Skip to main content

கூலிப்படை ரவுடி கொலை வழக்கில் மூளையாகச் செயல்பட்டவர் உள்பட 3 பேர் நீதிமன்றத்தில் சரண்! 

Published on 24/12/2021 | Edited on 24/12/2021

 

salem rowdy incident police investigation

 

சேலம் அருகே, கூலிப்படை ரவுடி கொலை வழக்கில் மூளையாகச் செயல்பட்டவர் உள்பட 3 பேர் நீதிமன்றத்தில் சரணடைந்தனர். 

 

சேலம் நாழிக்கல்பட்டியைச் சேர்ந்த பச்சியப்பன் மகன் வைரம் என்கிற திருநாவுக்கரசு (வயது 26). பெயிண்ட் அடிக்கும் தொழிலாளி. முந்தைய அ.தி.மு.க. ஆட்சியின்போது, அக்கட்சிக்கு கூலிப்படை ரவுடியாக செயல்பட்டு வந்தார். 

 

திருமணத்திற்குப் பிறகு தனது மனைவி ரம்யாவுடன் சேலம் அருகே உள்ள அயோத்தியாப்பட்டணத்தில் திருநாவுக்கரசு குடியேறி விட்டார். இந்நிலையில், டிசம்பர் 17- ஆம் தேதியன்று தனது மாமனார் சபரி மலைக்குச் செல்ல இருந்ததால்,  அவரை வழியனுப்பி வைப்பதற்காக சொந்த ஊரான நாழிக்கல்பட்டிக்குச் சென்றிருந்தார். 

 

அதே ஊரைச் சேர்ந்த தனது பழைய கூட்டாளியான சரவணன் என்பவருடன் ஒதுக்குப்புறமான இடத்தில் நின்று பேசிக்கொண்டு இருந்தார். அப்போது,  திடீரென்று அவர்களை 15 பேர் சுற்றி வளைத்து கல்லால் தாக்கியும், சூரிக்கத்தியாலும் தாக்கினர். இதில் திருநாவுக்கரசு உயிரிழந்தார். சரவணனுக்கு சேலம் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

 

இதுகுறித்து மல்லூர் காவல்நிலைய காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணையில், கடந்த 2019- ஆம் ஆண்டு, செப்டம்பர் மாதம் நடந்த விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தின்போது ஏற்பட்ட மோதலில், அதே ஊரைச் சேர்ந்த கல்லூரி மாணவர் திலீப்குமார் என்பவரை திருநாவுக்கரசுவும், அவருடைய கூட்டாளிகளான சரவணன், சூர்யா என்கிற மற்றொரு சரவணன் ஆகிய மூவரும் சேர்ந்து இரும்பு கம்பியால் குத்தியும், கல்லால் தாக்கியும் கொலை செய்தனர். 

 

இந்தக் கொலைக்கு பழிதீர்க்கும் நோக்கத்தில்தான் தற்போது திருநாவுக்கரசு கொலை செய்யப்பட்டிருப்பது தெரிய வந்துள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக இதுவரை தமிழன்பன் (வயது 35), தங்கவேல் (வயது 34), குமரேசன் (வயது 32) உள்பட 10 பேரை காவல்துறையினர் கைது செய்து, சிறைகளில் அடைத்துள்ளனர். இவர்களில், 17 வயதான இரண்டு சிறுவர்களும் உள்ளனர். 

 

இந்நிலையில், இந்தக் கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த சிவா என்கிற பரமசிவம் (வயது 25), ரஞ்சித்குமார் (வயது 25), விக்னேஷ் (வயது 25) ஆகிய மூவரும் டிச. 22- ஆம் தேதி, சேலம் நீதிமன்றத்தில் சரணடைந்தனர். நீதிமன்ற உத்தரவின்பேரில் மூவரும் ஓமலூர் கிளைச்சிறையில் அடைக்கப்பட்டனர். 

 

திருநாவுக்கரசு கொலை வழக்கில் இதுவரை 13 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். இதில் மேலும் சிலருக்கு தொடர்பு இருப்பது தெரிய வந்துள்ளது. அவர்களை தனிப்படை காவல்துறையினர் தேடி வருகின்றனர். 

 

மேலும், நீதிமன்றத்தில் சரணடைந்தவர்களுள் சிவா என்கிற பரமசிவம்தான் இந்த கொலையில் மூளையாக செயல்பட்டிருப்பது தெரிய வந்துள்ளது. சரணடைந்தவர்களை காவலில் எடுத்து விசாரிக்கவும் காவல்துறையினர் திட்டமிட்டுள்ளனர். 


 

சார்ந்த செய்திகள்

Next Story

தங்கைக்கு டி.வி, மோதிரம் வழங்க விரும்பிய அண்ணன்; கடைசியில் நேர்ந்த சோகம்!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
incident happened on Brother wanted to give TV, ring to younger sister

உத்திரபிரதேச மாநிலம் பாரபங்கி அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்தவர் சந்திர பிரகாஷ் மிஸ்ரா (35). இவரது மனைவி சாபி. மிஸ்ராவுக்கு திருமணமாகாத தங்கை ஒருவர் இருந்தார்.

இந்த நிலையில், மிஸ்ராவின் தங்கைக்கு வருகிற 26ஆம் தேதி திருமணம் நடைபெற இருந்தது. தன் தங்கையின் திருமணத்திற்காக தங்க மோதிரம், டி.வி உள்ளிட்ட பொருட்களை வழங்க மிஸ்ரா விருப்பப்பட்டார். இந்த முடிவை மிஸ்ரா தனது மனைவி சாபியிடம் தெரிவித்துள்ளார். ஆனால், அதற்கு சாபி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதனால், இவர்கள் இருவருக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. 

இதில் ஆத்திரமடைந்த சாபி, தனது கணவரை பழிவாங்க வேண்டும் என்பதற்காக தனது சகோதர்களை அழைத்ததாகக் கூறப்படுகிறது. அதன் பேரில், அங்கு வந்த அவர்கள், இது குறித்து மிஸ்ராவிடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். ஆனால், அந்தப் பேச்சுவார்த்தை ஒரு கட்டத்தில் தகராறில் முடிந்துள்ளது. இதில், சாமியின் சகோதரர்கள், மிஸ்ராவை கம்பு உள்ளிட்ட ஆயுதங்களால் கடுமையாகத் தாக்கியுள்ளனர். இதில் மிஸ்ரா படுகாயமடைந்ததால் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால், அங்கு அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். 

இதனையடுத்து, இந்தச் சம்பவம் குறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார், வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். மேலும் மிஸ்ராவை கொலை செய்த மனைவி சாபி உள்ளிட்ட 5 பேரை கைது செய்து  விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Next Story

தடுப்பணையில் குளிக்கச் சென்ற சிறுவர்களுக்கு நேர்ந்த சோகம்!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Incident happened to the boys who went to dig in the dam

கோவை மாவட்டம், ஆனைமலை அருகே குரங்கு நீர்வீழ்ச்சி, அறிவுத்திருக்கோவில், ஆழியார் பூங்கா, வால்பாறை உள்ளிட்ட பல்வேறு சுற்றுலாத் தலங்கள் உள்ளன. கோடை காலத்தின் போது, இந்தச் சுற்றுலா தலங்களுக்குப் பல்வேறு பகுதிகளில் இருந்து சுற்றுலாப் பயணிகள் வருகை தந்து தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்துவது வழக்கம். 

இந்த நிலையில், குரங்கு நீர்வீழ்ச்சி தடுப்பணையில் பிரவீன் (17), தக்சன் (17), கவீன் (16) ஆகிய மூன்று பள்ளி சிறுவர்கள் குளிக்கச் சென்றுள்ளனர். அப்போது, அங்கு அவர்கள் தடுப்பணையின் ஆழமான இடத்திற்கு சென்ற போது, மூவரும் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். பள்ளி மாணவர்கள் நீரில் மூழ்கி இறந்த சம்பவம் தொடர்பாக போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. 

தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார், பலியான மூவரின் உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்தச் சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தடுப்பணையில் பள்ளி மாணவர்கள் மூவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.