Skip to main content

தேனி மாவட்டத்தில்  இரண்டு தொகுதிகளில்  மறு வாக்கு பதிவு! வெளிவராத பின்னணி  தகவல்கள்!

Published on 08/05/2019 | Edited on 08/05/2019


தேனி தாலுகா அலுலகத்திற்கு புதிதாக  50 ஓட்டு மிஷின்கள் திடீரென இறக்கியதின் மூலம் எதிர்கட்சிகள் ஆர்ப்பாட்டத்தில்,  போராட்டத்தில் குதித்தனர். அதோடு இறக்குமதி செய்யப்பட்ட புது ஓட்டு மிஷின்களை திரும்ப கோவைக்கு எடுத்து செல்ல வேண்டும் என காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் தலைமையில் எதிர்கட்சியினர் மாவட்ட கலைக்டர் பல்லவி பல்தேவ்விடம் புகார் கொடுத்தனர். அப்படி இருந்தும் தலைமை தேர்தல் அதிகாரியின் உத்தரவின் பேரில் வந்த ஓட்டு பெட்டிகளை  திரும்ப அனுப்ப முடியாது என சொல்லி இருந்தார்.
 

z

     

இந்த நிலையில் தான் தமிழக தலைமை தேர்தல் அதிகாரியான சத்யபிரதா திடீரென தமிழகம் முழுவதும் 13 பூத்துகளில் மறு வாக்குபதிவு நடைபெறும் என அறிவித்தார். அதில் தேனி மாவட்டத்தில் உள்ள ஆண்டிபட்டி சட்டமன்ற தொகுதியில் உள்ள பாலசமுத்திரம், பெரியகுளம் சட்டமன்ற தொகுதியில் உள்ள வடுகபட்டி ஆகிய இரண்டு பூத்துகளில் வருகிற 19 ம்தேதி மறு வாக்கு பதிவு நடைபெறும் என அறிவித்தார்.  
   

z

 

 அதை தொடர்ந்து அரசியல் கட்சிகளும் அந்த இரண்டு ஊர்களில் மறு வாக்கு பதிவுக்கான பணிகளில் களம் இறங்க தயாராகி வருகிறார்கள்.      ஆனால் மறுவாக்கு பதிவு நடைபெற உள்ள பாலசமுத்திரம் மற்றும் வடுகபட்டியில் தேர்தல் சமயத்தில் வழக்கம் போல் ஓட்டு போட வந்த வாக்காள மக்களிடம் மாதிரி ஓட்டு போடும் மிஷின் வைத்து இருந்தனர்.

 

z

 

 அந்த மிஷின்களில் வாக்காள மக்கள் பலர் ஓட்டு போட்டனர். அந்த பேலட்பேப்பரை கழட்டாமலேயே ரெகுலர் ஓட்டையும் பதிவு செய்ய வைத்து விட்டனர். இந்த விஷயம் 
தேர்தல் அதிகாரியான கலெக்டர் பல்லவி காதுக்கு எட்டியதின் பேரில் தான் இந்த விஷயத்தை தலைமை தேர்தல் அலுவலகத்திற்கும் தெரிவித்து இருந்தார்.  

 

அப்படி இருந்தும் அந்த இரண்டு ஊர்களுக்கு மறு தேர்தல் நடத்த உத்திரவு வரவில்லை.  அது போல் கலெக்டர் பல்லவியும் அந்த இரண்டு ஊர்களில் தேர்தல் சமயத்தில் குளறுபடி இருந்தது.   ஆனால் தேர்தல் நடத்த உத்திரவு இல்லை.  அப்படி இருக்கும்போது எதற்காக 50 ஓட்டு மிஷின்கள் அனுப்பி வைத்தார்கள் என்று தெரியவில்லை என கூறியிருந்தார்.  

 

z4

 

அப்படி இருக்கும் போது திடீரென தலைமை தேர்தல் அதிகாரி இரண்டு ஊர்களுக்கு மறு வாக்கு பதிவு நடைபெறும் என அறிவித்து இருக்கிறார்.  அதோடு மறு வாக்கு பதிவு நடைபெற உள்ள பாலசமுத்திரம், வடுகபட்டியில் பாராளுமன்றம் மற்றும் சட்ட மன்றத்திற்க்கு ஐந்தாயிரம் ஓட்டுகளுக்குள் தான் இருக்கும்.  

 

அதற்கு ஐந்து ஓட்டு மிஷின் இருந்தாலே போதும் அப்படி இருக்கும் போது 50  ஓட்டு மிஷின்களை கொண்டு வர தேவையில்லை. இதிலிருந்து பார்க்கும் ஓட்டு பெட்டிகளை  மறைமுகமாக மாற்றுவதற்காகத்  தான் இப்படி தேர்தல் ஆணையமும்  மறு  தேர்தலை அறிவித்து இருக்கிறது என்ற பேச்சு தேனி மாவட்டத்தில் உள்ள அரசியல் 
வட்டாரத்தில் பேசப்பட்டும் வருகிறது.
 

சார்ந்த செய்திகள்

Next Story

“ஈரோடு அதிமுக வேட்பாளரை கைது செய்ய வேண்டும்” - ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் குற்றச்சாட்டு

Published on 29/03/2024 | Edited on 29/03/2024
AIADMK candidate should be arrested says EVKS Elangovan

ஈரோடு தொகுதி அஇஅதிமுக வேட்பாளர் ஆற்றல் அசோக்குமாரை கைது செய்ய வேண்டும்,தேர்தல் தகுதி இழக்க செய்ய வேண்டும் என்று காங்கிரஸ் மாநில முன்னாள் தலைவர் மற்றும் ஈரோடு கிழக்கு சட்டமன்ற உறுப்பினர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் குற்றம்சாட்டியுள்ளார்.

ஈரோட்டில் இன்று செய்தியாளர்களை சந்தித்த ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், “ ஆற்றல் அசோக்குமார் ஈரோட்டில் ஒரு கிடங்கில் வாக்காளர்களுக்கு தர ஏராளமான புடவைகள் பதுக்கி வைத்திருந்ததாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர் 200க்கும் மேற்பட்ட வங்கிகளில் கணக்குகள் வைத்துள்ளார். அவருடைய சொத்து விபரங்களை இதர விஷயங்களையும் அமலாக்கத்துறை, வருமானவரித்துறை, சிபிஐ விசாரிக்கை வேண்டும். அவர் தேர்தலில் போட்டியிட தடை விதிக்க வேண்டும். கைது செய்யப்பட வேண்டும்.

தேர்தல் விதிகளின்படி தேர்தல் அறிவித்த பிறகு எந்த புதிய அறிவிப்பையும் அரசு வெளியிடக் கூடாது. ஆனால், அதை மீறி மோதி அரசு 100 நாள் வேலை திட்ட பணியாளர்களுக்கு ஊதியத்தை உயர்த்தி உள்ளது. தேர்தல் ஆணையம் இது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். தேர்தல் ஆணையம் பாஜக அரசின் பிடியில் உள்ளது. தமிழக பாஜக தலைவர்  கோவையில் இரண்டு விதமாக மனு தாக்கல் செய்துள்ளார். அனைத்து கட்சிகளும் இந்த குறைபாட்டை சுட்டிக்காட்டி உள்ளன. இருந்தாலும் தேர்தல் ஆணையத்திலிருந்து ஒரு தொலைபேசி வருகிறது. அதனைத் தொடர்ந்து அவர் வேட்புமனு ஏற்கப்படுகிறது.

தேர்தல் ஆணையம் அவரது மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும். எடப்பாடி பழனிச்சாமி ஏதேதோ பேசுகிறார். அவர் பேசுவது புரியவில்லை. தமிழகத்தில் கஞ்சா கலாச்சாரம் பரவிவிட்டதாக கூறுகிறார். எம்ஜிஆர் காலத்திலிருந்து கஞ்சா கலாச்சாரம் உள்ளது. கஞ்சா போதை வஸ்துக்கள் குஜராத்தில் அதானி துறைமுகம் மூலம் வருகிறது. பாஜக அரசு இளைஞர்கள் அனைவரும் இந்தியாவில் போதை கலாச்சாரத்துக்கு உட்பட இதை அனுமதிக்கிறது. குஜராத்தில் மதுவிலக்கு பேயரளவில் உள்ளது. பர்மிட் இருந்தால் மது வாங்கி குடிக்கலாம். முதலில் அங்கு மதுவிலக்கை கொண்டு வரட்டும். பின்னர் தமிழகத்தில் மதுவிலக்கே வலியுறுத்தலாம்.

மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் தேர்தலில் போட்டியிட பணமில்லை என்கிறார். அவரிடம் ஏராளமான பணம் படுக்கையறையிலும் பைகளிலும் உள்ளது. அவரது கணவர் தேர்தல் பத்திர முறைகேடு உலகில் மிகப்பெரிய ஊழல் என்கிறார். கேட்டால் நிர்மலா சீதாராம் இது அவரது கருத்து என்கிறார். இதற்கு என்ன விளக்கம் அவர் அளிப்பார். சுப்பிரமணியசுவாமி அனுபவ வாய்ந்தவர் அவர் மோதி மீண்டும் பிரதமராக வரக்கூடாது என்கிறார். ஜெர்மனி அமெரிக்கா போன்ற நாடுகள் மோதி தலைமையில் சர்வாதிகாரத்தை நோக்கி நாடு சென்று கொண்டிருக்கிறது என்கின்றனர். 

அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டுள்ளார். சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அமித்ஷா கூட்டணி நாட்டில் யாரை வேண்டுமானாலும் கைது செய்யலாம். சிறையில் அடைக்கலாம் என்று செயல்படுகிறது. இதை தடுத்து நிறுத்த ஜனநாயகத்தை காப்பாற்ற இந்தியா கூட்டணி வெற்றி பெற வேண்டும். எனது உடல்நிலை காரணமாக தமிழகம் முழுவதும் தேர்தல் சுற்றுப்பயணம் செய்ய வாய்ப்பு இல்லை. ஆனால் ஈரோட்டில் திமுக வேட்பாளர் பிரகாஷை ஆதரித்து பிரச்சாரம் செய்வேன்” எனத் தெரிவித்துள்ளார்.

Next Story

“ஆளுநர் சட்டமன்றத்திற்கு வராமலேயே இருந்திருக்கலாம்” - ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் 

Published on 12/02/2024 | Edited on 12/02/2024
governor might not have come to the assembly says EVKS elangovan

தமிழக சட்டப்பேரவையின் இந்த ஆண்டுக்கான முதல் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக சட்டப்பேரவைக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின், சபாநாயகர் அப்பாவு, அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் இன்று (12.02.2023) சட்டப்பேரவைக்கு வந்திருந்தனர். பேரவைக்கு வந்த முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கு அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட்டது. இதனையடுத்து சட்டப்பேரவைக்கு வந்த ஆளுநர் ஆர்.என்.ரவியை, சபாநாயகர் அப்பாவு, சட்டப்பேரவைச் செயலாளர் சீனிவாசன் ஆகியோர் மலர்க்கொத்து கொடுத்து வரவேற்றனர். இதனையடுத்து காலை 10 மணிக்கு தமிழ்த்தாய் வாழ்த்துடன் கூட்டத்தொடர் தொடங்கியது.

அப்போது ஆளுநர் ஆர்.என். ரவி தனது உரையில், “அனைவருக்கும் வணக்கம், தமிழக மக்கள் அனைவருக்கும் ஆங்கில புத்தாண்டு வாழ்த்துகள். சட்டப்பேரவையின் நிகழ்ச்சியின் தொடக்கத்திலும் இறுதியிலும் தேசிய கீதம் பாட வேண்டும் என தொடர்ச்சியாக நான் முன்வைத்த கோரிக்கை புறக்கணிக்கப்பட்டுள்ளது. தமிழக அரசு தயாரித்த உரையில் இடம்பெற்றுள்ள சில வரிகள் உண்மைக்கு மாறாகவும் தார்மீகத்திற்கு முரணாகவும் உள்ளன. இத்தகைய உரைக்கு நான் குரல் கொடுப்பது அரசியலமைப்பை கேலிக்கூத்தாக்கும் செயலாகிவிடும் என்பதால், இத்துடன் என்னுடைய உரையை முடித்துக்கொள்கிறேன்” எனத் தெரிவித்து உரையாற்றத் தொடங்கிய 4 நிமிடங்களில் உரையை முடித்து தனது இருக்கையில் அமர்ந்து கொண்டார்.

அதன் பின்னர் ஆளுநர் உரையின் தமிழாக்கத்தை சபாநாயகர் வாசித்தார். அப்போது, “மழை வெள்ள நிவாரண நிதியை மத்திய அரசிடம் இருந்து 50 கோடியை ஆளுநர் வாங்கித் தந்தால் நன்றாக இருக்குமென்று நாங்கள் கேட்கலாம். சாவர்க்கர், கோட்சே வழியில் வந்தவர்களுக்கு நாங்கள் சற்றே குறைந்தவர்கள் அல்ல... ஜன கன மன இனிமேல்தான் பாடுவோம்” என சபாநாயகர் பேசிக் கொண்டிருக்கும் போதே ஆளுநர் ஆர்.என். ரவி சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்தார்.

governor might not have come to the assembly says EVKS elangovan

இந்நிலையில் தமிழக காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவரும், ஈரோடு கிழக்குத் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், “ஆளுநர் சட்டமன்றத்திற்கு வருவது இது தான் கடைசியாக இருக்கும். இனிமேல் ஆளுநர் சட்டமன்றத்திற்கு வருவதற்கு வாய்ப்பு கிடையாது. காரணம் நாடாளுமன்ற தேர்தல் முடிந்தவுடன் ஆளுநரை தூக்கி எறிவார்கள். தமிழகத்தில் எப்போதும் எந்த நிகழ்ச்சியிலும், தேசிய கீதம் என்பது நிகழ்ச்சி முடிந்த பிறகு தான் இசைக்கப்படுவது வழக்கம். இதைக் கூட தெரியாத ஆளுநர் தேசிய கீதம் பாட வேண்டும் என்று சொல்வது அவரது அறியாமையை காட்டுகிறது. என்னைப் பொறுத்தவரையில் ஆளுநர் சட்டமன்றத்திற்கு வராமலேயே இருந்திருக்கலாம்” எனத் தெவித்தார்.