Skip to main content

ஜாமினில் வெளிவந்த நபர்; வெட்டி படுகொலை!

Published on 23/02/2021 | Edited on 23/02/2021

 

Tirupattur district alleary village family problem one passes away


திருப்பத்தூர் மாவட்டம், அல்லேரி கிராமத்தைச் சேர்ந்த தனது மாமன் மகள் ரம்யாவை திருமணம் செய்து குடும்பம் நடத்தி வந்துள்ளார் 30 வயதான குமரன். 2014ல் ரம்யாவை அடித்துக் கொலை செய்ததாக வழக்குப் பதிவு செய்து காவல்துறை குமரனை கைது செய்து சிறையில் அடைத்தது. ஜாமினில் வெளியே வந்த குமரன் மீது கோபத்தில் இருந்துள்ளனர் ரம்யா குடும்பத்தார்.

 

இதனால், அந்த கிராமத்தில் இருந்து வெளியேறி ஏலகிரி கிராமத்தில் வந்து தங்கியுள்ளார் குமரன். அஞ்சலி என்பவரை திருமணம் செய்துகொண்டுள்ளார். இந்த தம்பதிக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். ரம்யா கொலை வழக்கு திருப்பத்தூர் குற்றவியல் நீதிமன்றத்தில் நடந்துவந்துள்ளது. பிப்ரவரி 23ஆம் தேதி தீர்ப்பு என நீதிமன்றம் அறிவித்துள்ளது.

 

இந்நிலையில், பிப்ரவரி 22ஆம் தேதி ஏலகிரி கிராமத்தில் கோயில் கும்பாபிஷேகம் நடந்துள்ளது. இதனால் ஊரே திருவிழாக்கோலம் பூண்டிருந்தது, பொதுமக்கள் பரபரப்பாக இருந்தனர். இந்நிலையில் குமரன் வீட்டுக்குவந்த ஒரு இளைஞர், குமரனை சரமாரியாக வெட்டி வீசிவிட்டுச் சென்றுள்ளார். சத்தம் கேட்டு ஓடிவந்த அஞ்சலி, தனது கணவர் உயிருக்குப் போராடிக்கொண்டு இருப்பதைப் பார்த்து அதிர்ச்சியாகி அழுதுள்ளார். சாலையில் சென்றவர்களை கத்தி அழைக்க அவர்கள் வந்து வெட்டுப்பட்ட குமரனை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பியுள்ளனர். திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் குமரன் உடலைப் பரிசோதித்த மருத்துவர்கள் அவர் இறந்துவிட்டார் எனத் தெரிவித்துள்ளனர்.

 

இந்த தகவல் திருப்பத்தூர் மாவட்ட எஸ்.பி விஜயகுமாருக்குச் சென்றதும் அவர், உடனடியாக சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தியுள்ளார். குற்றவாளியைப் பிடிக்க டி.எஸ்.பி. தங்கவேல் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. அவர்கள் சில மணி நேரங்களிலேயே ஒருவரை பிடித்து விசாரணை நடத்தினர். அவர் குமரனின் முதல் மனைவியான கொலை செய்யப்பட்ட ரம்யாவின் தம்பி ராஜீ எனக் கூறப்படுகிறது. தனது அக்காவை கொலை செய்ததற்கு பழிவாங்க முடிவு செய்ததாகவும், நீதிமன்றம் விடுதலை செய்துவிடும் என நினைத்து வெட்டி கொலை செய்ததாகவும் கூறுகிறார் என்கிறார்கள் காவல்துறையினர்.

 


 

 

சார்ந்த செய்திகள்

Next Story

உறவினர் வீட்டு விஷேஷத்திற்குச் சென்ற மகன்; தாய்க்குக் காத்திருந்த அதிர்ச்சி!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
 young man who went to visit a relative's house passed away

ஈரோடு, சூரம்பட்டி, நேரு வீதியைச் சேர்ந்தவர் சுலோச்சனா (73). இவரது கணவர் மருதாசலம் (75). இவர்களுக்கு மூன்று மகன்கள் உள்ளனர். கடைசி மகன் மட்டும் திருமணம் ஆகி தனியாக வசித்து வருகிறார். மற்ற இரண்டு மகன்களும் பெற்றோர்களுடன் வசித்து வந்தனர். 2-வது மகன் மோகனுக்கு மது குடிக்கும் பழக்கம் உள்ளது. இந்த நிலையில், கடந்த 21ஆம் தேதி சித்தோடு, சாணார்பாளையத்தில் உள்ள தங்களது உறவினர் வீட்டு விசேஷத்துக்குச் சென்று வருவதாக கூறிச் சென்ற மோகன் அதன்பின் வீடு திரும்பவில்லை.

இதையடுத்து, பல்வேறு இடங்களில் மகனைத் தேடி வந்த தாய் சுலோச்சனா, நேற்று சித்தோடு பகுதியில் சென்று தன் மகன் குறித்து விசாரித்துள்ளார். அப்போது, கடந்த 21ஆம் தேதி மதுபோதையில் சித்தோடு வந்த மோகன் அங்குள்ள செல்போன் கடை முன்பாக மயங்கிக் கிடந்தவர், சிறிது நேரத்தில் இறந்து விட்டதாகவும், இதையடுத்து, அங்கிருந்தவர்கள் மோகனின் உடலை சித்தோடு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விட்டதாகவும் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து, சுலோச்சனா அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சென்று இறந்தது தனது மகன் மோகன் தான் என்பதை உறுதி செய்தார்.  இதுகுறித்து நேற்று அவர் அளித்த புகாரின் பேரில், சித்தோடு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Next Story

தேஜஸ்வி சூர்யா மீது வழக்குப்பதிவு

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Case registered against Tejaswi Surya

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி வாக்குப்பதிவானது முதற்கட்டமாக கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக நடைபெற உள்ளது. தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்தது. இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 87 மக்களவைத் தொகுதிகளில் இன்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் கர்நாடக மாநிலம் பெங்களூருவின் தெற்கு மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் தேஜஸ்வி சூர்யா மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். சமூக வலைத்தள பக்கமான எக்ஸ் வலைத்தள பக்கத்தில் மதரீதியாக வாக்கு சேகரிப்பது தொடர்பான வீடியோ ஒன்றை பாஜக வேட்பாளர் தேஜஸ்வி சூர்யா வெளியிட்டிருந்தார். இந்நிலையில் ஜெயநகர் போலீசார் அவர் மீது தற்போது வழக்குப்பதிவு செய்துள்ளனர். ஏற்கெனவே இன்று காலை மற்றொரு பாஜக வேட்பாளரான சுதாகர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்திருந்தனர் என்பது குறிப்பிடத்தகுந்தது.