Skip to main content

ஜி.ராமகிருஷ்ணன் கோவையில் கைது 

Published on 18/09/2018 | Edited on 18/09/2018

 

க்ய்

 

யில் சூயஸ் நிறுவனத்திற்கு வழங்கப்பட்ட குடிநீர் விநியோக உரிமையை இரத்து செய்யக்கோரி, சாலை மறியலில் ஈடுபட்ட சிபிஎம் அரசியல் தலைமை குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர்

.

கோவை மாநகராட்சி குடிநீர் விநியோக உரிமையை சூயஸ் நிறுவனத்திற்கு வழங்கியதை கண்டித்து, பல்வேறு அமைப்புகள் சார்பில் தொடர் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இதன் ஒரு பகுதியாக சூயஸ் நிறுவனத்துடான ஒப்மந்தத்தை இரத்து செய்ய கோரி, மார்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் 4 மாநகராட்சி மண்டல அலுவலகங்களை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். கோவை அரசினர் மகளிர் பாலிடெக்னிக் கல்லூரி அருகேயுள்ள மாநகராட்சி வடக்கு மண்டல அலுவலகத்தில் நடைபெற்ற போராட்டத்தில், அக்கட்சியின் அரசியல் தலைமை குழு உறுப்பினர் ஜி.ராமாகிருஷ்ணன் பங்கேற்றார். மண்டல அலுவகத்தை முற்றுகையிட்டு போராட்டக்காரர்கள் கண்டன முழக்கங்களை எழுப்பினர்.

 

மேலும் சாலை மறியல் போராட்டத்திலும் ஈடுபட்டனர். கோவை மாநகராட்சி குடிநீரை வியாபாரம் செய்ய சூயஸ் நிறுவனத்திற்கு தாரை வார்த்திருப்பதாகவும், இதனால் ஆயிரத்து 500 பொதுக்குழாய்கள் மூடப்படுவதோடு, குடிநீர் இணைப்பு கட்டணம் அதிகரித்திருப்பதாக ஜி.ராமகிருஷ்ணன் தெரிவித்தார். மேலும் குடிநீர் கட்டணத்தை அரசே நிர்ணயிக்குமென மாநகராட்சி நிர்வாகம் பொய் கூறுவதாகவும், ஒப்பந்தப்படி சூயஸ் நிறுவனம் வலியுறுத்தினால் கட்டணம் அதிகரிக்குமென இருப்பதாக கூறிய அவர், சூயஸ் நிறுவனத்தை விரட்டும் வரை போராட்டம் தொடருமென தெரிவித்தார். இதையடுத்து சாலை மறியலில் ஈடுபட்ட ஜி.ராமகிருஷ்ணன் உள்ளிட்ட 326 பேர் கைது செய்யப்பட்டனர். கோவை சிங்காநல்லூர், குனியமுத்தூர், ஆர்.எஸ்.புரம் ஆகிய பகுதிகளில் மாநகராட்சி மண்டல அலுவலகங்களை முற்றுகையிட்டு போராட்டம் நடத்திய நூற்றுக்கணக்கனோர் கைது செய்யப்பட்டனர்.

சார்ந்த செய்திகள்

Next Story

“அரசியல் செய்யும் ஆளுநர் ரவியை திரும்பப் பெற வேண்டும்” - ஜி.ராமகிருஷ்ணன் பேட்டி

Published on 11/07/2023 | Edited on 11/07/2023

 

N

 

புதுச்சேரி நகரின் மையப்பகுதியில் உள்ள காமாட்சியம்மன் கோவிலுக்கு சொந்தமான ரூ. 12 கோடி மதிப்புள்ள நிலத்தை போலி பத்திரம் தயாரித்து விற்பனை செய்ததாக மோசடியில் ஈடுபட்ட துணை பதிவாளர் உள்ளிட்ட 17 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். இந்த விவகாரம் புதுச்சேரியில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

 

இந்த வழக்கில் போலி பத்திரம் தயாரித்து விற்றவர்கள், வாங்கியவர்களை போலீசார் விசாரணை செய்து வருகிறார்கள். இந்த நிலத்தை பா.ஜ.கவை சேர்ந்த ஜான்குமார் மற்றும் ரிச்சர்ட் ஜான்குமார் ஆகிய இரண்டு எம்.எல்.ஏக்கள் குடும்பத்தில் உள்ளவர் வாங்கியுள்ளதாகவும், அவர்கள் மீதும் போலீசார் விசாரணை நடத்த வேண்டும் எனவும், புதுச்சேரியில் அதிகரித்து வரும் நிலமோசடிகளைத் தடுக்கவும் வீடு, நிலங்களை போலி பத்திரம் கொண்டு பதிவு செய்வதை தடுக்கவும் தனி சட்டம் கொண்டு வர வேண்டும் எனவும் வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் புதுச்சேரியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

 

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தேசிய பொதுக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் தலைமையில் சாரம் துணை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து 100க்கும் மேற்பட்ட மார்க்சிஸ்ட் கட்சியினர் ஊர்வலமாக புறப்பட்டு வழுதாவூர் சாலையில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

 

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த ஜி.ராமகிருஷ்ணன், "பா.ஜ.க அல்லாத மாநில அரசுகளை சீர்குலைப்பதற்காக மத்திய அரசு நியமனம் செய்த எல்லா ஆளுநர்களும் எதிர்க்கட்சி போல் அரசியல் செய்து வருகிறார்கள். இது அரசியலமைப்பு சட்டத்தில் கிடையாது. ஆனால், ஆளுநர்கள் ஏன் அரசியல் செய்யக்கூடாது என்று எதிர் கேள்வி கேட்கும் அரசியல் கட்சியின் தலைவராக இருந்த தமிழிசையின் கருத்தை ஏற்றுக்கொள்ள முடியாது.

 

தமிழக ஆளுநர் அரசு நிர்வாகத்தில் தலையிடக் கூடாது. மேலும், அன்றாடம் எதிர்க்கட்சித் தலைவர் போல அரசு திட்டங்களை விமர்சனம் செய்வது, அரசாங்கத்தை விமர்சனம் செய்வது, ஆளுநர் அரசியல்வாதி போன்று அரசு திட்டங்களுக்கு எதிராக பரப்புரை செய்வது போன்று தமிழக ஆளுநருக்கு அதிகாரம் கிடையாது. ஆகவே, தமிழக ஆளுநர் ரவியை குடியரசுத் தலைவரும்  மத்திய அரசும் திரும்பப் பெற வேண்டும் என மார்க்சிஸ்ட் கட்சி வலியுறுத்துகிறது" என்று கூறினார்.

 

தொடர்ந்து செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளிக்கையில், “தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏதும் இல்லை. அரசு துரித நடவடிக்கை எடுக்கிறது. காய்கறிகளின் விலை உயர்வை கட்டுப்படுத்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். புதுச்சேரியில் காமாட்சியம்மன் கோவிலின் 64 ஆயிரம் சதுர அடி கோவில் நிலத்தை மோசடியாக பத்திரப்பதிவு செய்த பாஜக எம்.எல்.ஏக்கள் உள்ளிட்ட அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனவும் தெரிவித்தார்.

 

 

Next Story

ஆளுநருக்கு எதிராக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டம் (படங்கள்)

Published on 25/02/2023 | Edited on 25/02/2023

 

மாமேதை கார்ல் மார்க்ஸ் உள்ளிட்ட தலைவர்களை அவதூறாகப் பேசிய தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவியை கண்டித்து ஆளுநர் மாளிகை அருகே சின்னமலையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் இன்று (25.02.2023) ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன், மாவட்டச் செயலாளர்கள் ஆர்.வேல்முருகன் (தென்சென்னை), ஜி.செல்வா (மத்திய சென்னை), எல்.சுந்தரராஜன் (வடசென்னை) உள்ளிட்டோர் கலந்துகொண்டு ஆளுநரின் பேச்சுக்கு எதிராக கண்டன முழக்கங்களை எழுப்பினர்.