Skip to main content

கைதான சாட்டை துரைமுருகன் மற்றும் நால்வர்... கண்டனம் தெரிவித்த சீமான்!!

Published on 12/06/2021 | Edited on 12/06/2021

 

Thuraimurugan and four others arrested after the arrival of the Chief Minister .... Seeman condemned

 

கடந்த சில தினங்களாக சமர் கார் ஸ்பா என்ற நிறுவனத்தின் ட்விட்டர் பக்கத்தில், அதன் உரிமையாளா் வினோத் தமிழீழத்திற்காகப் போராடிய பிரபாகரனையும், அவருடைய கொள்கையையும் குறித்து தவறுதலாக குறிப்பிட்டு பதிவுகள் வெளியாகியது. இதைப் பார்த்து அதற்குப் பதில் அளித்த சாட்டை துரைமுருகன், மீண்டும் தன்னுடைய பங்கிற்கு பிரபாகரனை தவறாக பேசுவதை நிறுத்திக்கொள்ள வேண்டும் என்று எச்சரித்து பல பதிவுகளை வெளியிட்டுள்ளார்.

 

Thuraimurugan and four others arrested after the arrival of the Chief Minister .... Seeman condemned

 

ஆனால் இருவருக்கும் இடையே கருத்துமோதல்கள் முற்றிய நிலையில், சாட்டை துரைமுருகன், நாம் தமிழா் கட்சியின் திருச்சி மேற்கு மாவட்டச் செயலாளர் வினோத், மாநில தகவல் தொழில்நுட்பப் பாசறை பொறுப்பாளர் சந்தோஷ் என்ற மகிழன், மாநில கொள்கை பரப்புரையாளா் திருச்சி சரவணன் உள்ளிட்ட 4 பேர் நேற்று (11.06.2021) காலை 11 மணியளவில் சமர் கார் ஸ்பா என்ற நிறுவனத்திற்குச் சென்று பிரபாகரனை தவறுதலாக பேசிய வினோத்தை நேரில் சந்தித்து பேசியேதோடு, காவல்துறையினர் முன்னிலையில் தவறுதலாக பேசிய வினோத்தை மறுப்பு காணொளி மூலம் மன்னிப்பு கேட்கவைத்துள்ளனா். 

 

இந்நிலையில், இரவு 7 மணியளவில் கே.கே. நகர் காவல்துறையினர் சாட்டை துரைமுருகன் மற்றும் அவருடன் சென்று சமர் கார் ஸ்பாவிற்கு சென்று மிரட்டல் விடுத்த 4 பேர் மீதும் காவல்துறை வழக்குப் பதிவுசெய்து கைது செய்தது. அவர்கள் மீது பிரிவு 147 – கலகம் செய்யுதல், பிரிவு 148 – கலகம் செய்யும்போது பயங்கரமான ஆயுதங்களை வைத்திருந்தது. பிரிவு 447 – அத்துமீறி நுழைதல், 294(பி) - பிறருக்குத் தொல்லை தரும் வகையில், பொது இடத்தில் ஆபாச செயலைப் புரிதல், 506 (1) - குற்றம் கருதி மிரட்டல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், கைது செய்யப்பட்ட நான்கு பேருக்குத் திருச்சி தலைமை அரசு மருத்துவமனையில் கரோனா பரிசோதனை செய்யப்பட்டதையடுத்து, அவர்கள் சிறைக்கு அனுப்பப்பட்டுள்ளனா்.

 

Thuraimurugan and four others arrested after the arrival of the Chief Minister .... Seeman condemned

 

நேற்று பல்வேறு வளா்ச்சிப் பணிகளை ஆய்வுசெய்ய திருச்சி மாவட்டத்திற்கு வருகைதந்த தமிழ்நாடு முதல்வர் தன்னுடைய ஆய்வுப் பணிகளை முடித்து மீண்டும் சேலம் மாவட்டத்திற்கு புறப்பட்டுச் சென்ற நிலையில், இந்தக் கைது நடைபெற்றுள்ளது. இச்சம்பவத்திற்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தன்னுடைய கண்டனத்தைப் பதிவு செய்திருக்கிறார். இது அரசியல் காழ்ப்புணர்ச்சியின் காரணமாக நடைபெற்றதாகவும் குற்றம்சாட்டியுள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

திருச்சி ரயில் நிலையத்தில் கட்டுக்கட்டாக பணம் பறிமுதல்!

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
Arbitrary seizure of money at Trichy railway station!

திருச்சி ரயில் நிலையத்தில் போலீஸார் மேற்கொண்ட சோதனையில் ரூ. 1.44 லட்சம் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

திருச்சி ஜங்ஷன் ரயில் நிலையத்தில் ரயில்வே போலீஸார் சோதனையில் ஈடுபட்டிருந்தனர். காரைக்குடியில் இருந்து திருச்சி நோக்கி வந்த ரயிலில் போலீஸார் மேற்கொண்ட சோதனையில், இளைஞர் ஒருவர் கட்டுக்கட்டாக பணத்தாள்களை வைத்திருந்தார். அவரிடம் போலீஸார் விசாரித்தபோது,. அவர் மதுரை அவனியாபுரம் பகுதியை சேர்ந்த நாகவேல்ராஜா (25) என்பதும், மளிகை பொருட்கள் மொத்த வியாபாரம் செய்யும் நிறுவனத்தில் வேலை செய்து வருவதும், மளிகை பொருட்கள் அனுப்பிய வகையில், நிலுவையில் இருந்த பணத்தை வசூல் செய்து வந்ததாகவும் தெரிவித்தார். அவர் வைத்திருந்த ரூ.1 லட்சத்து 44 ஆயிரத்து 618 ரொக்கத்துக்கான ஆவணங்கள் ஏதும் அவரிடம் இல்லை.

இதைத்தொடர்ந்து ரயில்வே போலீசார் அந்த பணத்தை பறிமுதல் செய்து பறக்கும்படை அலுவலர் வினோத்ராஜ் மூலம் திருச்சி மேற்கு வட்டாட்சியர் அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.

Next Story

“எதிரணி வேட்பாளர் போல் எங்கிருந்தோ வந்தவன் அல்ல நான்” - அ.தி.மு.க. வேட்பாளர் பிரச்சாரம்

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
AIADMK candidate Karuppaiya campaign in Trichy

திருச்சி நாடாளுமன்றத் தொகுதியில் அதிமுக வேட்பாளர் கருப்பையா திருவரங்கம்  ரெங்கநாதர் கோவில் ரெங்கா ரெங்கா கோபுரம் முன் சாஷ்டாங்கமாக விழுந்து வணங்கி தனது பிரச்சாரத்தை நேற்று மாலை தொடங்கினார். இந்த வாக்கு சேகரிப்பு நிகழ்ச்சிக்கு வடக்கு மாவட்டச் செயலாளர் பரஞ்ஜோதி தலைமை தாங்கிப் பேசினார்.

அப்போது பரஞ்ஜோதி பேசுகையில், திருச்சி பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் எடப்பாடியாரின் ஆசி பெற்ற அதிமுக வேட்பாளர் கருப்பையாவை பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் அமோக வெற்றி பெறச் செய்ய வேண்டும். அவர் வெற்றி பெற்றால் திருச்சி பாராளுமன்ற தொகுதி மக்களின் குரலாக நிச்சயம் பாராளுமன்றத்தில் குரல் கொடுப்பார். மக்களின் வளர்ச்சி திட்டங்களுக்கு பாடுபடுவார் என்றார்.

திருச்சி தெற்கு மாவட்ட அதிமுக செயலாளர் ப.குமார் பேசியபோது, ஸ்ரீரங்கம் மண் இங்கு இருப்பவர்கள் மட்டுமல்லாமல் உலகத்தில் இருப்பவர்கள் யார் இங்கு வந்தாலும் அவரை உயரே தூக்கி விடுகின்ற மண். எனவே நிச்சயம் கருப்பையாவையும் உயரே கொண்டு வரும். அவர் மக்கள் பணி சிறப்பாக செய்வார். திருச்சி நாடாளுமன்ற தொகுதியில் வெற்றிடம் ஏற்பட்டுள்ளது. அந்த வெற்றிடத்தை நிரப்புகின்ற தகுதி அதிமுகவிற்கு மட்டும்தான் உள்ளது என்பதை பொதுமக்கள் நிரூபிப்பார்கள். கருப்பையா திருச்சியிலிருந்து மக்கள் பணி ஆற்றுவார் என உறுதியளிக்கின்றோம் என்றார்.

முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் பேசுகையில், திருச்சி நாடாளுமன்ற தொகுதி எதை எதிர்பார்க்கிறதோ எதை ஆழமாக வேண்டும் என்று நினைக்கின்றதோ நாடாளுமன்ற உறுப்பினர் எப்படி சிறப்பாக செயல்பட வேண்டும் என நம்புகிறார்களோ அந்த நம்பிக்கைக்கு பாத்திரமாக உங்களுடைய உணர்வுகளுக்கு பாத்திரமாக உழைக்கக் கூடியவர் இளைஞர் கருப்பையா. உங்களை தாங்கியும் பிடிப்பார். உங்களுக்காக பாராளுமன்றத்தில் ஓங்கியும் குரல் கொடுப்பார் என்றார்.

ரெங்கா ரெங்கா கோபுரத்திற்கு முன்பாக வேட்பாளர் கருப்பையா பேசுகையில், எதிர் அணியில் நிற்கும் வேட்பாளரை போல் எங்கிருந்தோ வந்து தேவைக்காக ரெங்க நாதரையும் மக்களையும் சந்திக்கக் கூடியவர் நான் அல்ல. இந்த மண்ணின் மைந்தன் ஆகிய நான் மக்களுக்கு சேவை செய்ய வேண்டும். மக்களின் உரிமைகளை நாடாளுமன்றத்தில் ஒலிக்க செய்ய வேண்டும் என்பதற்காகவே போட்டியிடுகிறேன் என்றார்.

பிரச்சாரத்தில் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர், மாவட்டச் செயலாளர்கள் குமார், பரஞ்சோதி, சீனிவாசன், அமைப்புச் செயலாளர்கள் ரத்தினவேல், மனோகரன், முன்னாள் அமைச்சர் வளர்மதி, சிறுபான்மை பிரிவு மாவட்டச் செயலாளர் புல்லட் ஜான், மீனவர் அணி பேரூர் கண்ணதாசன், இளைஞரணி மாவட்ட துணை செயலாளர் தேவா, ஜெயலலிதா பேரவை துணைச் செயலாளர் வி.என்.ஆர்.செல்வம், தமிழரசன், ஒன்றிய செயலாளர்கள் முத்துக்கருப்பன், ஜெயக்குமார், கோப்பு நடராஜ், பகுதி செயலாளர்கள் டைமன் திருப்பதி, சுந்தர்ராஜன், பொதுக்குழு உறுப்பினர் பிரியா சிவகுமார் மற்றும் கூட்டணிக் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டனர்.