Skip to main content

பாஜகவின் மரியாதைதான் ஒரே நாளில் தகர்ந்துபோயிருக்கிறது; ஜெயக்குமாரின் அறிவிலித்தனம்; சிவசங்கர் பதிலடி

Published on 13/04/2018 | Edited on 13/04/2018


 

Interview


''கோ பேக் மோடி'' (gobackmodi) என்ற ஹேஷ்டேக் இந்திய அளவில் மட்டுமல்ல, உலக அளவில் டிரெண்டிங்கில் முதல் இடம்பிடித்துள்ளது. இதனால் பாஜகவின் மரியாதைதான் ஒரே நாளில் தகர்ந்துபோயிருக்கிறது. என்று அரியலூர் மாவட்ட திமுக செயலாளரும், முன்னாள் எம்எல்ஏவுமான எஸ்.எஸ். சிவசங்கர் கூறியுள்ளார்.
 

நக்கீரன் இணையதளத்திற்கு அவர் அளித்த பேட்டி:-
 

பிரதமர் வருகைக்கு கருப்பு கொடி காட்டுவது சிறுபிள்ளைத்தனமானது. தமிழகத்தில் தற்போது நடப்பது தேச விரோத செயல்கள். ஒரு பொறுப்புள்ள எதிர்க்கட்சித் தலைவர் பிரதமரை நேரில் சென்று வரவேற்க வேண்டும் என்று பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா கூறியிருக்கிறாரே?
 

சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் கருப்புக்கொடி காட்டுவது தவறு என்று எச். ராஜா கூறுகிறார். தமிழ் மக்களுக்கான உரிமைகளை, தமிழ் மக்களுக்கான உணர்வுகளை தெரிவிக்க வேண்டிய இடத்தில் இருக்கிறார் ஸ்டாலின். காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதற்கு தாமதம் செய்து ஏமாற்றியதற்கு இந்த கருப்பு கொடி போராட்டம் நடைபெற்றது. இந்த கருப்பு கொடி போராட்டத்தை முதன் முதலில் அறிவித்தது திமுகதான். அதற்கு பிறகுதான் மற்ற கட்சிகள் ஆதரவு தெரிவித்தன. இந்த போராட்டம் மிகப்பெரிய வெற்றியை பெற்றிருக்கிறது. அதுவும் சென்னை முழுவதும் கருப்பு என்ற அளவுக்கு வெற்றி பெற்றிருக்கிறது. கட்சி வேறுபாடு இல்லாமல் ஒட்டுமொத்த தமிழ் உணர்வாளர்கள் பங்கேற்றிருக்கிறார்கள். 
 

அதேபோல் சமூக வலைதளங்களில் பிரதமர் மோடி சென்னை வருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து  ''கோ பேக் மோடி'' (gobackmodi) என்ற ஹேஷ்டேக் உலக அளவில் டிரெண்டிங்கில் முதல் இடம்பிடித்துள்ளது. கட்சிக்கு அப்பாற்பட்டவர்களும் அதை பதிவு செய்ததால்தான் உலக அளவில் டிரெண்டிங்கில் முதல் இடம்பிடித்துள்ளது. 
 

மோடி கலந்து கொண்ட நிகழ்ச்சியால் ஒரு லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்தும் என்று சொல்கிறார். அவர் வந்த நிகழ்ச்சியால் வேலை வாய்ப்பு ஏற்படுமா, ஏற்படாதா என்று மக்களுக்கு தெரியும். வேலை வாய்ப்பு தருவேன் என்றும், 15 லட்சம் பணத்தை தருவேன் என்றும் கடந்த 4 வருடமாக ஏமாற்றிக்கொண்டிருக்கிறார். எனவே இது ஏமாற்று வாதம். அவர் தமிழ்நாட்டுக்கு வரும்போது, தமிழ்நாட்டு பிரச்சனைக்காக கருப்பு கொடி காட்டுவதில் எந்த தவறும் இல்லை. இந்த போராட்டம் மக்கள் போராட்டம். தமிழகத்தின் குரலை இந்த போராட்டம் ஒட்டுமொத்த இந்தியாவுக்கும் தெரியப்படுத்தியிருக்கிறது. 
 

உலக அளவில் செல்வாக்கு பெற்றுள்ள மோடியை எதிர்க்கட்சிகள் சிறுமைப்படுத்த முடியாது. எதிர்க்கட்சியின் போராட்டத்தில் பொதுமக்களின் பங்களிப்பு இல்லை. எதிர்க்கட்சிகளுக்கு காவிரி நீர் பற்றி கவலையில்லை. மோடியை விமர்சிப்பதே நோக்கம். நேற்று நடந்த போராட்டத்தால் உலக அளவில் காங்கிரஸ், திமுகவுக்கு மரியாதையை குறைத்துள்ளது என்று தமிழிசை கூறியிருக்கிறாரே?
 

''கோ பேக் மோடி'' (gobackmodi) என்ற ஹேஷ்டேக் இந்திய அளவில் மட்டுமல்ல, உலக அளவில் டிரெண்டிங்கில் முதல் இடம்பிடித்துள்ளது. இது திட்டமிட்டு செய்யக்கூடிய விஷயம் அல்ல. ஏகோபித்த தமிழர்கள், இணையத்தில் புழங்குபவர்கள் தங்களது உணர்வை காட்டியதால்தான் இந்த இடத்திற்கு வந்திருக்கிறது. வெறும் கட்சிக்காரர்கள் மட்டுமே காட்டியிருந்தால் இந்த இடத்திற்கு வந்திருக்க முடியாது. இதுவரை மோடிக்குத்தான் இணையத்தில் செல்வாக்கு அதிகம் இருக்கிறது. ஆதரவு அதிகம் இருக்கிறது என்ற சூழல் மாறி மோடிக்கு எதிர்ப்பு இருக்கிறது என்று இன்று உலக அளவில் தெரிந்திருக்கிறது. எனவே அவர் உலக அளவில் சுற்றி ஆங்காங்கே ஒரு கருத்தை சொல்லி பெரிய செல்வாக்கு உள்ளதுபோல் கட்டமைப்பு செய்துகொண்டிருந்தது இப்போது ஒரே நாளில் மொத்தமாக தகர்ந்துபோயிருக்கிறது. 
 

அவருக்கான எதிர்ப்பு இவ்வளவு இருப்பது தெரிய வந்தததால் அவர் மீதுதான் தவறான கண்ணோட்டம் இந்திய மக்களிடத்திலும், உலக மக்களிடத்திலும் வருமேயொழிய எதிர்ப்பை காட்டியவர்கள் மீது வராது. எதிர்ப்பை ஏன் காட்டுகிறார்கள் என்றால் அந்த அளவிற்கு இந்த அரசாங்கத்தால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். ஏமாற்றப்பட்டிருக்கிறார்கள். ஒரு ஜனநாயக நாட்டில், ஜனநாயக ரீதியிலான போராட்டம். 
 

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்று முதல்வரும், துணை முதல்வரும் பிரதமரிடம் மனு அளித்துள்ளார்கள். தமிழக அரசு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டிய செயல் தலைவர் ஸ்டாலினால் கர்நாடக அரசுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்ற முடிந்ததா? ஆளுநரே தேவையில்லை என்று சொன்னவர்கள் தற்போது ஆளுநரை சந்திப்பது அரசியல் சந்தர்ப்பவாதம் என்று அமைச்சர் ஜெயக்குமார் கூறியிருக்கிறாரே?
 

காவிரி பிரச்சனையில் அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்டி முடிவெடுப்பதை அரசாங்கம் தட்டி கழித்த காரணத்தினால் எதிர்க்கட்சித் தலைவர் என்ற முறையில் ஸ்டாலின் கூட்டினார். அவர் கூட்டிய கூட்டத்திற்கு அனைத்துக் கட்சித் தலைவர்களும் வருவதாக ஒப்புக்கொண்டனர். அதற்கு பிறகு அரசாங்கம் கண்விழித்து எங்கே எதிர்க்கட்சித் தலைவருக்கு பெயர் கிடைத்துவிடுமோ என்று நாங்களே கூட்டுகிறோம் என்று சொன்ன பிறகு, அதிலே கொஞ்சமும் ஈகோ பார்க்காமல் அரசாங்கம் கூட்டும் கூட்டத்திற்காக தான் கூட்டிய கூட்டத்தை ரத்து செய்தார். அரசாங்கம் காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதில் வெற்றி பெற வேண்டும், தமிழகத்திற்கு நன்மை பயக்க வேண்டும் என்பதால் அரசாங்கத்திற்கு துணையாக இருக்க அவர் தயங்கவே இல்லை. எனவே அதில் குறை சொல்வது என்பது ஜெயக்குமாரின் அறிவிலித்தனம்.
 

முதல் அமைச்சர் தலைமையில் நடந்த அனைத்துக் கட்சி கூட்டத்தில் போடப்பட்ட தீர்மானம் நிறைவேற்றப்படவில்லை. அதற்கு அவர்கள்தான் அவமானப்பட வேண்டும். காவிரி பிரச்சனையில் பிரதமரிடம் முதல் அமைச்சர் மனு கொடுத்ததாக ஜெயக்குமார் கூறுகிறார். எடப்பாடி பழனிசாமி எப்போது முதல் அமைச்சராக வந்தாரோ, அப்போதிலிருந்தே ஏதாவது ஒரு மனு கொடுத்துக்கொண்டுதான் இருக்கிறார். ஆனால் அந்த மனுக்கள் பரிசீலனைக்கு வந்ததும் இல்லை. இந்த மனுவும் பரிசீலனைக்கு வரப்போவதும் இல்லை. 
 

மத்திய அரசாங்கத்தின் துணையோடு இந்த மெஜாரிட்டி இல்லாத அரசாங்கத்தை காப்பாற்ற வேண்டியிருப்பதால் தமிழக ஆட்சியாளர்கள் அடிமையாக இருக்கிறார்கள். தமிழக மக்களின் உணர்வுகளை பிரதிபலிக்க வேண்டியது எதிர்க்கட்சிகளின் கையில் இருக்கிறது. ஆகையால்தான் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் என்கிற முறையில் ஸ்டாலின் அனைத்துக் கட்சிகளையும் ஒன்றுதிரட்டி மத்திய அரசுக்கு தமிழகத்தின் உணர்வை பிரதிபலித்துக்கொண்டிருக்கிறார். 
 

சார்ந்த செய்திகள்

Next Story

பிரதமர் இல்லம் முற்றுகை; ஆம் ஆத்மியினர் குண்டுக்கட்டாக கைது

Published on 26/03/2024 | Edited on 26/03/2024
Siege of Prime Minister's House; Aam Aadmi Party Arrested for Bombing

டெல்லி 32 மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டு 849 சில்லறை விற்பனை நிலையங்களுக்கு மதுபானம் விற்பனை செய்ய உரிமம் வழங்கியதில் முறைகேடு நடந்ததாகவும், அதில் 100 கோடி ரூபாய் கைமாறியதாகவும் புகார் எழுந்தது. இது தொடர்பான வழக்கில் அமலாக்கத்துறை விசாரணை நடத்தி வருகிறது. இந்த வழக்கில் டெல்லியின் முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியா ஏற்கெனவே கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கிறார்.

இந்த வழக்கு தொடர்பாக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு 9 முறை அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியும், அரவிந்த் கெஜ்ரிவால் ஆஜராகாமல் தவிர்த்து வந்த நிலையில், சில தினங்களுக்கு முன்பு கைது செய்யப்பட்டார். அதனைத் தொடர்ந்து பல்வேறு போராட்டங்களை ஆம் ஆத்மி கட்சியினர் எடுத்து வருகின்றனர்.

தமிழகத்திலும் ஆம் ஆத்மி கட்சிக்கு ஆதரவாகப் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இன்று டெல்லியில் உள்ள பிரதமர் மோடியின் இல்லத்தை முற்றுகையிட ஆம் ஆத்மி கட்சியினர்  முற்பட்டனர். ஆனால் காவல்துறை சார்பில் அதற்கு அனுமதி இல்லை எனத் தெரிவித்திருந்தது. இந்நிலையில், தடையை மீறி பிரதமர் மோடி இல்லத்தை முற்றுகையிட முயன்ற ஆம் ஆத்மி கட்சியினர் குண்டுக்கட்டாக கைது செய்யப்பட்டு அழைத்துச் செல்லப்பட்டனர். இதனால் அந்த பகுதியில் அதிகப்படியான போலீசார் குவிக்கப்பட்டிருப்பதால் பரபரப்பாக உள்ளது.

Next Story

கண்மூடித்தனமான துப்பாக்கிச் சூடு; 70 பேர் உயிரிழப்பு

Published on 23/03/2024 | Edited on 23/03/2024
 Indiscriminate shooting; 70 people lost their lives

ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 70 பேர் உயிரிழந்தது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த தாக்குதல் சம்பவத்திற்கு ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்பு  பொறுப்பேற்றுள்ளது. உலக அளவில் பல்வேறு நாடுகளில் இருந்து இந்த தாக்குதல் சம்பவத்திற்கு கண்டனங்கள் குவிந்து வருகிறது.

ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் உள்ள இசை நிகழ்ச்சி அரங்கில் எதிர்பாராதவிதமாக பயங்கர ஆயுதங்களுடன் நுழைந்த கும்பல் அங்கிருந்த மக்களை நோக்கி துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்டது. இந்த கண்மூடித்தனமான துப்பாக்கிச் சூடு தாக்குதலில் 70 பேர் உயிரிழந்துள்ளனர். 140க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர். இதற்கு உலக தலைவர்கள் பலரும் கண்டனங்களை தெரிவித்து வரும் நிலையில், பிரதமர் மோடி எக்ஸ் சமூக வலைதளத்தின் வாயிலாக இந்த தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார். 'இந்த துயரமான நேரத்தில் ரஷ்ய கூட்டமைப்பின் அரசாங்கத்திற்கு இந்திய அரசும், இந்திய மக்களும் துணை நிற்போம்' எனத் தெரிவித்துள்ளார்.