Skip to main content

தமிழக பள்ளி கல்வி துறை செயலாளர், ஆசிரியர் தேர்வு வாரியத்துறை தலைவருக்கு நோட்டீஸ்

Published on 15/02/2018 | Edited on 15/02/2018

 

madurai


பாலிடெக்னிக் கல்லூரி விரிவுரையாளர் உள்ளிட்ட பணிகளுக்காக கடந்த ஆண்டு செப்டம்பர் 16ல் நடைபெற்ற தேர்வை ரத்து செய்த உத்தரவிற்கும், மறுதேர்விற்கான அறிவிப்பை வெளியிடவும் தடை கோரிய மனு குறித்து தமிழக பள்ளி கல்வி துறை செயலாளர், ஆசிரியர் தேர்வு வாரியத்துறை தலைவர் ஆகியோர் பிப்ரவரி 22ல் பதிலளிக்க நோட்டீஸ் அனுப்பி உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

சிவகங்கையைச் சேர்ந்த இளமதி உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் தாக்கல் செய்த மனுவில்," தமிழகத்தில் உள்ள அரசு பாலிடெக்னிக் கல்லூரியின் விரிவுரையாளர் உள்ளிட்ட பணியிடங்களுக்கான தேர்வு அறிவிப்பு கடந்த ஆண்டு ஜூலை 28ல் வெளியானது. அதை தொடர்ந்து, செப்டம்பர் 16ல் தேர்வு நடைபெற்ற நிலையில், விடைக்குறிப்பு வெளியிடப்பட்டு, நவம்பரில் சுயவிபரங்கள் பெறப்பட்டு சான்றிதழ்கள் சரிபார்க்கப்பட்டன. 

 

இந்நிலையில், விடைத்தாள்களில் முறைகேடுகள் செய்யப்பட்டதாக கூறி, அந்த தேர்வை ரத்து செய்வதாகவும் ஆகஸ்ட் முதல் வாரத்தில் அந்த பணிகளுக்கான மறு தேர்வு அறிவிப்பு வெளியிடப்படும் எனவும் அரசுத்தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 1,33, 567 பேர் தேர்வெழுதிய நிலையில், 200 பேரின் விடைத்தாள்களிலேயே முறைகேடுகள் நடைபெற்றுள்ளது. அதுவும் தேர்வு எழுதியதில் எவ்வித முறைகேடும் நடைபெறவில்லை என்பதும் உறுதியாகியுள்ளது. 

 

ஆகவே, தவறு செய்த 200 பேருக்காக தேர்வெழுதிய அனைவரையும் தண்டிப்பது ஏற்கத்தக்கதல்ல. ஆகவே, பாலிடெக்னிக் கல்லூரி விரிவுரையாளர் உள்ளிட்ட பணிகளுக்காக செப்டம்பர் 16ல் நடைபெற்ற தேர்வை ரத்து செய்த உத்தரவிற்கும், மறுதேர்விற்கான அறிவிப்பை வெளியிடவும், அடுத்த கட்ட நடவடிக்கைகளை எடுக்கவும் தடை விதிக்க வேண்டும்" என கூறப்பட்டுள்ளது. 

 

இன்று இந்த மனுவினை விசாரித்த உயர் நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி G.R.சுவாமிநாதன் இந்த மனு தொடர்பாக தமிழக பள்ளி கல்வித்துறை செயலர், ஆசிரியர் தேர்வு வாரியத்துறை தலைவர் ஆகியோர் பிப்ரவரி 22ல் பதிலளிக்க உத்தரவிட்டு  வழக்கு மீதான விசாரனையை அன்றைய தேதிக்கு ஒத்தி வைத்தார்.

சி.ஜீவா பாரதி

சார்ந்த செய்திகள்

Next Story

'முல்லைப் பெரியாறு பற்றிப் பேச ஓபிஎஸ், இபிஎஸ்க்கு தார்மிக உரிமை கிடையாது'- நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் பேட்டி!

Published on 05/11/2021 | Edited on 05/11/2021

 

'OPS and EPS have no moral right to talk about Mullai Periyar' - Interview with Water Resources Minister Duraimurugan!

 

தேனி மாவட்டத்தில் உள்ள தமிழக-கேரள எல்லையில் அமைந்திருக்கும் கர்னல் பென்னிகுக் கட்டிய முல்லைப் பெரியாறு அணையை ஆய்வு செய்வதற்காகத் தமிழக நீர்ப்பாசனத்துறை அமைச்சர் துரைமுருகன் மற்றும் கூட்டுறவுத் துறை அமைச்சர் ஐ.பெரியசாமி, உணவு மற்றும் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி, பத்திர பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி உள்பட எம்எல்ஏக்களும், அதிகாரிகளும் குமுளியில் உள்ள தேக்கடியில் இருந்து முல்லைப் பெரியாறு அணைக்குப் படகில் சென்று மெயின் அணையையும் பேபி அணையையும் மற்றும் அணையிலிருந்து கேரளாவுக்குத் திறந்துவிடப்பட்ட தண்ணீரையும் பார்வையிட்டு ஆய்வு செய்து  மீண்டும் அதே தேக்கடிக்கு வந்தனர்.

 

அதன்பின் பத்திரிக்கையாளர்களிடம் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் பேசும் போது, ''நான் இந்தத் துறையின் அமைச்சர் என்ற முறையில் முல்லைப் பெரியாறு அணையை இன்று ஆய்வு செய்துள்ளேன். பதவியேற்றபோதே தமிழகத்தில் உள்ள அனைத்து அணைகளையும் ஆய்வு செய்யத் திட்டமிட்டிருந்தேன். கரோனா காலம் என்பதால் உடனடியாக ஆய்வுப் பணியைத் தொடங்க முடியவில்லை. தற்போது ஆய்வுப் பணியைத் தொடங்கியுள்ளேன். தொடர்ச்சியாக ஆழியாறு உள்ளிட்ட அணைகளைப் பார்வையிட உள்ளேன். சமீபத்தில் உச்சநீதிமன்றத்தில் மத்திய நீர்வள ஆணையம் விதியைக் கொண்டு வந்துள்ளது. அதற்குப் பெயர் 'ரூல் கர்வ்' அந்த விதிப்படி 30 ஆண்டுகள் எவ்வளவு தண்ணீர் வந்தது. எவ்வளவு நீர்மட்டம் உயர்ந்தது என்பதைக் கணக்கெடுத்துள்ளனர். அந்த க் கணக்கெடுப்பின்படி அணையின் நீர்மட்டம் எந்தெந்த காலகட்டத்தில் எவ்வளவு வைத்திருக்க வேண்டும் என அட்டவணை கொடுத்துள்ளனர். அப்படிப் பார்க்கும்போது இன்றைய நிலவரப்படி 139.50 அடி நீர்மட்டம் வைக்க அனுமதி வைக்கப்பட்டுள்ளன. நவம்பர் 30 ஆம் தேதி 142 உயர்த்திக் கொள்ளலாம் எனத் தெரிவித்துள்ளனர். அதனடிப்படையில் தான், தண்ணீர் திறந்துள்ளோம். 1979-ல் அணை பலவீனமாக இருக்கிறது. பலப்படுத்த வேண்டும் எனக் கூறினார். அதையடுத்து 3 நிலைகளில் பலப்படுத்தும் பணி நடந்தது. 152 உயர்த்த வேண்டும் என கோட்டுக்குச் சென்றோம். பேபி அணையைப் பலப்படுத்திவிட்டு 152 நீர்மட்டம் நிலைநிறுத்திக் கொள்ளலாம் எனக் கூறியது. அந்தப் பேபி அணையைப் பார்வையிட்டேன். அதில் என்னப் பிரச்சனை என்றால் அந்த அணை கீழே 3 மரங்கள் இருக்கிறது. அந்த மரங்களை அகற்றினால் பலப்படுத்தும் பணி நடத்த முடியும். கேரள அரசைக் கேட்டால், வனத்துறையிடம் கேட்க வேண்டும் என்கிறனர். வனத்துறையை அணுகினால் மத்திய வனத்துறையை அணுகக் கூறுகின்றனர். விரைவில் அந்த 3 மரங்களை அகற்றிவிடுவோம். அகற்றி விட்டால் பேபி அணையை பலப்படுத்தி 152 அடி நீர்மட்டம் உயர்த்தி விடலாம். அணையிலிருந்து தமிழகத்திற்குக் கூடுதலாகத் தண்ணீர் எடுப்பது குறித்து இருமாநில அரசுகளும் பேசி தான் முடிவெடுக்க வேண்டும். 

 

'OPS and EPS have no moral right to talk about Mullai Periyar' - Interview with Water Resources Minister Duraimurugan!

 

முல்லைப்பெரியாறு குறித்துப் பேசுவதற்கு ஒபிஎஸ்-க்கும், ஈபிஎஸ்-க்கும் தார்மீக உரிமை கிடையாது. இரண்டு பேரும் மாறிமாறி பொதுப்பணித்துறை அமைச்சர்களாக இருந்தனர். பத்து ஆண்டுக்காலத்தில் அந்தத் துறையின் அமைச்சர்கள் ஒருவராவது இந்த அணையை வந்து பார்வையிட்டுள்ளனரா? நான் இந்த 80 வயதில் தட்டுதடுமாறியாவது வந்து ஆய்வு செய்துள்ளேன். ஈபிஎஸ் ஆவது சேலத்துக்காரர், ஓபிஎஸ் தேனிக்காரர். இவராவது ஆய்வு செய்திருக்கலாம். அப்போது கவனிக்காமல் இப்போது உண்ணாவிரதம் இருக்கப் போவதாகக் கூறுவதைப் பார்த்து நாடே சிரிக்கிறது. பக்கத்து மாநில அமைச்சர்கள் அந்யோநியாமாக இருந்தால் பிரச்சனைகள் சுமூகமாக தீர்க்கலாம். 15 ஆண்டுகளுக்கு முன் சென்ற வந்த போட்டில் தான் இன்றும் ஆய்வு செய்து வந்தேன். நல்லகாலம் வழியில் அந்த போட் நிற்கவில்லை. ஆய்வின்போது கூறினேன். தமிழக சார்பில் அதிவேக படகுகள் வாங்கி விட வேண்டும் என்றேன். 3 மரங்களை வெட்டுவதற்கு 7 ஆண்டுகளாக முடியவில்லை. நாங்கள் வந்து 6 மாதங்கள் தான் ஆனால் அனுமதி பெற்றுவிடுவோம். கேரளா முதலமைச்சர் பினராயி விஜயன் மீது எனக்கு மரியாதை உண்டு. அவரை தனிப்பட்ட முறையில் நன்கு அறிவேன். அவர் நேர்மையான சுமூகமான அமைச்சர். அவர் காலத்தில் தான் முல்லைப்பெரியாறு அணை விவகாரத்தில் தீர்வு காணப்படும்'' என்று கூறினார்.

 

 


 

Next Story

திமுக பொறுப்பாளர்களுக்கும், அண்ணன் துரைமுருகனுக்கும் அன்பு வேண்டுகோள்... ஏ.சி.சண்முகம் பேட்டி

Published on 16/07/2019 | Edited on 16/07/2019

 

ஆகஸ்ட் 5ஆம் தேதி வேலூர் பாராளுமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. அதிமுக கூட்டணி வேட்பாளராக போட்டியிடும் ஏ.சி.சண்முகம் பிரச்சாரத்தை தொடங்கி, தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளார்.
 

பிரச்சாரத்தின்போது செய்தியாளர்களிடம் பேசிய ஏ.சி.சண்முகம், திமுக பொறுப்பாளர்களுக்கும், அண்ணன் துரைமுருகனுக்கும் அன்பு வேண்டுகோளாக வைக்கிறேன். கிட்டதட்ட கடந்த முறை தேர்தல் நின்றது உங்களால்தான். பணப்பட்டுவாடா செய்து, முறைகேடு நடந்ததினால் வேலூர் மக்கள் பிரதமரை தேர்ந்தெடுக்கக்கூடிய வாய்ப்பை இழந்துவிட்டார்கள். 

 

  a c shanmugam



மீண்டும் இப்போது ரூபாய் 23 லட்சம் ஒரு இடத்தில் இருந்து பிடிக்கப்பட்டிருக்கிறது. ஆங்காங்கே நீங்கள் பணத்தை பதுக்கி வைத்து, பணத்தை வைத்துதான் ஓட்டு வாங்க முடியும் என்று எதிர்பார்க்க முடியாது. பணத்தை பார்த்து மக்கள் மயங்க மாட்டார்கள். உண்மையான சேவையை, தொண்டை நிச்சமாக மக்கள் ஏற்பார்கள். 
 

 

மீண்டும் திமுக பணப் பிரச்சனையை கொண்டு வந்து வேலூர் தேர்தலை நிறுத்த வேண்டாம் என்று நான் அன்போடு கேட்டுக்கொள்கிறேன். நீங்கள் உங்கள் சாதனையை சொல்லி வாக்கு சேகரியுங்கள். வேலூரில் இந்த முறையும் தேர்தலை நிறுத்திவிடாதீர்கள் என்றார்.