8 மணி நேரமாக ஈடுபட்டு வருகின்றனர். 

 

இது குறித்து மீனவர்கள் கூறுகையில், "கொள்ளிடம் ஆற்றில் திறந்து விடப்படும் அதிகளவு தண்ணீரால் பழையார் கடற்கரை முகத்துவாரம் தூர்ந்து மண் மேடாகி போய்விட்டது. ஒவ்வொரு முறையும் திறந்து விடப்படும் அதிகப்படியான தண்ணீர் கொள்ளிடம் ஆற்றின் வழியே பழையார் கடலில் கலந்த பிறகு முகத்துவாரம் தூர்ந்துவிடுகிறது. தூர்வார அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். தற்பொழுது சேதம் அடைந்த படகுகளுக்கு நிவாரணம் வழங்க அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்" என்கிறார்கள்.

 

மீனவர்களின் வாழ்வியலில் தினசரி ஏதோ ஒரு பிரச்சனை வந்து அவர்களின் வாழ்வாதாரத்தை முழ்கடித்து விடுகிறது என்பது தான் சமீபத்திய உண்மை.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

திடீர் திடீரென கரையொதுங்கும் மர்மப் பொருட்கள்; அதிர்ச்சியில் மீனவ கிராமம்

Published on 16/04/2024 | Edited on 16/04/2024
Mysterious objects that suddenly wash ashore; A fishing village in shock

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே கடற்கரையில் மர்ம பொருள் ஒன்று ஒதுங்கியது பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே உள்ளது கீழமூவர்க்கரை மீனவ கிராமம். இந்தக் கிராமத்தின் கடற்கரையை ஓட்டி சிவப்பு நிறத்தில் சுமார் 15 அடி உயரம் கொண்ட மர்ம பொருள் ஒன்று கரை ஒதுங்கியது. இதனைக் கண்ட அந்தப் பகுதி மக்கள் இது என்னவாக இருக்கும் என்ற அச்சத்தில் பூம்புகார் கடலோர காவல் குழும போலீசாருக்கு உடனடியாக தகவல் கொடுத்தனர். இதனையடுத்து உடனடியாக அங்கு வந்த போலீசார் அப்பொருளை ஜேசிபி மூலம் கரைக்கு கொண்டு வந்தனர். அதனைத் தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில் அந்தப் பொருள் கடலில் 'தடை செய்யப்பட்ட பகுதி' என்பதை உணர்த்துவதற்காக மிதக்க விடும் 'போயம்' என்ற கருவி என்பது தெரியவந்தது.

இதேபோல சில மாதங்களுக்கு முன்பு மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழிக்கு அருகே உள்ள நாயக்கர்குப்பம் மீனவ கிராமத்தில் 'அபாயம் தொட வேண்டாம்' என ஆங்கில எழுத்துக்களில் வாசகங்கள் இடம் பெற்ற உருளை ஒன்று ஒதுங்கியது. அதுவும் அந்த நேரத்தில் மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், அது ஆபத்து நேரங்களில் நீர்மூழ்கி கப்பல்களில் இருந்து வண்ணப் புகையை உமிழ்ந்து சமிக்கைகளை செய்வதற்கு பயன்படுத்தப்படும் சிலிண்டர் என்பது தெரிய வந்தது குறிப்பிடத்தகுந்தது.

Next Story

ஊர் ஊராய் 'வி லாக்' காட்டும் சிறுத்தை; திணறும் வனத்துறை

Published on 12/04/2024 | Edited on 12/04/2024
A leopard showing 'vlog' from place to place; A forest department that is stifling

கோடைக் காலம் தொடங்கிவிட்ட நிலையில் வனவிலங்குகள் கிராமங்களை நோக்கி படையெடுக்கும் நிகழ்வுகள் அரங்கேறி வருகிறது. மயிலாடுதுறையில் அண்மையில் தென்பட்ட சிறுத்தையைப் பிடிக்கும் பணியானது கடந்த ஏழு நாட்களுக்கும் மேலாக இன்று வரை தொடர்ந்து வருகிறது.

கடந்த ஒன்பதாம் தேதிக்கு பிறகு மயிலாடுதுறையில் சிறுத்தை நடமாட்டத்திற்கான அறிகுறிகள் இல்லாததால் சிறுத்தை இடம்பெயர்ந்ததாக தகவல்கள் வெளியாகி இருந்தது. அதனைத் தொடர்ந்து குத்தாலம் அருகே உள்ள காஞ்சிவாய் எனும் கிராமப் பகுதியில் சிறுத்தை சுற்றித் திரிவதாக தகவல்கள் வெளியானது. அந்தப் பகுதியிலும் வனத்துறையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர். இந்த நிலையில் நேற்று அரியலூர் மாவட்டத்தில் சிறுத்தை நடமாட்டம் இருந்தது தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியானது.

இது குறித்து மாவட்ட வனத்துறை அதிகாரி அபிஷேக் தோகர் கூறுகையில், 'கண்காணிப்பு பதிவை மட்டும் வைத்து அரியலூரில் காணப்பட்டது மயிலாடுதுறையில் சுற்றித்திரிந்த அதே சிறுத்தையா என்பதை உறுதிப்படுத்த முடியாது. அதனுடைய தெளிவான புகைப்படம் கிடைக்க வேண்டும். இரண்டு சிறுத்தைகளின் புகைப்படம் மற்றும் வேறு சில தடையங்களை ஒப்பிட்டுப் பார்த்துதான் இரண்டும் ஒரே சிறுத்தையா என்பதை உறுதி செய்ய முடியும்'  என தெரிவித்துள்ளார்.

தற்பொழுது வரை மயிலாடுதுறையில் நான்கு கூண்டுகள் 20க்கும் மேற்பட்ட தானியங்கி கேமராக்கள் வைக்கப்பட்டு வனத்துறையினர் தீவிரமாகக் கண்காணித்து வருகின்றனர். அதேபோல் அரியலூரில் இரண்டு கூண்டுகள் கொண்டு செல்லப்பட்டுள்ளது. சில இடங்களில் தானியங்கி கண்காணிப்பு கேமராக்களும் அமைக்கப்பட்டு தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.