Skip to main content

தேவையில்லாமல் சீண்டிப் பார்க்க வேண்டாம் - தமிழிசை சௌந்தரராஜனுக்கு திருநாவுக்கரசர் எச்சரிக்கை

Published on 17/10/2018 | Edited on 17/10/2018
thirunavukkarasar



தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் சு. திருநாவுக்கரசர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 
 

தமிழக பாரதிய ஜனதா கட்சி, பஞ்சாப் மாநில காங்கிரஸ் அமைச்சர் நவ்ஜோத் சிங் சித்து தமிழையும், தமிழகத்தையும் அவதூறாக பேசியதாகக் கூறி சென்னையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தியிருக்கிறது. மத்திய பா.ஜ.க. அரசுக்கு எதிராக தமிழகமே கிளர்ந்தெழுந்து ஒட்டுமொத்த எதிர்ப்பை வெளிப்படுத்துவதை தாங்கிக் கொள்ள முடியாத தமிழிசை சௌந்தரராஜன் மக்களின் கவனத்தை திசைத் திருப்புவதற்காக இந்த போராட்டத்தை நடத்தியிருக்கிறார். இதில் நவ்ஜோத் சிங் சித்து பேசாததை பேசியதாக திரித்து கூறி போராட்டத்திற்கு காரணம் கூறியிருக்கிறார். 
 

முன்னாள் கிரிக்கெட் கேப்டன் இம்ரான்கான் பாகிஸ்தான் பிரதமராக பதவியேற்ற விழாவுக்கு சென்ற நவ்ஜோத் சிங் சித்து பத்திரிகையாளர்களிடம் பேசும் போது, ‘தமிழ்நாட்டிற்கு செல்வதை விட பாகிஸ்தானுக்கு செல்வது எனக்கு இயல்பானது” எனக் கூறி தமிழ் மொழியும் எனக்கு தெரியாது, அங்குள்ள உணவு வகைகளை விட பாகிஸ்தானில் உள்ள உணவு வகைகள் எனக்கு மிகவும் பிடிக்கும் என்று கூறியிருக்கிறார். பாகிஸ்தான் பிரிவினைக்கு முன்பு ஒரே மாகாணமாக அடுத்தடுத்த பகுதிகளில் வாழ்ந்து ஒரே கலாச்சாரத்தை பின்பற்றியதை வலியுறுத்துகிற போது மேற்கோள் காட்டுவதற்காக தொலை தூரத்தில் உள்ள தமிழ்நாட்டை ஒரு வாதத்திற்காக ஒப்பிட்டார். இதில் அவரது நோக்கம் தமிழகத்தை அவமானப்படுத்துவது அல்ல. ஆனால், அதை திரித்து தமிழ்நாட்டு மக்களுக்கு எதிராக பேசியதாக தமிழிசை கயிறு திரித்திருக்கிறார். எதுவுமே கிடைக்காத தமிழிசைக்கு அவல் கிடைத்ததாக எண்ணி மென்று வருகிறார். அவருக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள். எதிலும் வெற்றி பெறாத தமிழக பா.ஜ.க. இதிலும் தோல்வியைத் தான் சந்திக்கப் போகிறது. 
 

இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்ட தமிழக மீனவர்களுக்கு தலா ரூபாய் 60 லட்சம் அபராதமும், மூன்று மாத சிறை தண்டனையும் விதித்து இலங்கை நீதிமன்றம் தீர்ப்பளித்திருக்கிறது. தூத்துக்குடி மாவட்டத்திலிருந்து மீன்பிடிக்கச் சென்ற மீனவர்கள் 8 பேரை கடந்த மாதம் 18 ஆம் தேதி இலங்கை கடற்படை கைது செய்து அவர்களது படகுகளையும் பறிமுதல் செய்து வழக்கு பதிவு செய்தது. அந்த வழக்கில் தான் இத்தகைய கொடூரமான தண்டனையை மீனவர்கள் மீது விதித்திருக்கிறது. இதையெல்லாம் தட்டிக் கேட்க, தடுத்து நிறுத்த வக்கற்ற மத்திய பா.ஜ.க. அரசுக்கு தமிழக மக்கள் உரிய பாடத்தை விரைவில் புகட்டுவார்கள். 

 

tamilisai soundararaja


தமிழக மீனவர்களின் 150 படகுகள் கடத்தி செல்லப்பட்டு இலங்கை கடற்படையினரால் பல ஆண்டுகளாக மக்கி மண்ணாகி சிதலமடைந்து வருகின்றன. படகுகளை திரும்பக் கொண்டு வரவோ, நஷ்டஈடு பெறவோ மத்திய - மாநில அரசுகள் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பது மிகுந்த கண்டனத்திற்குரிய செயலாகும்.
 

மீனவ சமுதாயத்தின் நலன்களை பாதுகாக்க மத்திய அரசில் தனி அமைச்சகம் அமைக்கப்படும் என்று 2014 நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பு ராமேஸ்வரத்தில் கடல் தாமரை மாநாட்டில் மீனவர்கள் முன்பாக திருமதி. சுஷ்மா சுவராஜ் வாக்குறுதி கொடுத்தார். ஆனால் நான்கு ஆண்டுகளாக வாக்குறுதியை நிறைவேற்றுவதற்கு தமிழிசை சௌந்தரராஜன், பொன் ராதாகிருஷ்ணன் ஆகியோர் எடுத்த முயற்சிகள் என்ன ? ஏன் தனி அமைச்சகம் அமைக்கப்படவில்லை ? மீனவர்களுக்கு எதிராக கடுமையான சட்டம் வந்த போது எதிர்த்து தமிழகத்தில் குரல் எழுப்பப்பட்டது. அப்பொழுது எந்த நடவடிக்கையும் மத்திய பா.ஜ.க. அரசு எடுக்காத காரணத்தால் இன்றைக்கு அந்த சட்டத்தினால் தமிழக மீனவர்கள் கடுமையாக தண்டிக்கப்பட்டு அபராதம் விதிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார்கள். இதையெல்லாம் தடுத்து நிறுத்த முடியாத தமிழிசை சௌந்தரராஜன் தேவையில்லாமல் காங்கிரஸ் கட்சியை சீண்டிப் பார்க்க வேண்டாமென எச்சரிக்க விரும்புகிறேன். இவ்வாறு கூறியுள்ளார். 
 

 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'இதற்கு முதல்வரும் வைகோவும் பதில் சொல்லியே ஆக வேண்டும்' - தமிழிசை செளந்தரராஜன்

Published on 29/03/2024 | Edited on 29/03/2024
'The Chief Minister and Vaiko should answer this'-Tamilisai interview

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

இந்நிலையில், பாஜக சார்பில் தென் சென்னையில் போட்டியிடும் தமிழிசை சௌந்தரராஜன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், 'ஈரோட்டில் மதிமுக எம்.பி இறந்தது எனக்கு மிகவும் வருத்தத்தை தருகிறது. வாரிசு அரசியல் ஜனநாயகத்தை படுகொலை செய்து விடும் என்று பிரதமர் சொல்லி இருந்தார். நன்றாக பணியாற்றிக் கொண்டிருந்த மதிமுக நாடாளுமன்ற உறுப்பினரை படுகொலை செய்திருக்கிறது இவர்களின் குடும்ப ஆசை, வாரிசு ஆசை. இதற்கு நான் வைகோவையும் குற்றம் சாட்டுவேன். ஸ்டாலினையும் குற்றம் சாட்டுவேன்.

ஒரு அனுபவம் மிக்கவருக்கு சீட்டு கொடுக்காமல் இப்படி நடந்துவிட்டது. வைகோ எதற்காக திமுகவை விட்டு வெளியே வந்தார். கலைஞர் ஸ்டாலினுக்கு முக்கியத்துவம் கொடுக்கிறார் என்று வெளியே வந்தார். ஆனால் இன்று அவருடைய மகனுக்கு சீட்டை கொடுத்துவிட்டு ஒரு அனுபவம் வாய்ந்த பாராளுமன்ற உறுப்பினரை படுகொலை செய்திருக்கிறார்கள். இது மன்னிக்க முடியாத குற்றம். நீட்டில் ஒரு தவறு நடந்த உடனே அதை உலக அளவில் வைத்து பிரபலப்படுத்திக் கொண்டிருந்தார்கள். ஆனால் ஒரு பாராளுமன்ற உறுப்பினர் தற்கொலை செய்வது தமிழகத்தில் தான் இன்று நடக்கிறது. மிகுந்த மன வேதனையாக இருக்கிறது. இதற்கு முதல்வர் மு.க. ஸ்டாலினும் பதில் சொல்ல வேண்டும். வைகோவும் பதில் சொல்ல வேண்டும். இது வாரிசு அரசியலின் அபாயகரம் என்பதை நான் தெரிவித்துக் கொள்கிறேன். இதே திமுகவில் உதயநிதிக்கு கிடைக்கின்ற அங்கீகாரம் சாதாரண தொண்டருக்கு கிடைக்கிறதா?'' எனக் கேள்வி எழுப்பினார்.

Next Story

'திரும்பி வந்துட்டேன்னு சொல்லு' - சினிமா வசனத்தில் பதிலளித்த தமிழிசை

Published on 26/03/2024 | Edited on 26/03/2024
Tamilisai replied in the movie dialogue 'I'm back and tell you'

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

அந்த வகையில், தி.மு.க, அ.தி.மு.க., காங்கிரஸ், தேமு.தி.க., பா.ம.க., பா.ஜ.க. உட்படப் பல்வேறு கட்சிகள் தேர்தல் கூட்டணி, தொகுதிப் பங்கீடுகள் முடிவடைந்து வேட்பாளர்கள் அறிவிப்பு, தேர்தல் பிரச்சாரம், வேட்பு மனுத்தாக்கல் உள்ளிட்ட தேர்தல் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. இந்த நிலையில், புதுச்சேரி துணை நிலை ஆளுநராகவும், தெலுங்கானா ஆளுநராகவும் இருந்த தமிழிசை சௌந்தரராஜன் தன் பதவியை ராஜினாமா செய்துவிட்டு பாஜகவில் நாடாளுமன்ற வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

தென் சென்னை நாடாளுமன்ற வேட்பாளராக அவர் அறிவிக்கப்பட்டிருக்கும் நிலையில், தேர்தல் பிரச்சாரத்தைத் தொடர்ந்து வருகிறார். இந்நிலையில் சென்னை மகாலிங்கபுரம் பகுதியில் உள்ள ஐயப்பன் கோவிலின் 50வது தொடக்க விழாவிற்கு சென்ற தமிழிசை சௌந்தரராஜன் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்தார். எதற்காக ஆளுநர் பதவியை ராஜினாமா செய்துவிட்டுத் தேர்தலில் நிற்கிறீர்கள் என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்குப் பதிலளித்த அவர், 'தமிழகத்தில் பாஜக வளர்ந்து கொண்டிருக்கிறது. என்னையே காலையிலிருந்து ட்விட்டரில் தாக்கிக் கொண்டிருக்கிறார்கள். அதைப் பற்றி எல்லாம் நான் கவலைப்படவில்லை. ஏனென்றால் இந்த தாக்குதல் வர வர நாங்கள் ஆக்குதலை அதிகரிப்போம் என தெரிவித்துக் கொள்கிறேன். நிச்சயமாக களம் எங்களுக்கு வெற்றிகரமாக இருக்கிறது. நான் உங்கள் சகோதரியாக, அக்காவாக திரும்பி வந்திருக்கிறேன். திரும்பி வந்துட்டேன்னு சொல்லு’ எனத் திரைப்பட வசனத்தை பேசினார்.