Skip to main content

பிரிட்டிஷ் கொண்டுவந்த ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் வேண்டாம்... டி.ஏ.எஸ், டி.பி.எஸ் கொண்டுவாங்க'' -பெ.மணியரசன் பேச்சு!

Published on 06/07/2022 | Edited on 06/07/2022

 

Do not bring IAS, IPS brought by the British... Bring TAS, TPS'' - P. Maniyarasan speech!

 

தமிழக வேலைவாய்ப்புகளில் வடமாநிலத்தவரை திணிக்கக் கூடாது, தமிழர்களுக்கே வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஜூலை 11 ஆம் தேதி கோவையில் நடைபெறவுள்ள முற்றுகை போராட்டம் குறித்த விளக்க பொதுக்கூட்டம் கடலூர் மாவட்டம் விருத்தாசலம் வானொலி திடலில் தமிழ்த் தேசிய பேரியக்கம் சார்பில் நடைபெற்றது. தமிழ்த் தேசியப் பேரியக்க தலைமைச் செயற்குழு உறுப்பினர் மணிமாறன் தலைமையில் நடைபெற்ற அக்கூட்டத்தில் தமிழ்த் தேசிய பேரியக்கத் தலைவர் பெ.மணியரசன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.

 

பின்னர் செய்தியாளர்களுக்கு நேர்காணல் அளித்த தமிழ்த் தேசிய பேரியக்கத் தலைவர் பெ.மணியரசன், "தமிழ்நாட்டில் உள்ள இந்திய அரசு நிறுவன அலுவலகங்கள் மற்றும் தனியார் நிறுவனங்களில் வட மாநிலத்தோருக்கே வேலை வழங்கப்படுகிறது. பிற மாநிலங்களில் அம்மாநிலத்தில் உள்ளவர்களுக்கு வேலை வழங்க சட்டம் உள்ளது போல், தமிழகத்திலும் இந்திய அரசு நிறுவனங்கள் மற்றும் தனியார் நிறுவனங்களில் 90 விழுக்காடு தமிழர்களுக்கே வேலை வழங்க வேண்டும், தமிழ்நாடு அரசு துறையில் நூறு விழுக்காடு தமிழர்களுக்கே வழங்க வேண்டும் என்பவற்றுக்கான சட்டம் இயற்றப்பட வேண்டும்.

 

Do not bring IAS, IPS brought by the British... Bring TAS, TPS'' - P. Maniyarasan speech!

 

தமிழ்நாட்டில் உள்ள இந்திய அரசு நிறுவனங்களுக்கான பணி தேர்வை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலமே நடத்த வேண்டும், இந்திய அரசு தேர்வாணையம் நடத்தக்கூடாது. இந்திய அரசு தேர்வாணையத்தின் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவதால், அஞ்சல் துறை மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் தமிழர்கள் இடம்பெறுவதில்லை. திட்டமிட்டு தமிழர்கள் புறக்கணிக்கப்படுகிறார்கள். பொதுத்துறை நிறுவனங்கள் தொடங்கப்பட்ட காலகட்டத்தில், அந்தந்த மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் மூலம் ஆட்கள் எடுக்கப்பட்ட நிலையில், தற்போது கோச்சிங் சென்டர் மூலமாகவும், ஆள்மாறாட்டம் செய்தும் வடமாநிலத்தவர்கள் தமிழகத்தில் பணிபுரிந்து வருகிறார்கள். இந்திய முழுவதும் பொதுத் தேர்வில் பல்வேறு முறைகேடுகள் நடப்பதால் தமிழர்கள் வஞ்சிக்கப்படுகின்றனர். தமிழ்நாட்டில் வெளிநாட்டு நிறுவனங்கள், வடமாநில நிறுவனங்கள் அதிக அளவில் உள்ளன. மிகக் குறைந்த அளவே தமிழர்கள் நிறுவனங்கள் வைத்துள்ளதால் தொழில் முனையும் தமிழர்களை அரசு ஊக்குவிக்க வேண்டும். பிற நாடுகளில் உள்ளது போல், வெளிநாட்டு நிறுவனங்கள் தமிழகத்தில் ஆரம்பிக்கப்பட்டால், அந்நிறுவனத்தில் தமிழர்கள் 50 சதவீதம் மூலதனமாக சேர்க்கப்பட்டால் மட்டுமே உரிமை வழங்க தமிழக அரசு உத்தரவு பிறப்பிக்க வேண்டும்.  

 

வட கிழக்கு மாகாணங்களான, நாகலாந்து, அருணாச்சல பிரதேசம், மணிப்பூர் மாநிலங்களில் இருப்பதுபோல் வெளி மாநிலத்தவர்கள் உள் நுழைவுக்கான அனுமதி வழங்கும் அதிகாரத்தைத் தமிழ்நாடு அரசுக்கு வழங்க வேண்டும். தமிழக அரசு அனுமதி வழங்கும் அதிகாரத்தை கேட்டுப்பெற வேண்டும். தமிழ்நாடு அரசு பணி தருவோர் - பணி பெறுவோர் வாரியம் அமைத்து தமிழ்நாட்டில், தொழில் முனைவோருக்கு தொழிலாளர்கள் கிடைக்கும் வகையிலும் இளைஞர்களுக்கு வேலை கிடைக்கும் வகையில் சட்டப்படியான முகவாண்மையை உருவாக்க வேண்டும்.

 

Do not bring IAS, IPS brought by the British... Bring TAS, TPS'' - P. Maniyarasan speech!

 

திமுக அரசு கொடுத்த தேர்தல் வாக்குறுதியில் 75 சதவீத விழுக்காடு தமிழர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கப்படும் என்று கூறியதை நிறைவேற்றவில்லை. தமிழகத்தில் உள்ள சிறு, குறு தொழில் முனைவோர்களை ஊக்குவிக்காமல், வெளிநாட்டு நிறுவனங்கள் மற்றும் வட மாநில நிறுவனங்களுக்கு முன்னுரிமை அளிக்கிறது. மேலும் தமிழகத்தில் வட மாநிலத்தவர்கள் அதிகளவில் குற்றச்சம்பவங்களில் ஈடுபடுவதால் பொதுமக்கள் பெரும் அச்சத்தில் உள்ளனர். அதை தடுக்கும் வகையில் தமிழக அரசு உள்நாட்டு நுழைவு அனுமதி (inner line permit) அதிகாரத்தைக் கொண்டு வர வேண்டும். தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் வட மாநில உயர் அதிகாரிகள் இருப்பதால், மொழி தெரியாமல் நிர்வாக கோளாறுகள் ஏற்படுகிறது. எனவே பிரிட்டிஷ் காலத்தில் கொண்டுவரப்பட்ட ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் என்ற பிரிவே இருக்கக் கூடாது. தமிழ்நாடு பொதுத் தேர்வு வாரியம் அமைத்து டி.ஏ.எஸ், டி.பி.எஸ் போன்ற உயர் அதிகாரிகளைத் தேர்வு செய்ய வேண்டும் என தமிழ்த் தேசிய பேரியக்கம் வலியுறுத்தி வருகிறது.

 

இந்த கோரிக்கைகளை முன்வைத்து வருகின்ற ஜூலை 11ஆம் தேதி கோவை மாவட்டத்தில் உள்ள தமிழ்நாடு அஞ்சல் துறை மேற்கு மண்டல தலைமையகத்தினை தமிழ்த் தேசிய பேரியக்கம் சார்பில் மாபெரும் முற்றுகையிடும் போராட்டம் நடைபெற உள்ளது" என்றார்.

 

முன்னதாக திருவள்ளுவர் கலைக்குழுவின் தப்பாட்ட கலை நிகழ்ச்சி நடைபெற்றது.

 

Do not bring IAS, IPS brought by the British... Bring TAS, TPS'' - P. Maniyarasan speech!

 

இந்நிகழ்வுகளில் தமிழ்த் தேசிய பேரியக்க மாநில துணைத் தலைவர் க.முருகன், தலைமைச் செயற்குழு உறுப்பினர் வேல்சாமி, மகளிர் ஆயம் பொதுச்செயலாளர் வழக்குரைஞர் மு.செந்தமிழ்ச்செல்வி, மகளிர் ஆயம் பொருளாளர் ம.கனிமொழி, அமைப்புக்குழு உறுப்பினர் மு.வித்யா, தெய்வத் தமிழ்ப்பேரவை கடலூர் மாவட்ட பொறுப்பாளர் சுப்ரமணியசிவா, பொதுக்குழு உறுப்பினர்கள் சிதம்பரம் ஆ.குபேரன், பி.வேல்முருகன், த.சக்திவேல், மகளிர் ஆயம் செயற்குழு உறுப்பினர் வே.தமிழ்மொழி, திருவள்ளுவர் தமிழர் மன்ற செயலாளர் தி.ஞானப்பிரகாசம் ஆகியோர் கருத்துரை வழங்கினர்.

 


 

சார்ந்த செய்திகள்

Next Story

திமுக பிரமுகர் மீது  துப்பாக்கிச் சூடு; ஓ.பி.எஸ் அணி பொறுப்பாளர் உட்பட 6 பேர் கைது! 

Published on 09/09/2023 | Edited on 09/09/2023

 

6 people arrested in Virudhachalam DMK member case
இளையராஜா

 

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அடுத்த மணவாளநல்லூர் கிராமத்தைச் சேர்ந்த காங்கிரஸ் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் மறைந்த தியாகராஜன் மகன் இளையராஜா(45). தி.மு.க பிரமுகரான இவர் உதயநிதி ஸ்டாலின் நற்பணி மன்ற முன்னாள் மாவட்ட பொறுப்பாளராவார். மேலும் வள்ளலார் குடில் என்ற ஆதரவற்ற முதியோர், குழந்தைகள் இல்லத்தை நடத்தி வருவதுடன் இயற்கை விவசாயம் செய்து, அது குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகளையும் நடத்தி வருகிறார்.  

 

இந்நிலையில் நேற்று மாலை, இளையராஜா நாளை(10 ஆம் தேதி) நடைபெற உள்ள இயற்கை விவசாயம் சார்ந்த நிகழ்ச்சி ஏற்பாட்டிற்காக கொளஞ்சியப்பர் கோவில் அருகே உள்ள தனது சொந்த நிலத்தில் வேளாண் அதிகாரிகளுடன் ஆலோசனை செய்தார். அது முடிந்து அதிகாரிகள் கிளம்பிச் சென்ற பிறகு மாலை 5.30 மணியளவில் தானும் கிளம்புவதற்காக காருக்கு அருகே வந்துள்ளார். அப்போது 3 மோட்டார் சைக்கிள்களில் 6 பேர் கொண்ட கும்பல் அங்கு வந்தது. அவர்களைப் பார்த்ததும் இளையராஜா வேக வேகமாக காருக்குச் சென்று ஏற முயன்றார். அப்போது அந்த கும்பலில் இருந்த ஒருவர்  இளையராஜாவை நோக்கி துப்பாக்கியால் சுட, அந்த குண்டு இளையராஜாவின் பின்பக்கமாக இடுப்பு பகுதியில் பாய்ந்தது. உடனே சுதாரித்துக் கொண்ட இளையராஜா, அங்கிருந்து தப்பிப்பதற்காக காரில் ஏறி, கதவைப் பூட்டிக்கொண்டு காரை இயக்க முற்பட்டபோது, அந்த கும்பலைச் சேர்ந்த மற்றொருவர் கைத்துப்பாக்கியால் காரின் முன்பக்க கண்ணாடி வழியாகச் சுடவே, அந்த குண்டு கார் கண்ணாடியைத் துளைத்தது. கண்ணாடிகள் உடைந்து அவரது கழுத்தில், மார்பில் படவே இரத்தம் பீரிட்டு வெளியேறியது. மேலும் அந்த கும்பல் இரண்டு முறை காரை நோக்கி துப்பாக்கியால் சுட்டுவிட்டுத் தப்பிச் சென்றது. இளையராஜாவும் வேக வேகமாக காரை ஓட்டிக்கொண்டு விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு வந்து சேர்ந்தார்.

 

அதனைத் தொடர்ந்து உறவினர்கள் மற்றும் விருத்தாசலம் போலீசாருக்குத் தகவல் கிடைத்ததன் பேரில், அங்கு விரைந்து சென்ற டி.எஸ்.பி ஆரோக்யராஜ், இன்ஸ்பெக்டர் முருகேசன் மற்றும் போலீசார் சம்பவம் குறித்து விசாரணை நடத்தினர். அப்போது போலீசாரிடம் இளையராஜா, “இயற்கை வேளாண்மை நிகழ்ச்சிக்காக வேளாண் அதிகாரிகளிடம் பேசிவிட்டு அவர்களை அனுப்பிவிட்டு நானும் வீட்டிற்கு புறப்பட தயாரானேன். அப்போது ஆடலரசன், புகழேந்தி உள்ளிட்ட 6 பேர் மூன்று பைக்கில் வந்தனர். ஆடலரசன் தனது இடுப்பில் வைத்திருந்த துப்பாக்கியை எடுத்தார். இதை பார்த்து நான் அருகில் இருந்த எனது காரில் ஏறி தப்பிக்க முயன்றேன். அதற்குள் புகழேந்தி துப்பாக்கியால் சுட்டார். ஆடலரசின் கையிலும் துப்பாக்கி இருந்தது. நான் காருக்குள்ளே சென்று கார் கதவை மூடியதும் என்னை நோக்கி ஓடி வந்த ஒருவர் கார் கண்ணாடி வழியாக மீண்டும் என் மீது துப்பாக்கியால் சுட்டார். இதனால் எனக்கு கழுத்து, தோள்பட்டை பகுதியில் காயம் ஏற்பட்டது. இதே கும்பல் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு கத்தி அரிவாளுடன் பொன்னேரி - சித்தலூர் பைபாஸில் வழிமறித்து தாக்கிக் கொலை செய்வதற்கு முயற்சித்தனர். இது குறித்து விருத்தாசலம் காவல்நிலையத்தில் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் இல்லை” எனத் தெரிவித்தார். 

 

6 people arrested in Virudhachalam DMK member case
புகழேந்தி மற்றும் ஆடலரசு

 

இளையராஜா அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் துப்பாக்கிச் சூடு நடத்தியவர்கள் குறித்தும், அவர்களுக்குத் துப்பாக்கி எப்படி கிடைத்தது என்றும் போலீசார் தீவிரமாக விசாரித்தனர். அதனைத் தொடர்ந்து மணவாளநல்லூர் கிராமத்தைச் சேர்ந்த ராஜசேகரின் மகனும் ஓ.பி.எஸ் அணியின் தகவல் தொழில்நுட்ப பிரிவு மாவட்டச் செயலாளருமான புகழேந்தி, அவரது தம்பி ஆடலரசு மற்றும் அடையாளம் தெரியாத 4 பேர் மீது கொலை முயற்சி, உள்ளிட்ட 7 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து, 3 தனிப்படைகள் அமைத்து தீவிரமாகத் தேடினர். மேலும் கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜாராம் சம்பவ இடத்திற்கு நேரில் வந்து விசாரணை நடத்தினார். இதனிடையே இன்று அதிகாலை கடலூர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் ராஜசேகரை பார்ப்பதற்காக அவரது மகன்கள் புகழேந்தி, ஆடலரசு ஆகியோர் வந்தபோது போலீசார் அவர்களை மடக்கிப் பிடித்து விசாரணைக்காக விருத்தாசலம் அடுத்த ஆலடி காவல்நிலையத்துக்கு அழைத்து வந்தனர்

 

விசாரணையில் புகழேந்தி மற்றும் ஆடலரசு ஆகியோருக்கும், இளையராஜாவுக்கும் முன்விரோதம் இருந்து வந்தது. அதன் காரணமாக இளையராஜாவை கொலை செய்யும் நோக்கத்தில் 2 கள்ளத் துப்பாக்கிகளை வாங்கி வந்த புகழேந்தி, ஆடலரசன் மற்றும் இவர்களின் கூட்டாளிகள் பாளையங்கோட்டை விஜயகுமார், விருத்தாசலம் சரவணன், மதுரை சூர்யா, விருத்தாசலம் வெங்கடேசன் ஆகிய 6 பேரையும் விருத்தாசலம் அடுத்த ஆலடி காவல் நிலையத்திற்கு கொண்டு வந்து விசாரணை மேற்கொண்டனர். அவர்களிடமிருந்து 2 கள்ள கைத்துப்பாக்கிகளையும் போலீசார் பறிமுதல்  செய்தனர். 6 பேரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

 

 

Next Story

'இவர்கள் எங்களை ஆதரிக்கிறார்கள் என்பதே போதுமானது'' - முதல்வர் மு.க. ஸ்டாலின் பேச்சு 

Published on 24/08/2023 | Edited on 24/08/2023

 

"It is enough that the Dharmapura Adheena Kurumaka Sannithans support us" - Principal M.K.Stal's speech

 

மயிலாடுதுறையில் தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான தருமபுரம் ஆதீன கலைக் கல்லூரியில் 75 வது பவளவிழாவின் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டார். விழாவில் பேசிய தமிழக முதல்வர், 'ஆலயங்களில் அன்னைத் தமிழ்; மூவாயிரம் கோடி ரூபாய் மதிப்பில் கோயில் நகைகள் மீட்பு; அறநிலையத்துறை சார்பில் 10 கலை கல்லூரிகள்; கோவில் திருப்பணிகளை ஒருங்கிணைக்க குழு; இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் உள்ள பழமையான கோவில்களை பழமை மாறாமல் சீர் செய்து குடமுழுக்கு நடத்த உத்தரவு; திருக்கோவில் பணிகள் மேற்கொள்ள மண்டல மாநில அளவிலான வல்லுநர் குழு; தற்போது வரை 3,986 திருக்கோயில்களில் திருப்பணிகள் மேற்கொள்வதற்காக வல்லுநர் குழுவால் அனுமதி; ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட பழமையான வரலாற்று சிறப்புமிக்க நூற்றுப் பன்னிரண்டு திருக்கோவில்களை பழமை மாறாமல் சீர் செய்ய 100 கோடி ரூபாய் ஒதுக்கீடு என இந்த நிதியாண்டில் மட்டும் 5,078 திருக்கோவில்களின் திருப்பணிகள் மூலம் இந்து சமய அறநிலையத்துறையைக் காத்து வரும் ஆட்சிதான் திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஆட்சி. இதனை மக்கள் அறிவார்கள். அறிவது மட்டுமல்ல வாழ்த்திக்கொண்டும் இருக்கிறார்கள்.

 

நீதிபதிகளே அறநிலையத்துறைக்கு நாம் ஆற்றும் பணிகளைப் பார்த்து வியந்து பாராட்டிக் கொண்டிருக்கிறார்கள். தமிழ் மொழி, தமிழர்கள், தமிழ்நாடு என்ற மாநிலம் காப்பாற்றப்பட வேண்டும். வீர முத்துவேல் போன்ற அறிவியலாளர்களை எடுத்துக்காட்டாக கொள்ள வேண்டும். அனைவரும் தமிழ்த்தாயின் பிள்ளைகள் என்ற நோக்கத்தோடு செயல்படுவதற்கான உணர்வை தர வேண்டும். மாணவர்களின் பசியாற்றும் காலை உணவுத் திட்டம் தமிழ்நாடு முழுவதும் விரிவாக்கம் செய்யப்பட இருக்கிறது. அப்படி விரிவாக்கம் செய்யப்படக்கூடிய திட்டத்தை கலைஞர் படித்த திருக்குவளை பள்ளியில் இருந்து நான் தொடங்கி வைத்திருக்கிறேன். 'வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன்' என்ற வள்ளலாரின் ஏக்கத்தைப் போக்கும் வகையிலான மக்களுக்கான திட்டம் தான் காலை உணவுத் திட்டம். அனைத்து நன்மைகளும் அனைவருக்கும் கிடைக்கக் கூடாது என்ற ஒரு கூட்டம் தான் எங்களுக்கு எதிரான பரப்புரையில் ஈடுபடுகிறது. அதைப் பற்றி எனக்கு கவலை இல்லை. தர்மபுர ஆதீனம் போன்ற நல்லிணக்கத்தை விரும்பும் சகோதரத்துவத்தை விரும்பும் குருமகா சன்னிதானங்கள் எங்களை ஆதரிக்கிறார்கள் என்பதே எங்களுக்குப் போதுமானது'' என்றார்.