Skip to main content

ஆசிரியர்கள் உடனே பணியில் சேரவேண்டும் - பள்ளிக்கல்வித்துறை

Published on 18/01/2019 | Edited on 18/01/2019

 

dd

 

அங்கன்வாடிகளில் பணி நிரவல், மாற்றுப்பணிக்கான ஆசிரியர்கள் இன்றைக்குள் பணியில் சேரவேண்டும் என்று தமிழக பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது. வரும் திங்கள் முதல் 2,381 அங்கன்வாடிகளில் எல்.கே.ஜி வகுப்புகள் தொடங்கவுள்ளதால் பணி ஒதுக்கப்பட்ட ஆசிரியர்கள் ஆணையை பெற்றுக்கொண்டு உடனே பணியில் சேர வேண்டும் என்றும், அதேபோல் ஆசிரியர்கள் பணியமர்த்துவதில் தாமதம் ஏற்பட்டால் மாணவர் சேர்க்கையில் சுணக்கம் ஏற்பட வாய்ப்புள்ளது என்றும் பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது. 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

போராட்டம் நடத்திய ஜாக்டோ - ஜியோ அமைப்பினர் கைது!

Published on 30/01/2024 | Edited on 30/01/2024
Jacto jio organizations issue

சென்னை டிபிஐ வளாகம் முன்பு போராட்டம் நடத்திய ஜாக்டோ - ஜியோ அமைப்பினரை போலீசார் கைது செய்துள்ளனர்.

பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல் படுத்தக்கோரியும், அரசு அலுவலகங்களில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புதல் உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தியும் தமிழகம் முழுவதும் உள்ள மாவட்ட தலைநகரங்களில் ஜாக்டோ - ஜியோ அமைப்பினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். அந்த வகையில் சென்னை டிபிஐ வளாகம் முன்பு போராட்டம் நடத்த முடிவு செய்து இன்று காலை 10 மணி முதல் அங்கு குவியத் தொடங்கினர். இருப்பினும் காவல்துறை சார்பில் போராட்டம் நடத்த அனுமதி மறுக்கப்பட்டது.

இருப்பினும் காவல்துறையின் அறிவிப்பையும் மீறி ஜாக்டோ - ஜியோ அமைப்பினர் போராட்டம் நடத்தினர். இதனையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட நூற்றுக்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்துள்ளனர். இவர்கள் பேருந்து மூலம் அழைத்துச் செல்லப்பட்டு தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இதனால் டிபிஐ வளாகம் முன்பு சிறிது நேரம் பரபரப்பாகக் காணப்பட்டது. 

Next Story

டெட் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களின் போராட்டம் வாபஸ்!

Published on 05/10/2023 | Edited on 05/10/2023

 

The struggle of those who have passed the TEt exam is withdrawn

 

தமிழ்நாட்டில் உள்ள பள்ளிகளில் பணிபுரிந்து வரும் பகுதி நேர ஆசிரியர்கள் ஒரு வாரத்திற்கும் மேலாகத் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர் சங்கம், ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்களின் கூட்டமைப்பு, பகுதி நேரச் சிறப்பாசிரியர்கள் சங்கத்துடன் இணைந்து உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

 

அந்த வகையில் சென்னை டிபிஐ வளாகத்தில் கடந்த 7 நாட்களாகப் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த 2013 ஆம் ஆண்டு டெட் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள், தங்களுக்குப் பணி வழங்கக் கோரியும், அரசாணை எண் 149ஐ ரத்து செய்யக் கோரியும் போராட்டம் நடத்தி வந்தனர். இதனையடுத்து இன்று அதிகாலை டிபிஐ அலுவலகத்திற்கு வந்த 300க்கும் மேற்பட்ட காவல்துறையினர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களைக் கைது செய்திருந்தனர்.

 

இந்நிலையில் டெட் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் தங்களது போராட்டத்தை வாபஸ் பெற்றுள்ளனர். மேலும் 2013 ஆம் ஆண்டு டெட் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களின் பிரதான கோரிக்கையான அரசாணை எண் 149ஐ ரத்து செய்வது தொடர்பான நடவடிக்கைகள் தமிழக அரசு மேற்கொள்ள உள்ளதாகப் போராட்டக் குழுவினர் தகவல் தெரிவித்துள்ளனர்.