Skip to main content

“என்னமோ நடக்குது மர்மமா இருக்குது” 35 நாட்கள்... பூட்டிய அறையில் இந்தியாவின் தலையெழுத்து

Published on 23/04/2019 | Edited on 23/04/2019

தேர்தல் கமிஷன் தொடர்ச்சியாக எதிர்கட்சியினரை குறிவைத்து சோதனையிட்டுவந்தது. இந்நிலையில் தேர்தல் முடிந்தவுடன்  தமிழகத்தின் அனைத்து தரப்பினரின் “எப்படி இவர்களை நம்பி 35 நாட்கள் நாம் ஓட்டளித்த ஓட்டு பெட்டி பத்திரமாக இருக்கும் அதில் ஏதாவது கோல்மால் செய்துவிடுவார்களோ” என்ற பேச்சு அடங்குவதற்குள் வாக்களித்து இரண்டாவது நாளிலேயே வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள மருத்துவ கல்லூரி வளாகத்தில் மதியம் 3 மணிக்கு கலால்வரி தாசில்தாரான சம்பூர்ணம் என்ற பெண் அதிகாரி தலைமையில் 4 பேர் உள் சென்று மாலை 5.30 மணிக்கு சில ஆவணங்களுடன் வெளியேவந்தனர் என குற்றச்சாட்டு கூறப்பட்டுள்ளது. 

 

sampooranam

 


இந்த தகவலை அடுத்து பல்வேறு கட்சிகளை சேர்ந்தவர்கள் மற்றும் வேட்பாளர்கள் மருத்துவ கல்லூரியில் கூடி தர்ணாவில் ஈடுபட்டனர். அப்போது இன்றைகான சிசிடிவி காட்சிகள் வேண்டும் என திமுக கூட்டணி வேட்பாளர் சு.வெங்கடேசன் தரப்பில் கேட்கப்பட, அதிராகரிகள் தரப்பு சிசிடிவி கேமரா செயல்படவில்லை என  கூறியுள்ளதாக தகவல் கசிந்துள்ளது. இது வெளியில் உள்ள எதிர்க்கட்சி தரப்பினரிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இதனால் அங்கு திரண்ட கட்சிக்காரர்கள் தர்ணாவில் ஈடுபட்டனர். தர்ணாவில் ஈடுபட்டவர்களுக்கும் போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டு நேரம் ஆக ஆக திமுக கம்யூனிஸ்ட் கட்சி தொண்டர்களும் அங்கு குவிய தொடங்கினர். அனைத்து கட்சி வேட்பாளர்களும் அங்கிருந்தனர் அதிமுக வேட்பாளரை தவிர இது அங்கிருந்தவர்களுக்கு சந்தேகத்தை அதிகபடுத்தியது.


சிறிது நேரத்தில் காரில் வந்து இறங்கிய நான்கு இளைஞர்கள் போலீஸாரிடம் ஏதோ சொல்ல, அவர்களை மட்டும் உள்ளேவிட முற்பட அங்கிருந்தவர்கள் அவர்களை இழுத்து யார் என்று விசாரித்தனர். அப்போது அவர்கள், தாங்கள் சி.சி.டி.வி இன்ஜினியர்கள் அமைச்சர் வீட்டிலிருந்து வருகிறோம் என்று ஒருவரும். இன்னொருவர் மெடிக்கல் காலேஜ் மாணவர்கள் என்றும் முன்னுக்கு பின் முறனாக பதில் கூறியுள்ளனர். அதனால், அங்கிருந்தவர்கள் அவர்களை அடையாள அட்டையை காண்பிக்கும்படி  கேட்டுள்ளனர். இதனால், அங்கு கைகலப்பாகி அவர்களுக்கு தர்ம அடி விழுந்துள்ளது. அதற்குள் காவல்துறை தலையிட்டு அவர்களை வெளியே கொண்டுபோய் விட்டுவந்தனர்.

 

sampooranam

 

உள்ளே சென்ற வேட்பாளர் சு.வெங்கடேசன் கூறுகையில், “மதுரை மருத்துவக் கல்லூரியில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் மூன்றடுக்கு பாதுகாப்பில் உள்ளது. இங்கு மதியம் பெண் அதிகாரி ஒருவர் மாவட்ட ஆட்சியரின் எந்தவித அதிகாரப்பூர்வமான அனுமதியும் இல்லாமல் அவராக உள்ளே வந்து மூன்றாவது மாடியில் உள்ள ஒரு அறைக்கு சென்று உள்ளே உள்ள ஆவணங்களை எடுத்து வெளியே உள்ள ஜெராக்ஸ் கடையில்  ஜெராக்ஸ் எடுத்துள்ளார். அவர் மூன்று மணி நேரம் உள்ளே இருந்துள்ளார். இந்த தகவல் அங்கிருக்கும் காவலர் ஒருவர் எனக்கு தகவல் தெரிவிக்கவே உடனே நான் ஆட்சியரிடம் தகவலை தெரிவித்தேன். ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து உயர் அதிகாரிகள் வந்து இவர் அதிகாரிதான் என்று சொல்லி விட்டு  அவரை அழைத்து சென்றுவிட்டனர். ஆனால் எந்தவித அதிகாரப்பூர்வ அனுமதியும் இல்லாமல் இவர் மூன்று மணி நேரத்திற்கு மேலாக இங்கே இருந்திருக்கிறார். எப்படி 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ள இடத்தில் ஆட்சியரின் அதிகாரபூர்வமான அனுமதி இல்லாமல் உள்ளே வந்தார். உள்ளே வந்து அவர் என்ன செய்தார் என்று எங்களுக்கு தெரியவேண்டும். எங்களுக்கு சிசிடிவி காட்சி வேண்டும். எப்போது வந்தார் எப்போது சென்றார் என தெரிய வேண்டும். ஆவணங்களை ஏன் ஜெராக்ஸ் எடுக்க வேண்டும் என்ற கேள்வியும் எழுந்துள்ளது. ஆவணங்களை ஏன் ஜெராக்ஸ் எடுக்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் வந்து நேரில் பதில் சொல்ல வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளோம். அதற்கு அவர் கட்டாயம் அந்த அதிகாரியிடம் விசாரித்து தகுந்த நடவடிக்கை எடுக்கபடும் என்று உறுதி அளித்தார். எல்லாம் பயந்தது போலவே நடந்துவிட்டது இன்னும் 32 நாட்கள் எப்படி தள்ளபோகிறோம் என்று பயமாக இருக்கிறது” என கூறினார்.

 

sampooranam

 

டேவிட்அண்ணாதுரையோ முதலில் சி.சி.டி.வி காட்சிகள் அழிந்துவிட்டது என்றார். பிரச்சனை பெரிசாக காட்சிகளை போட்டு காண்பித்தார். அந்த பெண் உள்ளே சென்று ஆவணங்கள் உள்ள அறையில் செல்வது, பின்பு மூன்றுமணிநேரம் கழித்து வெளியே வருவது. வரும்போது கையில் கட்டு கட்டாக ஆவணங்களுடன் வெளியே வரும் காட்சிகள் தெரிகின்றது. என் கேள்வி இதுதான் யார் சொல்லி அவர் உள்ளேவந்தார். எப்படி அவரை உள்ளேவிட்டார்கள். அதுமட்டுமின்றி அவர் வரும்போது யாருமே அவரை வழிமறிக்கவில்லை என்பது எங்களுக்கு சந்தேகத்தை அதிகரிக்கசெய்கிறது. இது சாதாரண விஷயம் இல்லை. ‘என்னமோ நடக்குது மர்மமா இருக்குது’ மோடி வித்தையை காண்பிக்க ஆரம்பித்துள்ளார் நாம்தான் கவனமாக இருக்க வேண்டும் என்றார்.



ஆட்சியர் நம்மிடம் தெரிவிக்கையில், “உதவி தேர்தல் அதிகாரி சம்பூர்ணம் ஓட்டு பெட்டி உள்ள அறைக்கு செல்லவில்லை. சீல் வைக்கபடாத ஆவணங்கள் உள்ள அறைக்குதான் சென்றுள்ளார்” என்று நம்மிடம் விளக்கம் அளித்துள்ளார். இதுகுறித்து தலைமை தேர்தல் கமிஷனுக்கு விளக்கமளித்துள்ளேன் என்றும் தெரிவித்துள்ளார். இதுகுறித்து தமிழக தேர்தல் தலைமை அதிகாரி சத்யபிரதா சாஹூ “சம்பூர்ணா என்ற பெண் அதிகாரியை இடைநீக்கம் செய்துள்ளோம். மேற்படி அவர் ஏன் அங்கு போனார், யார் சொல்லி எதற்காக பாதுகாக்கபட்ட இடத்திற்கு போனார். என்று தீவிரமாக விசாரித்து கொண்டு இருக்கிறோம்” என்றார்.

 

இந்நிலையில் திமுக தலைவர் ஸ்டாலின் “வாக்கு எண்ணிக்கைக்கு இன்னும் ஒரு மாதத்திற்கு மேல் இருக்கின்ற நிலையில், வாக்கு எண்ணிக்கை மையங்களில் உள்ள மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் பத்திரமாகவும் பாதுகாப்பாகவும் இருக்குமா? என்ற மிகப்பெரிய கேள்வி இப்போது எழுந்திருக்கிறது. காலையில் வாக்கு எண்ணிக்கை மையத்திற்குள் நுழைந்த அனைவர் மீதும், அதற்கு அனுமதி கொடுத்த அதிகாரிகள், நுழையவிட்டு பாதுகாப்பு கொடுத்தவர்கள் அனைவர் மீதும் கிரிமினல் வழக்குப் பதிவு செய்து கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். வாக்கு எண்ணும் மையங்களில் கழக நிர்வாகிகளும் கூட்டணிக் கட்சி நிர்வாகிகளும் இரவு பகல் பார்க்காமல் விழிப்புணர்வுடன் இருந்து, வாக்கு எண்ணிக்கை மையங்களைக் கைப்பற்ற நினைக்கும் அராஜக அதிமுக ஆட்சியிடமிருந்து மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களைப் பாதுகாக்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளார். எல்லோரும் பயந்த மாதிரியே நடக்குது. ஓட்டு மிஷினில் கைவைத்துவிடுவார்களோ என்று எதிர்க்கட்சியினரும் மக்களும் பேசுவது கேட்க தொடங்கியிருக்கிறது.
 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

கோவையில் ஜிபே மூலம் பாஜக பணப்பட்டுவாடா-திமுக புகார்

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
DMK complains about BJP payment through GPay in Coimbatore

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 21 மாநிலங்களில் உள்ள 102 மக்களவைத் தொகுதிகளுக்கு நாளை (19.04.2024) வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த வாக்குப்பதிவு காலை 7.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை நடைபெற உள்ளது. அதன்படி முதற்கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ள தொகுதிகளில் தேர்தல் பரப்புரை நேற்று (17.04.2024) மாலை 6 மணியுடன் நிறைவு பெற்றது. மேலும் இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது.

அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகத்திலும், புதுச்சேரியிலும் வாக்குப்பதிவு நடைபெற உள்ளதால் மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரை நேற்றுடன் ஓய்ந்தது. அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் கோவை தொகுதியில் பாஜகவினர் ஜிபே மூலம் பண பட்டுவாடா செய்வதாக புகார்கள் எழுந்துள்ளது. இதுகுறித்து திமுக புகார் எழுப்பியுள்ளது. பிரச்சாரம் முடிந்தவுடன் வெளியூர் நபர்கள் தொகுதியை விட்டு வெளியேற வேண்டும் என்ற நடைமுறையை பின்பற்றவில்லை என திமுக குற்றம் சாட்டியுள்ளது. கோவை அவிநாசி சாலையில் உள்ள அலுவலகத்தில் வெளி மாவட்டத்தைச் சேர்ந்த பலர் தங்கி ஜிபே மூலம் பணம் பட்டுவாடா செய்து பாஜகவுக்கு வாக்களிக்கும்படி கோரி வருகின்றனர் எனவும், சென்னையை சேர்ந்த ஜெயப்பிரகாஷ், கிருஷ்ணகுமார், கரூரை சேர்ந்த சிவகுமார் ஆகியோர் பணம் பட்டுவாடா செய்வதாகவும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் திமுக வலியுறுத்தியுள்ளது.

Next Story

“மகத்தான வெற்றியை ஈட்டுவோம்” - முதல்வர் மு.க. ஸ்டாலின்!

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
We will achieve great success says CM MK Stalin 

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 21 மாநிலங்களில் உள்ள 102 மக்களவைத் தொகுதிகளுக்கு நாளை (19.04.2024) வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த வாக்குப்பதிவு காலை 7.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை நடைபெற உள்ளது. அதன்படி முதற்கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ள தொகுதிகளில் தேர்தல் பரப்புரை நேற்று (17.04.2024) மாலை 6 மணியுடன் நிறைவு பெற்றது. மேலும் இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகத்திலும், புதுச்சேரியிலும் வாக்குப்பதிவு நடைபெற உள்ளதால் மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரை நேற்றுடன் ஓய்ந்தது.

இந்நிலையில் தமிழக முதல்வரும், திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின் திமுக சார்பில் வாக்குச்சாவடிகளில் பணியாற்றும் திமுக தொண்டர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில், “மொத்தம் 7 கட்டங்களாக நடைபெறவிருக்கும் இந்தியாவின் 18ஆவது நாடாளுமன்றப் பொதுத் தேர்தலின் முதல் கட்ட வாக்குப்பதிவு நடைபெறும் தமிழ்நாட்டின் 39 மக்களவைத் தொகுதிகளும் புதுச்சேரியின் ஒரு மக்களவைத் தொகுதியும் உள்ளடங்கிய 102 தொகுதிகளிலும் நடைபெறுகிறது. இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையம் நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலை அறிவித்த நாளிலிருந்து உடன்பிறப்புகளாம் நீங்கள் அனைவரும் களத்தில் இறங்கிப் பணியை மேற்கொண்டு, தோழமைக் கட்சியினருடன் ஒருங்கிணைந்து, மிகக் குறைந்த கால அவகாசத்திற்குள் வாக்காளர்களைச் சந்தித்து ஆதரவைப் பெற்று, வெற்றியை உறுதி செய்து, தேர்தல் பணியில் தி.மு.க.வினரை மிஞ்ச எவரும் கிடையாது என்பதை மீண்டும் ஒரு முறை நிரூபித்திருக்கிறீர்கள்.

மார்ச் 22ஆம் தேதி திருச்சியில் எழுச்சிகரமாகத் தொடங்கிய உங்களில் ஒருவனான என்னுடைய பரப்புரைப் பயணம் ஏப்ரல் 17 அன்று தமிழ்நாட்டின் தலைநகருக்குள் அடங்கிய தென்சென்னை - மத்திய சென்னை தொகுதிகளில் மக்களின் உணர்ச்சிகரமான முழக்கங்களுடன் நிறைவடைந்திருக்கிறது. நான் மிகுந்த நம்பிக்கையுடன் இருக்கிறேன். களத்தில் நமக்குக் கிடைத்துள்ள ஆதரவு, வாக்குகளாகப் பதிவாகி, வெற்றியாக வெளிப்படும் என்பதில் உறுதியுடன் இருக்கிறேன். அந்த நம்பிக்கையும் உறுதியும் நிறைவேற, வாக்குப்பதிவு நாளான ஏப்ரல் 19 அன்று கழகத்தினர் மிகுந்த கவனத்துடன் செயலாற்ற வேண்டும். அப்போதுதான், இத்தனை நாள் பாடுபட்டது பயன் தரும். 

We will achieve great success says CM MK Stalin 

தமிழ்நாட்டில் இந்தியா கூட்டணி வேட்பாளர்களின் வெற்றியை உறுதி செய்ய வேண்டிய கடமைக் கழகத் தொண்டர் ஒவ்வொருவருக்கும் இருக்கிறது. மாவட்டக் கழகச் செயலாளர்கள் தொடங்கி கிளைக் கழக நிர்வாகிகள் வரை தங்களுக்கான பணிகளைத் திட்டமிட்டுக்கொண்டு செயலாற்றுவதுடன், வாக்குச்சாவடிப் பணிகளில் ஈடுபடக்கூடிய பாக முகவர்கள், வாக்குச்சாவடி முகவர்கள், பூத் கமிட்டி உறுப்பினர்கள் உள்ளிட்டவர்கள்தான் வாக்குப்பதிவு நாளின் முன்களப் பணியாளர்கள். முழுமையான போர் வீரர்கள். இதில் வாக்குச்சாவடி முகவர்கள், மாற்று முகவர்கள் ஆகியோர் வாக்குப்பதிவு தொடங்கி நிறைவடையும் வரை விழிப்புடன் செயலாற்ற வேண்டிய பணியில் இருப்பதால், அவர்கள் கடைப்பிடிக்க வேண்டிய விதிமுறைகளை முழுமையாக அறிந்திருக்க வேண்டியது அவசியமாகும்.

அதற்கான பயிற்சியினை நமது கழகச் சட்டத்துறையின் உதவியுடன் ஏற்கனவே வழங்கியுள்ள நிலையில், வாக்குப்பதிவு நாளன்று மறக்காமல் மேற்கொள்ள வேண்டிய கடமைகளை நினைவூட்ட விரும்புகிறேன். காகித வாக்குச் சீட்டுக்குப் பதில், மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களில் பொதுமக்கள் வாக்களிப்பதால், நாம் பின்பற்ற வேண்டிய விதிமுறைகளும், கவனிக்க வேண்டிய நடைமுறைகளும் நிறைய உள்ளன. அவை நம் தி.மு.கழகத்தின் சட்டத்துறை சார்பில் மாவட்டக் கழகச் செயலாளர்கள் மூலமாக உங்களிடம் கையேடாக வழங்கப்பட்டிருக்கும். 

We will achieve great success says CM MK Stalin 

அவற்றைக் கவனத்தில் கொண்டு வாக்குச்சாவடி முகவர்கள் விழிப்போடு செயல்படவேண்டும். பாக முகவர்கள் உள்ளிட்ட கழகத்தின் தேர்தல் பணிகளை மேற்கொள்வோர் இவை ஒவ்வொன்றையும் உறுதி செய்யவேண்டும். வாக்குப்பதிவில் கடைப்பிடிக்க வேண்டிய நெறிமுறைகள் சரியாக அமைந்தால்தான் வாக்கு எண்ணிக்கையின்போது கழகக் கூட்டணியின் முழுமையான வெற்றி உறுதியாகும். விரைந்து களப்பணியாற்றி, வியர்வை சிந்தி விதைத்தவை அனைத்தும் அறுவடையாகும் நாள்தான் வாக்குப்பதிவு நாள். அதனால் மிகுந்த விழிப்புடன் பணியாற்றுங்கள். வாக்குரிமையை நிலைநாட்டுவோம். மகத்தான வெற்றியை ஈட்டுவோம்” எனத் தெரிவித்துள்ளார்.