Skip to main content

பணம் பறிமுதல் செய்வதில் தமிழகத்திற்கு முதலிடம் !

Published on 27/03/2019 | Edited on 27/03/2019

இந்திய தேர்தல் ஆணையம் நாடு முழுவதும் பறிமுதல் செய்யப்பட்ட பணம் மற்றும் தங்கம் , சில்வர் உள்ளிட்ட பொருட்களின் மதிப்பை மாநிலங்கள் வாரியாக நேற்று (26/03/2019) வெளியீட்டது. இந்த பட்டியலில் தமிழகம் முதலிடம் பிடித்துள்ளது. இந்தியாவில் உள்ள வட மாநிலங்களை காட்டிலும் பணம் பறிமுதல் செய்தது தமிழகத்திலே அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.
 

elelction commission


 

election commission

 

election commission



இதன் படி தமிழகத்தில் தேர்தல் பறக்கும் படையினரால் சுமார் 36.6 கோடி பணம் பறிமுதல் செய்ததாகவும் , சுமார் 68 கோடி ரூபாய்  மதிப்புள்ள தங்கம் , மற்ற பொருட்கள் உட்பட சுமார் 107.24 கோடி ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் நேற்று வரை தமிழக தேர்தல் பறக்கும் படையினரால் பறிமுதல் செய்யப்பட்டதாக இந்திய தேர்தல் ஆணையம் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. தமிழகத்திற்கு அடுத்த படியாக உத்திரப்பிரதேச மாநிலத்தில் பணம் 8.26 கோடியும்  மற்றும் 59.04 கோடி மதிப்புள்ள தங்கம் மற்றும் சில்வர் உட்பட 104. 53 கோடி ரூபாய் மதிப்புடைய பணம் மற்றும் பொருட்கள் பறிமுதல் செய்ததாக இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. அதே போல் டெல்லி மற்றும் லட்சத்தீவில் ஒரு ரூபாய் கூட பணம் புழக்கங்கள் இல்லை என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இந்தியா முழுவதும் தேர்தல் பறக்கும் படையினரால் பறிமுதல் செய்யப்பட்ட பணம் மற்றும் தங்கம் , சில்வர் , மற்ற பொருட்களின் மதிப்பு சுமார் 539.992 கோடி ஆகும்.

மேலும் கடந்த தேர்தலில் தமிழகத்தில் பணப்புழக்கங்கள் அதிகமாக இருந்ததால் தான் தற்போதைய மக்களவை தேர்தல் குறைந்த கால இடைவெளியில் நடத்த இந்திய தேர்தல் ஆணையம் முடிவு செய்து அறிவிப்பாணையை வெளியீட்டது. ஆனால் அப்படியும் பணம் புழக்கங்கள் கட்டுப்படுத்த முடியாததால் அதிர்ச்சியில் இந்திய தேர்தல் ஆணையம் உள்ளது. எனவே இந்திய தேர்தல் ஆணையம் தமிழகத்தில் பல புதிய கட்டுபாடுகள் மேலும் விதிக்க வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அதே போல் பல அதிரடி நடவடிக்கைகளை எடுக்க தேர்தல் ஆணையம் தயாராக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


பி.சந்தோஷ் , சேலம் .

சார்ந்த செய்திகள்

Next Story

படையெடுக்கும் புலிகள்; பாதுகாப்பு வளையத்தில் மூணாறு !

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
 Invading Tigers; Munnar in the observation ring

கோடை வெயிலின் தாக்கத்தால் வனப்பகுதியை விட்டு வனவிலங்குகள் உணவு மற்றும் தண்ணீர் தேவைக்காக கிராமங்களுக்கு நுழைவது தொடர்கதையாகி வருகிறது. வனத்துறை சார்பில் வனவிலங்குகளுக்கு தண்ணீர் தொட்டிகள் திறக்கப்பட்டு வரும் நிலையில் அதையும் மீறி பல்வேறு இடங்களில் யானை, சிறுத்தை உள்ளிட்ட விலங்குகள் வனத்தை விட்டு வெளியேறி உணவிற்காக கிராமங்களுக்குள் நுழைவது வாடிக்கையாகி வருகிறது.

அண்மையில் மயிலாடுதுறையில் புகுந்த சிறுத்தை தற்பொழுது வரை மர்மமாகவே நீடித்து வருகிறது. இந்நிலையில் தமிழக-கேரள எல்லையான மூணாறு பகுதியில் சர்வ சாதாரணமாக புலி நடமாட்டம் இருப்பது அந்த பகுதி மக்களுக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது. கன்னிமலா பகுதியில் உள்ள தேயிலை எஸ்டேட் பகுதியில் புலிகள் நடமாட்டம் இருப்பதாக தோட்டத் தொழிலாளர்கள் வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். தற்போது இது தொடர்பாக வெளியாகி உள்ள வீடியோ ஒன்றில் மூன்று புலிகள் தேயிலை எஸ்டேட் பகுதியில் இருந்து வனப்பகுதிக்குள் நுழைவது போன்ற வீடியோ காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தற்போது அந்த புலிகளை பிடிக்கும் முயற்சியில் வனத்துறையினர் இறங்கியுள்ளனர். புலிகள் நடமாட்டம் இருப்பதால் அந்தப் பகுதி மக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என வனத்துறை சார்பில் அறிவுறுத்தல் கொடுக்கப்பட்டுள்ளது.

Next Story

“பாஜகவுக்கு தமிழகத்தின் மீது இருப்பது கோபமல்ல; தீராத வன்மம்” - சு.வெங்கடேசன்

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
BJP unending anger towards Tamil Nadu says Su. Venkatesan

திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் மிகக் கடுமையான வெள்ள பாதிப்பு ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து தென்மாவட்டங்களான திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களும் அதிக கனமழையினால் பெரிதும் பாதிக்கப்பட்டது. இந்த பாதிப்புகளிலிருந்து பொதுமக்களை மீட்கவும், அவர்களுக்குத் தேவையான நிவாரண உதவிகளை வழங்கிடவும் தமிழ்நாடு அரசு போர்க்கால அடிப்படையில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டது.

அதே சமயம் மிக்ஜாம் புயல் மற்றும் தென் மாவட்ட வெள்ள பாதிப்புகளுக்கு நிவாரணம் கோரி தமிழக முதலமைச்சரும், தலைமைச் செயலாளரும் மத்திய அரசுக்கு பலமுறை கடிதம் அனுப்பியும் மத்திய அரசு  நிதி வழங்காமல் இருந்தது. இந்த நிலையில்,  தமிழ்நாட்டில் ஏற்பட்ட மிக்ஜாம் புயல் நிவாரண நிதியாக ரூ.285 கோடியை வழங்க மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது. மேலும், தமிழகத்தில் 2023 டிசம்பர் மாதத்தில் ஏற்பட்ட வெள்ள பாதிப்புகளுக்காக ரூ.397 கோடி வழங்கவும் மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது.

அதில் முதற்கட்டமாக ரூ.285 கோடி மிக்ஜாம் புயல் பாதிப்புக்கான நிதியில் இருந்து ரூ.115 கோடியை மத்திய அரசு விடுவித்துள்ளது. அதே போல், வெள்ள பாதிப்புக்காக மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ள ரூ.397 கோடி நிதியில் இருந்து ரூ.160 கோடியை தமிழ்நாட்டுக்கு மத்திய அரசு விடுவித்துள்ளது. அதே சமயம் கர்நாடகாவிற்கு வறட்சி நிவாரணமாக ரூ.3,454 கோடியை மத்திய அரசு அறிவித்துள்ளது.

மிக்ஜாம் புயல், வெள்ள பாதிப்புகளுக்காக தமிழ்நாடு அரசு ரூ.38,000 கோடி நிவாரணம் வழங்க கோரியிருந்த நிலையில், மத்திய அரசு தமிழ்நாட்டுக்கு குறைந்தபட்ச அளவில் நிவாரண நிதி வழங்கியுள்ளதாக பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் மதுரை நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர் சு.வெங்கடேசன் பாஜக தமிழகத்திற்கு வஞ்சனைக்கு மேல் வஞ்சனை செய்வதாக குற்றம்சாட்டியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “கர்நாடகாவில் முதல் கட்டம் சாதகமாக இல்லை போல, வறட்சி நிவாரணம் என ரூ.3454 கோடி அறிவிப்பு. தமிழ்நாட்டிற்கு வஞ்சனைக்கு மேல் வஞ்சனை. மிக் ஜாம் புயல் மற்றும் வெள்ளத்திற்கு ரூ.275 கோடி மட்டுமே. தமிழ்நாடு  கேட்டதோ 38,000 கோடி. பாஜகவுக்கு தமிழகத்தின் மீது இருப்பது கோபமல்ல… வன்மம். தீராத வன்மம்” எனக் கடுமையாக சாடியுள்ளார்.