Published on 26/08/2020 | Edited on 26/08/2020
ஆலைக்கு சீல் வைக்கப்பட்டது செல்லும் என்ற சென்னை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றம் சென்றது ஸ்டெர்லைட். வேதாந்தா நிறுவனம் சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
ஸ்டெர்லைட் ஆலையின் மேல்முறையீட்டு மனு மீது உச்சநீதிமன்றத்தில் விரைவில் விசாரணை நடைபெறவுள்ளது. இதனிடையே தமிழக அரசு, ம.தி.மு.க., ஸ்டெர்லைட் எதிர்ப்பு இயக்கம் ஆகியவை ஏற்கனவே உச்சநீதிமன்றத்தில் கேவியட் மனுவை தாக்கல் செய்துள்ளனர் எனபது குறிப்பிடத்தக்கது.