Skip to main content

 குரூப் - 4 தேர்வுக்கு விண்ணப்பிக்க நாளை கடைசி

Published on 13/07/2019 | Edited on 13/07/2019

 

தமிழகத்தில் 6 ஆயிரத்து 491 அரசு காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான குரூப் - 4 தேர்வு, வரும் செப்டம்பர் 1ம் தேதி நடைபெறவுள்ளது.

t

 

இதற்கான ஆன்லைன் விண்ணப்பப்பதிவு, ஜூன் 14ம் தேதி தொடங்கிய நிலையில், ஜூலை 14ம் தேதி வரை விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் வழங்கப்பட்டிருந்தது.  இந்த அவகாசம் நாளை இரவு 11.59 மணியுடன் முடிவடைகிறது. இதுவரை குரூப் - 4 தேர்வுக்கு 10 லட்சத்துக்கும் அதிகமானோர் விண்ணப்பித்துள்ளனர்.  அதே சமயம் தேர்வுக்கட்டணத்தை செலுத்துவதற்கான அவகாசம் ஜூலை 16ம் தேதியுடன் முடிவடைகிறது.

சார்ந்த செய்திகள்