Skip to main content

தமிழகத்தில் மேலும் 56 பேருக்கு கரோனா உறுதி!

Published on 17/04/2020 | Edited on 17/04/2020

கரோனா வைரஸ் இந்தியா உட்பட உலக நாடுகள் அனைத்திற்கும் அச்சுறுத்தலாக அமைந்துள்ளது. இந்த வைரஸ் பாதிப்புக்கு இதுவரை முறையான மருந்து கண்டுபிடிக்கப்படாததால்,  அதை கட்டுப்படுத்துவது எப்படி என்று தெரியாமல் உலக நாடுகள் திணறி வருகின்றன. இந்த வைரஸ் பரவாமல் தடுப்பதற்கான ஒரே வழி சமூக விலகல் என்பதால் அனைத்து நாடுகளும் மக்களிடம் அதையே வலியுறுத்தி வருகின்றன. இந்தியாவில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ள இந்த வைரஸ் தமிழகத்திலும் வேகமாக பரவி வருகிறது.

 

tamilnadu corona virus updates



தமிழகத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,323 ஆக உயர்ந்துள்ளது என்றும், இன்று மட்டும் 56 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது என்றும் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. தமிழகத்தில் இதுவரை 283 பேர் கரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

 

   

சார்ந்த செய்திகள்