Skip to main content

மூன்று நாட்களாக நகராட்சி குடிநீர் தொட்டியில் அழுகிய சடலம்!!

Published on 09/01/2019 | Edited on 09/01/2019

 

 The rotten body in the municipal drinking water tank for three days !!

 

ராமநாதபுரம் நகராட்சியில் உள்ள ஒரு நீர் தேக்க தொட்டியில் ஆண் நபரின் சடலம் ஒன்று கண்டெடுக்கப்பட்டதை அடுத்து அப்பகுதியில் குடிநீர் சேவை நிறுத்தபட்டுள்ளது.

 

ராமநாதபுரம் தலைமை அரசு மருத்துவமனைக்கு அருகில் உள்ள வருவாய்க்கோட்ட ஆட்சியர் அலுவகத்திற்கு எதிரே அமைந்துள்ள நகராட்சி நீர் தேக்கத்தொட்டியில் நேற்று குடிநீர் திறக்க வந்த ஊழியர் தண்ணீர் திறந்துள்ளார். அப்போது நீரில் துறுநாற்றம் வீசியுள்ளது. ஆனால் நீர்த்தேக்க தொட்டியை திறந்து பார்க்காமல் ஊழியர் சென்றுவிட்டார். அதேபோல் இன்று தண்ணீர் திறக்க வந்தபொழுது தண்ணீரில் அதிகப்படியான துர்நாற்றம் வீச ஊழியர் உயர் அதிகாரிகளுக்கு புகார் தெரிவிக்க சம்பவ இடத்திற்கு வந்த அதிகாரிகள் நீர் தேக்க தொட்டியின் மீது ஏறி சோதனை செய்தபோது ஒரு ஜோடி செருப்பும் ரத்தக்கறையும், பிளேடு துண்டுகளும் இருந்ததை கண்டு அதிர்ந்தனர், மேலும்  தொட்டிக்குள் ஏதேனும் பொருள் அல்லது சடலம் உள்ளதா என தொட்டியை திறந்து பார்த்தபோது சுமார் 34 வயது மதிக்கத்தக்க ஆணின் சடலம் இருந்ததை கண்டு அதிர்ந்தனர். 

 

 

 The rotten body in the municipal drinking water tank for three days !!

 

 The rotten body in the municipal drinking water tank for three days !!

 

மூன்று நாட்களாக அழுகிய நிலையில் கிடந்த சடலத்தை மீட்ட தீயணைப்பு துறையினர் உடலை பிரேதபரிசோதனைக்கு அனுப்பிவைத்துள்ளனர். இதனால் உடனடியாக ராமநாதபுரம் நகராட்சிக்கு விநியோகிக்கப்பட்டு வந்த குடிநீர் சேவையை நிறுத்தினர். குடிநீர் தொட்டியில் ஆண் சடலம் மிதந்ததால் அப்பகுதியில் பெரும்பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

 

கடந்த இரண்டு நாட்களில் அந்த குறிப்பிட்ட நீர் தேக்க தொட்டியிலிருந்து விநியோகிக்கப்பட்ட குடிநீரை  பொதுமக்கள் வைத்திருந்தால் அவற்றை அப்புறப்படுத்தவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.   

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

ஆண் நண்பருடன் சேர்ந்து கணவனைக் கொன்ற மனைவி; பகீர் கிளப்பும் பின்னணி

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
wife who incident her husband along with her boyfriend

ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகே வசிப்பவர்கள் ஸ்ரீகாந்த் - ஆர்த்தி தம்பதியினர். இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். இந்த நிலையில் ஆர்த்திக்கு ஸ்ரீகாந்தின் நண்பர் இளையராஜாவுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. நாளடைவில் அந்த பழக்கம் திருமணத்தை மீறிய உறவாக மாறி உள்ளது.

இது குறித்த தகவல் ஸ்ரீகாந்துக்கு தெரிய வர இருவரையும் அழைத்து கடுமையாக எச்சரித்துள்ளார். இந்த நிலையில் திருமணத்தை மீறிய உறவிற்கு இடையூறாக இருக்கும் கணவன் ஸ்ரீகாந்தை கொல்ல இளையராஜாவுடன் ஆர்த்தி திட்டமிட்டுள்ளார்.  அதன் படி கடந்த 2021 ஆம் ஆண்டு தேவகோட்டை அருகே உள்ள அருகே உள்ள ஆள் நடமாட்டம் இல்லாத காட்டு பகுதிக்கு இளையராஜா ஸ்ரீகாந்தை அழைத்துச் சென்று மது குடிக்க வைத்து அவரை வெட்டிக்கொன்று புதைத்துள்ளார். ஆனால் மனைவி ஆர்த்தி தனது கணவர் குடும்ப பிரச்சனை காரணமாக கோபித்துக் கொண்டு வீட்டை விட்டு வெளியேறியதாக குடும்பத்தாரிடமும் அக்கம்பக்கத்தினரிடமும் நாடகமாடி உள்ளார்.

இந்த நிலையில் இரண்டரை வருடம் கழித்து ஸ்ரீகாந்த் கொலை செய்யப்பட்டது குறித்த தகவல் போலீசாருக்கு கிடைத்துள்ளது. அதன் பெயரில் விசாரணையை தொடங்கிய போலீஸ் மனைவி ஆர்த்தியையும், இளையராஜாவையும் கைது செய்தனர். மேலும் இந்த சம்பவத்தில் இளையராஜாவின் நண்பர் ஒருவருக்கும் தொடர்பு இருப்பது தெரிய வந்தது. அவரையும் கைது செய்தனர். மேலும் இந்தக் கொலை தொடர்பாக தலைமறைவாக இருக்கும் இருவரை போலீஸ் தேடி வருகின்றனர்.

Next Story

'தண்ணிக்காக நாங்க எங்கே போவோம்'-காலி குடத்துடன் மக்கள் போராட்டம்

Published on 21/04/2024 | Edited on 21/04/2024
'Where shall we go for water'-people protest with empty jugs

பெரம்பலூர் மாவட்டம் குன்னம் பகுதியில் குடிநீர் வராததால் பொதுமக்கள் காலி குடங்களுடன் சாலையில் போராட்டத்தில் ஈடுபட்டது பரபரப்பை ஏற்படுத்தியது.

பெரம்பலூர் மாவட்டம் குன்னம் வட்டம் வேப்பூர் ஒன்றியத்தில் உள்ள கீரனூர் கிராம மக்கள் இரண்டு வருடமாகவே தண்ணீர் வரவில்லை என குற்றச்சாட்டு தெரிவித்துள்ளனர். 'கடந்த ஆறு மாதமாக தண்ணீர் இல்லாமல் அவதிப்படுவதாகவும் தெரிவித்தனர். ஒரு குடும்பத்திற்கு இரண்டு குடம் தண்ணீர் மட்டும் தான் கிடைக்கிறது. எங்கள் ஊரில் மின்சார வசதி இல்லை, ரோடு வசதி இல்லை இது தொடர்பாக பஞ்சாயத்தில் உள்ளவர்கள் எந்த நடவடிக்கையும் எடுக்க மாட்டேன் என்கிறார்கள். நாங்கள் என்ன செய்வது. தண்ணிக்காக நாங்கள் எங்கே போவோம்' என காலி  குடங்களுடன் சாலையில் நின்றபடி தங்களது ஆதங்கத்தை வெளிப்படுத்தினர்.